தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கறவை மாடுகளில் பால் உற்பத்தியைப் பெருக்க நல்ல தீவனம், காற்று வசதி, நோய் தடுப்பு முறைகள், இயற்கை சார்ந்த சூழல் ஆகியவை முக்கியமாகும். கறவை மாடு வளர்ப்பு பல சோதனைகளையும் கடந்து பண்ணையாளர்களுக்கு தினசரி தொடர் வருமானத்திற்கு இன்றளவும் உதவியாய் இருக்கிறது. பண்ணையளவில் பொருளாதாரம் சார்ந்த இடர்கள் பலவும் இருந்தாலும், நோய்கள் ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. இந்நிலையில் நோய் வராது தடுக்க நாம் பெரும் முயற்சி எடுக்க வேண்டும்.
கறவை மாடுகளை வாங்கும்போது மடி மற்றும் காம்புகளின் தன்மையை அறிந்து வாங்க வேண்டும். மாடுகளை கழுவி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். சில நேரங்களில் கறவை முறையின் காரணமாகவும், காய்ந்த நிலையில் பால் கறப்பதினாலும் மடிக்காம்புகளில் வெடிப்பு மற்றும் காயங்கள் ஏற்படும்.
கறவை மாடுகளில் மடிசார்ந்த நோய்கள் : நோய்கள் பல இருந்தாலும் ஒரு சில நோய்கள் பொருளாதார இழப்பு அதிக அளவில் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இதில் மிகவும் பொருளாதார முக்கியத்துவம் கொண்டது கறவை மாடுகளின் மடி சார்ந்த நோய்களாகும். இதுபற்றிய விழிப்புணர்வு பண்ணையாளருக்கு அவசியம் பல ஆராய்ச்சி முடிவுகளின் படி கறவை மாடுகளில் 50 விழுக்காடு நோய்கள் மடி சார்ந்தவையாக இருப்பது அறியப்படுகிறது.
மடிசார்ந்த நோய்கள் : மடிநோய் என்பது பெரும்பாலும் தொற்றுநோயாக இருக்கும்.
சில நேரங்களில் மடிக்கட்டும் ஏற்படும். மடியின் முன்புறம் முன்கால்கள் வரை நீர் கோர்த்துக் காணப்படும். கோடை மற்றும் மழைப் பருவம் மாறும் சூழலிலும், கோமாரி (கசப்பு) நோய் கண்ட மாடுகளிலும் சுகாதாரக் குறைவான கறவை முறைகளிலும் மடியில் அம்மைக் கொப்புளங்கள் காணப்படும். தலை ஈத்து மாடுகளிலும், முறையற்ற முரட்டுத்தனமான கறவைப் பழக்கம் உள்ள பண்ணைகளிலும் மடிக்காம்பில் வெடிப்பு மற்றும் காயங்கள் காணப்படும்.
