எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சேவூர் சாலை கொங்கு கலையரங்கத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கான மாவட்ட அளவிலான இரண்டு நாள் வாழை சாகுபடி கருத்தரங்கினை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
3000ஹெக்டர் வாழை சாகுபடி
தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு வகையான திட்டங்களில் சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டமும் ஒன்று ஆகும. சராசரியாக நமது மாவட்டத்தில் ஆண்டிற்கு 3000 ஹெக்டர் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. பலவிதமான பழப்பயிர்களில் முக்கனிகளில் மூன்றாவதாக திகழும் வாழை பயிர் சாகுபடியை பரவலாக நீர் வசதி உள்ள விவசாயிகள் மட்டும் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் வாழை சாகுபடிக்கு அதிக நீர் செலுத்துவதும் மண்வளம் அறியாது உரம் இடுவதும், தரமான கன்றுகளை தேர்வு செய்யாமல் இருப்பதும் குறைந்த மகசூலுக்கு காரணமாக அமைகின்றது. வாழையில் பலவித இரகங்கள் இருந்தாலும் திட்டமிட்டு திசு வாழை கன்றுகளை நடுவதே சிறந்தது.
ஆண்டு தோறும்
அவிநாசி வட்டாரத்தில் சராசரி ஆண்டு தோறும் 2,750 ஏக்கர் பரப்பில் சிறு விவசாயிகள் அதிகம் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டருக்கு ரூ.37,500/- மதிப்புள்ள திசு வாழை கன்றுகள் மானியமாக வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் இப்பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழக அரசின் முக்கிய அங்கமான தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக் கழகம் மூலமாக பலவித ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வாழை சாகுபடியாளர்களுக்கு தொழில் நுட்பங்களை ஒன்று சேர கிடைப்பதற்காகவே இவ்வாழை சாகுபடி கருத்தரங்கு இங்கு நடைபெறுகிறது. இங்கு திரளாக வந்திருக்கும் அனைத்து விவசாயிகளும் தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக் கழக விஞ்ஞானிகளின் உறையை கவனமாக கேட்டு பயன் பெற வேண்டும். கருத்துக் காட்சிகளில் அளிக்கப்பட்டுள்ள விபரங்களை குறித்துக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.
இயற்கை வேளாண் உற்பத்தி
இக்கருத்தரங்கில் பலராலும் கையாளத்தக்க பலவித உத்திகள் பற்றி எடுத்துரைக்கப்பட உள்ளன. குறிப்பாக மண்பரிசோதனை, நிலம் தயாரிப்பு, இயற்கை உரம் அளித்தல், காற்று தடுப்பு ஏற்பாடு, உரிய ஆழத்தில் நடவு, போதிய பயிர்கள் எண்ணிக்கை, ஊடு பயிர், வரப்பு பயிர், காப்பு பயிர் சாகுபடி, பயிர் பாதுகாப்பு உத்திகள், இயற்கை வேளாண் உத்திகளால் வாழையின் தரம் அதிகரித்தல், சரியான கன்று தேர்வு, நுண்ணீர் பாசனம், கரையும் உரப்பாசனம, இலை வாழை சாகுபடி, நோய் நிர்வாகம், நுண்சத்து நிர்வாகம், கிழங்கு நேர்த்தி சாகுபடி, கூண் வண்டு தடுப்பு, நூற்புழு வராது காத்தல், முடிக்கொத்து நோய் வராது நடவடிக்கை எடுத்தல், அறுவடை பின்செய் நேர்த்தி, பழங்களின் தரம் பேணுதல், ஏற்றுமதி உத்திகள், வாழைக்குரிய கூட்டமைப்பு நிறுவனங்கள் அமைத்தல், நிலவரம் அறிந்து விற்பனை, சேமிப்பு உத்திகள, வாழை நார் தயாரிப்பு வாழைக் காய் சேமிப்பு முறைகள், வாழைத் தண்டு பயன்பாடு, வேளாண் மகளிர் குழுக்களின் மூலம் வாழையில் பல்வேறு பயன்மிகு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை முதலிய விபரங்கள் விவரிக்கப்பட உள்ளன. இரண்டு நாட்கள் நடைபெறும் (11.05.2017 மற்றும் 12.05.2017) இக்கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள விவசாயிகள் தொழில் நுட்பங்களை நல்ல முறையில் தெரிந்து கொண்டு பயன்பெற்று நமது மாவட்டத்தின் வாழை உற்பத்தியை அதிகரித்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அவர்கள் தெரிவித்தார்கள்.
நவீன தொழில் நுட்பம்
முன்னதாக, வாழைப்பழங்களின் ரகங்கள் குறித்தும், வாழைப்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள், வாழை நாரிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சிசு வாழைக் கன்றுகள் ஆகியவை குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் மாவட்ட கலெக்டர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்நிகழ்வின்போது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் க.ச.சுகந்தி, உதவி இயக்குநர் இளங்கோவன், தோட்டக்கலை அலுவலர்கள் மு.ஜெரினானபேகம் , லலிதா, சித்தார்த்தன், சந்திரகவிதா, ஞானசேகரன், சுசிந்திரா, சுரேஸ்குமார், துணை தோட்டக்கலை அலுவலர் பாலமுருகன், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், விவசாயிகள் , விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு மேலும் உயரும்: அமித்ஷா
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.