எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சேவூர் சாலை கொங்கு கலையரங்கத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கான மாவட்ட அளவிலான இரண்டு நாள் வாழை சாகுபடி கருத்தரங்கினை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
3000ஹெக்டர் வாழை சாகுபடி
தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு வகையான திட்டங்களில் சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டமும் ஒன்று ஆகும. சராசரியாக நமது மாவட்டத்தில் ஆண்டிற்கு 3000 ஹெக்டர் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. பலவிதமான பழப்பயிர்களில் முக்கனிகளில் மூன்றாவதாக திகழும் வாழை பயிர் சாகுபடியை பரவலாக நீர் வசதி உள்ள விவசாயிகள் மட்டும் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் வாழை சாகுபடிக்கு அதிக நீர் செலுத்துவதும் மண்வளம் அறியாது உரம் இடுவதும், தரமான கன்றுகளை தேர்வு செய்யாமல் இருப்பதும் குறைந்த மகசூலுக்கு காரணமாக அமைகின்றது. வாழையில் பலவித இரகங்கள் இருந்தாலும் திட்டமிட்டு திசு வாழை கன்றுகளை நடுவதே சிறந்தது.
ஆண்டு தோறும்
அவிநாசி வட்டாரத்தில் சராசரி ஆண்டு தோறும் 2,750 ஏக்கர் பரப்பில் சிறு விவசாயிகள் அதிகம் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டருக்கு ரூ.37,500/- மதிப்புள்ள திசு வாழை கன்றுகள் மானியமாக வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் இப்பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழக அரசின் முக்கிய அங்கமான தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக் கழகம் மூலமாக பலவித ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வாழை சாகுபடியாளர்களுக்கு தொழில் நுட்பங்களை ஒன்று சேர கிடைப்பதற்காகவே இவ்வாழை சாகுபடி கருத்தரங்கு இங்கு நடைபெறுகிறது. இங்கு திரளாக வந்திருக்கும் அனைத்து விவசாயிகளும் தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக் கழக விஞ்ஞானிகளின் உறையை கவனமாக கேட்டு பயன் பெற வேண்டும். கருத்துக் காட்சிகளில் அளிக்கப்பட்டுள்ள விபரங்களை குறித்துக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.
இயற்கை வேளாண் உற்பத்தி
இக்கருத்தரங்கில் பலராலும் கையாளத்தக்க பலவித உத்திகள் பற்றி எடுத்துரைக்கப்பட உள்ளன. குறிப்பாக மண்பரிசோதனை, நிலம் தயாரிப்பு, இயற்கை உரம் அளித்தல், காற்று தடுப்பு ஏற்பாடு, உரிய ஆழத்தில் நடவு, போதிய பயிர்கள் எண்ணிக்கை, ஊடு பயிர், வரப்பு பயிர், காப்பு பயிர் சாகுபடி, பயிர் பாதுகாப்பு உத்திகள், இயற்கை வேளாண் உத்திகளால் வாழையின் தரம் அதிகரித்தல், சரியான கன்று தேர்வு, நுண்ணீர் பாசனம், கரையும் உரப்பாசனம, இலை வாழை சாகுபடி, நோய் நிர்வாகம், நுண்சத்து நிர்வாகம், கிழங்கு நேர்த்தி சாகுபடி, கூண் வண்டு தடுப்பு, நூற்புழு வராது காத்தல், முடிக்கொத்து நோய் வராது நடவடிக்கை எடுத்தல், அறுவடை பின்செய் நேர்த்தி, பழங்களின் தரம் பேணுதல், ஏற்றுமதி உத்திகள், வாழைக்குரிய கூட்டமைப்பு நிறுவனங்கள் அமைத்தல், நிலவரம் அறிந்து விற்பனை, சேமிப்பு உத்திகள, வாழை நார் தயாரிப்பு வாழைக் காய் சேமிப்பு முறைகள், வாழைத் தண்டு பயன்பாடு, வேளாண் மகளிர் குழுக்களின் மூலம் வாழையில் பல்வேறு பயன்மிகு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை முதலிய விபரங்கள் விவரிக்கப்பட உள்ளன. இரண்டு நாட்கள் நடைபெறும் (11.05.2017 மற்றும் 12.05.2017) இக்கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள விவசாயிகள் தொழில் நுட்பங்களை நல்ல முறையில் தெரிந்து கொண்டு பயன்பெற்று நமது மாவட்டத்தின் வாழை உற்பத்தியை அதிகரித்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அவர்கள் தெரிவித்தார்கள்.