மடிநோயின் அறிகுறிகள் : மடிநோய் உள்ள மாடு, மடி வீங்கி அல்லது கல்போல இருக்கும். கை வைத்தால் காலைத் தூக்கும். உதைக்கும். பாலில், வெள்ளை நிறம் தவிர வேறு எந்த நிறம் (மஞ்சள், இளஞ்சிவப்பு) கண்டாலும் அது மடிநோய் எனலாம். அது போலவே பாலில் ஏதேனும் திரி அல்லது நூல் போல பொருள் தென்பட்டாலும் மடிநோய் தான். பாலை, நாவின் நுனியில் ஒரு சொட்டு வைத்துச் சுவைத்தால் அதில் சிறிது உப்புச்சுவை இருந்தால் மடிநோய் இருக்கலாம். இரண்டு ஈற்றுக்கு மேலே உள்ள மாடுகளில் கன்று ஈன்றவுடன் மடிநோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
கறவை மாடுகளில் மேற்கண்ட எந்த அறிகுறிகள் தனித்தோ அல்லது கலந்தோ காணப்படும் சூழலில் அதை மடிநோய் என்று மனதில் கொண்டு உடன் முதலுதவி செய்வது நலம். பெரும்பாலான நேரங்களில், உடன் மருத்துவ உதவி கிடைக்காத போது நோயின் தன்மை தீவிரமடைந்து பாதிப்பு அதிகமாகும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
மடிநோய்க்கான மரபு சார்ந்த மூலிகை முதலுதவி குறிப்புகள் : முதலில்,மடிநோய் கண்ட மாடுகளின் மடியினை நீர்விட்டு தேங்காய் நார் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். பிறகு அனைத்து காம்பு மற்றும் மடி பகுதியினையும் நன்றாக கைகளால் பிசைந்து பாலைக்கறந்து விடவும். மடியில் நீர் ஈரம் காயும் முன்பு கீழ்க்கண்ட முறையில் விளக்கப்படும் மருந்தினை முறையாகப் பயன்படுத்தவும். சோற்றுக்கற்றாலை மடல் - எடை 250 கிராம்(ஒன்று அல்லது இரண்டு) (முழு மடல்) மஞ்சள் தூள் - எடை 50 கிராம் (சமையலுக்கு பயன்படுவது) (ஒரு சாம்பார் கரண்டி அளவு)
சுண்ணாம்பு - எடை 20 கிராம்(வெற்றிலைக்கு போடுவது) (ஒரு கொட்டைப்பாக்கு அளவு)
சோற்றுக்கற்றாழை ஒன்று அல்லது இரண்டு மடல் (250 கிராம்) எடுத்து, தோலுடன் முழுதாக சிறு சிறு துண்டுகளாக அரிந்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். மஞ்சள் தூள் (50 கிராம்) எடுத்து அந்த பாத்திரத்தில் போடவும். பிறகு சுண்ணாம்பு (20 கிராம்) சேர்த்து இந்த மூன்று பொருட்களையும் ஒன்று சேர்த்து மின்அரவை இயந்திரம் அல்லது ஆட்டு கல்லில் மை போல அரைத்துக் கொள்ளவும். இந்த மூலிகை மருந்துக் கலவை ஒரு மாட்டிற்கு ஒரு நாள் முழுவதும் தடவ வேண்டிய அளவாகும்.
மடியில் மருந்து தடவும் முறை : முதலில், கூறியுள்ள படி நோய் கண்ட மாடுகளின் மடியினை தேய்த்துக் கழுவி அனைத்து காம்பு மற்றும் மடி பகுதியினையும் நன்றாக கைகளால் பிசைந்து பாலைக்கறந்து மடியின் நீர் ஈரம் காயும் முன்பு மேற்கண்ட மருந்தினை முறையாகப் பயன்படுத்தவும்.
ஒரு கை அளவு மேற்கண்ட மூலிகை மருந்துக் கலவையை ஒரு குவளையில் இட்டு அதனுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து நன்கு கைகளால் கரைத்து மடியின் அனைத்து பகுதியிலும் கைகளால் தேய்த்து விடவும். தேய்க்கும்பொழுது கீழே மருந்து சொட்ட வேண்டும். கெட்டியாக தடவக்கூடாது. இந்த மருந்துக் கலவையை ஒரு நாளைக்கு, எட்டிலிருந்து பத்து முறை தடவ வேண்டும். ஒவ்வொரு முறை மருந்து தடவும் முன்பும் மடியில் நீர் தெளித்து நன்கு மடியினைக் கழுவி பாலைக் கறந்து விடவும். ஒரு நாளைக்கு பத்து முறை தடவ மேற்குறிப்பிட்ட மூலிகை மருந்துக் கலவை போதுமானது. இந்த முதலுதவி மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டும்.
2.2. மடிக்காம்பு வெடிப்பு : கறவை மாடுகளின்மடியில் காயம் மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டால் மூலிகை முதலுதவி செய்வதன் மூலம் கறவை மாடுகளில் பொருளாதார இழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். முதலில் மடியைக் கழுவி கீழ்க்கண்ட முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.
ஒரு லிட்டர் சுத்தமான நீரில் ஒரு கரண்டி (5 கிராம்) மஞ்சள்தூள் மற்றும் ஒரு கரண்டி (5கிராம்) கல்உப்பு கலந்து நீரை கொதிக்க வைத்து ஆறியவுடன் மடி மீது தெளித்து சுத்தமாகக் கழுவ வேண்டும். மேற்கூறிய நீரில் கழுவிய மடி மற்றும் காம்பு பகுதியை நன்கு உலர்ந்த சுத்தமான பஞ்சு துணியினால் ஈரம் உறிஞ்சும்படி ஒற்றித் துடைக்க வேண்டும்.
தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : மஞ்சள் தூள் 10 கிராம், பூண்டு 4 பல், குப்பைமேனி 10இலை, வல்லாரை 10 இலை, வெண்ணெய் 50 கிராம்.
செய்முறை : மேற்கண்டப் பொருட்களை வெண்ணெய் நீங்கலாக ஒன்று சேர்த்து அரைத்து, நீர் மற்றும் கை படாமல் ஒரு கரண்டியில் வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு வெண்ணெய் கலந்து கொள்ளவும். இதை ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தலாம். மறுநாள் புதியதாக மருந்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை : மடிக்காம்பில் காயம் மற்றும் வெடிப்பு ஏற்பட்ட கால்நடைகளுக்கு மேற்கூறிய முறையில் மடிப்பகுதியை சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துணியால் துடைத்து மேற்கூறிய மருந்து கலந்து வெண்ணெய்யை கையில் எடுத்து வெடிப்பு மற்றும் காயம் உள்ள பகுதிகளில் மென்மையாக தடவி விடவும்.
மாடுகள் கீழே படுத்து எழும்போது மடி மற்றும் காம்புப் பகுதிகள் அழுக்காகி விடும். எனவே இந்த மருந்தினை மடி மற்றும் காம்புப் பகுதியை சுத்தம் செய்து கறவை செய்யும் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் மேற்கூறிய மருந்தை பலமுறை தடவி விட வேண்டும்.
எக்காரணம் கொண்டும் மடியில் உள்ள காயம் மற்றும் வெடிப்பு உள்ள பகுதிகள் காய்ந்த நிலையில் இருக்கக் கூடாது. மருந்து எந்த நேரமும் காயம் மற்றும் வெடிப்பு உள்ள பகுதிகளில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
2.3. மடி அம்மை ; கறவை மாடுகளில் மடி அம்மைக் கொப்புளங்கள் ஏற்பட்டால் அதன் பாதிப்பால் சரியாக பால் கறக்கப்படாமல் மடிநோய் ஏற்பட வாய்ப்புண்டு.
கோமாரி, வாய் சப்பை நோய் கண்ட மாடுகளில் பல கால் நடைகளில் அம்மைக் கொப்புளங்கள் காணப்படும். இந்த அம்மைக் கொப்புளங்கள் சிறியதாக இருக்கும் போது சரியாகக் கவனித்து மருத்துவம் செய்யாவிட்டால் பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.
தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : திருநீற்றுப் பச்சிலை 10 இலை, துளசி 10 இலை, வேப்பிலை கொழுந்து , 10 இலை, பூண்டு 4 பல், மஞ்சள் தூள் 10 கிராம், வெண்ணெய் 50 கிராம்.