நவீன தொழில் நுட்பம்
முன்னதாக, வாழைப்பழங்களின் ரகங்கள் குறித்தும், வாழைப்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள், வாழை நாரிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சிசு வாழைக் கன்றுகள் ஆகியவை குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் மாவட்ட கலெக்டர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்நிகழ்வின்போது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் க.ச.சுகந்தி, உதவி இயக்குநர் இளங்கோவன், தோட்டக்கலை அலுவலர்கள் மு.ஜெரினானபேகம் , லலிதா, சித்தார்த்தன், சந்திரகவிதா, ஞானசேகரன், சுசிந்திரா, சுரேஸ்குமார், துணை தோட்டக்கலை அலுவலர் பாலமுருகன், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், விவசாயிகள் , விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –30-01-2026
30 Jan 2026 -
பண்ருட்டி சம்பவம் எதிரொலி: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி
30 Jan 2026சென்னை, “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று அ.தி.மு.க.
-
போராட்டங்கள் இயல்பாக நடக்க வேண்டும்: தற்காலிக ஊழியர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் கருத்து
30 Jan 2026சென்னை, தற்காலிக ஊழியர்களை போராட தூண்டி விடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்
-
பா.ஜக. - அ.தி.மு.க. துரோக கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது: சென்னையில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Jan 2026சென்னை, இந்தியாவிலேயே யாரும் அடைய முடியாத 11.19 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை, திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.
-
அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
30 Jan 2026நியூயார்க், அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
-
பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்பு
30 Jan 2026சென்னை, கொலை செய்து வீசப்பட்ட பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
-
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்
30 Jan 2026டாக்கா, வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே கடந்த 14 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
-
சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சரண்
30 Jan 2026ராஞ்சி, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் நேற்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்ரவரி 5-ல் கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Jan 2026சென்னை, பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி (வியாழக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
30 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ வாருங்கள்: ஜெலன்ஸ்கிக்கு ரஷ்யா அழைப்பு
30 Jan 2026மாஸ்கோ, அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
சிவகங்கை மாவட்டத்தில் இன்று அரசு சார்பில் விழா: 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான 49 முடிவடைந்த திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
30 Jan 2026சென்னை, சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ.
-
தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு: காங்கிரசுடன் உறவு சுமுகமாகவே உள்ளது: கனிமொழி எம்.பி. பேட்டி
30 Jan 2026நெல்லை, தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள தி.மு.க. எம்.பி.
-
உக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வாரம் நிறுத்த புதின் சம்மதம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
30 Jan 2026நியூயார்க், உக்ரைன் மீதான தாக்குதலை ஒரு வாரத்துக்கு நிறுத்த ரஷ்ய அதிபர் புதியன் சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஜோ பைடன் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகளின் பட்டியலை வெளியிட்டது அமெரிக்கா அரசு
30 Jan 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர இந்தியத் தலைவர்கள், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள் க
-
மகாத்மா காந்தியின் 79-வது நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
30 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டு பெண்கள் முடிவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
30 Jan 2026சென்னை, திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
30 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க பல்லக்கில் நாட் கதிரறுப்பு விழா.
- நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் வருசாபிசேகம்.
-
இன்றைய நாள் எப்படி?
30 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
30 Jan 2026