செய்முறை : மேற்கண்ட பொருட்களை வெண்ணெய் நீங்கலாக ஒன்று சேர்த்து அரைத்து நீர் மற்றும் கை படாமல் ஒரு கரண்டியில் வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு வெண்ணெய் கலந்து கொள்ளவும். இதை ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தலாம். மறுநாள் புதியதாக மருந்து அரைத்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை : மடி காம்பில் அம்மை ஏற்பட்ட கால்நடைகளுக்கு மேற்கூறிய முறையில் மடிப்பகுதியை சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துணியால் துடைத்து மேற்கூறிய மருந்து கலந்த வெண்ணெய்யை கையில் எடுத்து அம்மை உள்ள பகுதிகளில் மென்மையாகத் தடவி விடவும்.
2.4. மடிநீர்க்கோர்வை : மடிமுன்பகுதி நீர்க்கோர்வை : அதிக பால் கறக்கும் இளம் கறவை மாடுகளில் முதல் மற்றும் இரண்டாம் ஈற்றுகளில் சில மாடுகளில் மடியின் முன் பகுதி முன்னங்கால் வரை நீர் கோர்த்து கொண்டு மாடுகளுக்கு அயர்ச்சியைக் கொடுக்கும். ஒரு சில நேரங்களில் கன்று ஈன்றுவதற்கு முன்பாகவும் மடிநீர்க் கோர்வைக் காணப்படும். இந்நிலை கண்ட கன்று ஈன்ற மாடுகளில் நாள் ஒன்றுக்கு சில முறை கூடுதலாக பால் கறப்பதன் மூலமும், கன்றுகளைக் கூடுதலாக ஊட்ட விடுவதன் மூலமாகவும் இந்நிலையின் தீவிரத்தைக் குறைக்கலாம்.
தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : பூண்டு 10 பல், மஞ்சள் தூள் 50 கிராம், நல்லெண்ணெய் 300 மிலி.
செய்முறை : நல்லெண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து இளம் சூட்டில் 10 பல் பூண்டினை அரைத்து மஞ்சள் தூளை சேர்த்து போடவும்.
பயன்படுத்தும் முறை : எண்ணெய் சூடு ஏறியவுடன் பாத்திரத்தை இறக்கி வைத்து நீர்க்கோர்வை உள்ள பகுதிகளில் ஈரம் இல்லாமல் சுத்தமான பஞ்சு துணியினால் துடைத்து நன்கு உலர்ந்த நிலையில் 100 மிலி அளவு மருந்து கலந்து நல்லெண்ணெயை சிறிது சிறிதாக உள்ளங்கையில் ஊற்றி மடி நீர்க்கோர்வை உள்ள பகுதிகளில் நன்கு அழுத்தி வட்ட வடிவில் தேய்த்து விட வேண்டும்.
பின் குறிப்பு : மடிக்காம்புப் பகுதியில் கொப்புளம் மற்றும் வெடிப்பு கண்ட சமயங்களில் பால் கறவை செய்பவர்கள் மிகவும் கவனமாக கட்டை விரலை நீக்கி காயம் பெரிதாக்காமல் பாலைக் கறக்க வேண்டும்.
தொடர்புக்கு : கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், பிரட்ஸ் ரோடு, சேலம் - 636001.
தொகுப்பு : து.ஜெயந்தி, ப.ரவி, மற்றும் நா.ஸ்ரீபாலாஜி
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
காங்கிரஸ் கட்சியில் இருந்து கபில் சிபல் திடீரென விலகல்
25 May 2022லக்னோ : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.
-
கொலை முயற்சியில் உயிர் தப்பிய புடின் : உக்ரைன் அதிகாரி திடுக்கிடும் தகவல்
25 May 2022கீவ் : ரஷ்ய அதிபர் புடினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் தப்பித்ததாகவும் உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
இந்து கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்
25 May 2022சென்னை : இந்து கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு
25 May 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை நேரில் சந்தித்து நலம் வ
-
இளைஞர் சக்தியை உருவாக்க கல்வியை தந்தாக வேண்டும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
25 May 2022சென்னை : இளைஞர் சக்தியை உருவாக்க கல்வியை தந்தாக வேண்டும். அடிப்படை கல்வி மட்டுமல்ல உயர்கல்வியும் தந்தாக வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
நிதித்துறை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்பு
25 May 2022கொழும்பு : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூடுதல் பொறுப்பாக நிதித்துறை அமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்
25 May 2022சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சி மடுவண்கரை, கிண்டி மற்றும் ஆலந்தூர் (எம்.கே.என்.நகர்) பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய
-
உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு
25 May 2022லண்டன் : உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்க கோரி பயங்கர கலவரம்: ஆந்திரா, கோணசீமாவில் 2-வது நாளாக 144 தடை - இணையதள சேவை துண்டிப்பு
25 May 2022திருமலை : அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்க கோரி ஆந்திராவில் நடந்த பயங்கர கலவரம் காரணமாக நேற்று கோணசீமாவில் 2வது நாளாக 144 தடை நீட்டிக்கப்பட்டு, இணையதள சேவையும் துண்டிக்கப்
-
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
25 May 2022பியாங்கியாங் : அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜப்பானில் நடந்த குவாட் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தனது நாட்டுக்கு புறப்பட்ட சில மணி நேரத்தில் வடகொரியா ஏவுகணை ச
-
அமைச்சர் சாமிநாதனின் தாயார் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
25 May 2022சென்னை : தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
டூவீலரில் பின்னாள் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற விதி மும்பையில் அமலுக்கு வருகிறது
25 May 2022மும்பை : இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் இருப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என மும்பை மாநகர காவல் அறிவித்துள்ளது.
-
புதிதாக 2,124 பேருக்கு கொரோனா தொற்று- இந்தியாவில் தினசரி பாதிப்பு சற்று உயர்வு
25 May 2022புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 2,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
-
நாசா வெளியிட்ட கேலக்ஸியின் புதிய புகைப்படம் வைரல்
25 May 2022நியூயார்க் : நாசா விண்வெளி ஆய்வு மையம் கேலக்ஸியின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
-
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு : முற்றுப்புள்ளி வைப்பது எப்போது என பைடன் ஆதங்கம்
25 May 2022டெல்சாஸ் : அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது.
-
பங்கு சந்தை முறைகேடு:ரூ.3.12 கோடி அபராதத்தை செலுத்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு நோட்டீஸ்
25 May 2022புதுடெல்லி : பங்கு சந்தை முறைகேட்டில் ரூ.3.12 கோடி அபராத தொகையை செலுத்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு செபி மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
சட்டவிரோத பணபரிவர்த்தனை: எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
25 May 2022டெல்லி : சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிரதமர் மோடி இன்று ஐதராபாத் வருகை: 930 மாணவர்களின் சமூக வலைதள பக்கங்கள் ஆய்வு
25 May 2022பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐதராபாத் வர உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
-
சமையல் எண்ணெய், கோதுமையை தொடர்ந்து சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
25 May 2022புதுடெல்லி : கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்காகவும், விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் 2022 ஜூன் 1-ம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு
-
கடந்த 3 ஆண்டுகளில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் 20,100 குவிண்டால் ரேசன் அரிசி பறிமுதல் : குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை விளக்கம்
25 May 2022சென்னை : கடந்த 3 ஆண்டுகளில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் 20,100 குவிண்டால் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது
-
சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25.66 கோடி வங்கிக் கடன் இணைப்புகள்: மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழா : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
25 May 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.
-
கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு : அரசு சேவைகள் தொய்வின்றி வழங்க உத்தரவு
25 May 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கிண்டி, வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
-
மேட்டூர் அணை நீர்வரத்து 8,539 கன அடியாக சரிவு
25 May 2022சேலம் : மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று 8,539 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 117.92 அடியாக உள்ளது.
-
காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து 5,000 கனஅடி தண்ணீர் திறப்பு
25 May 2022காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 8539 கனஅடியாக சரிந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 25-05-2022
25 May 2022