எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு, ஆக 1 பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் சார்பில், சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்ஷாபந்தன் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஈரோடு, சம்பத்நகர் கொங்கு கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் உமா தலைமையில், யோகா, தவம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, “மகிழ்ச்சிக்கான மந்திர சாவி’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். முன்னதாக, ரக்ஷாபந்தன் விழாவையொட்டி, கொங்காளம்மன் கோயில் வணிக சங்கத் தலைவர் செல்வம் மஞ்சள் கொடியேற்றினார். வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகர், அனைத்துத் தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சிவநேசன், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், முத்துபாரதி, சித்தார்த்தா பள்ளித் தாளாளர் ஜெயபாரதி, பள்ளி, கல்வி ஒருங்கிணைப்பாளர் கோமதி உள்ளிட்டோர் பங்கேற்று ராக்கி கயிறு கட்டிக்கொண்டனர். விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகளும் ராக்கி கயிறு கட்டிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றது. photo no 2
மாநில அளவிலான சிலம்பாட்டம் தொடக்கம்
மாநில அளவிலான சிலம்பாட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டுச் சங்கம், ஈரோடு மாவட்ட சிலம்பம் விளையாட்டுச் சங்கம் சார்பில் ஈரோட்டில் மாநில அளவிலான சிலம்புப் போட்டிகள் நேற்று தொடங்கின. 28 மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் 24 ஆண்கள், 24 பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சப்-ஜூனியர் (14 வயதுக்கு கீழ்), ஜூனியர் (17 வயதுக்கு கீழ்), சீனியர்( 18 முதல் 30 வயது வரை) என 3 பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 48 பேர் தேர்வு செய்யப்பட்டு அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வர். தேசிய அளவிலான போட்டி சென்னையில் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.
முன்னதாக இப்போட்டிகளை மாநகர் மாவட்ட அதிமுக செயலர் கே.வி.இராமலிங்கம் தொடக்கிவைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு சிலம்ப விளையாட்டுச் சங்க செயல் தலைவர் பொன்.ராமர் தலைமை வகித்தார். பொருளாளர் கண்ணதாசன் வரவேற்றார். எம்.எல்.ஏ. தென்னரசு, முன்னாள் எம்.எல்.ஏ.பொன்னுதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 3 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பரிசு வழங்கவுள்ளார். photo no2
பொல்லானுக்கு மணிமண்டபம் கட்ட கோரிக்கை
ஈரோடு, ஆக 1சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் உருவப்பட திறப்பு விழா, தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமை வகித்தார். பொல்லான் படத்தை திறந்து வைத்து, தலைவர் திருவள்ளுவன் கூறியதாவது சுதந்திர போராட்டத்தில், தீரன் சின்னமலை தளபதியாக விளங்கியவர், பொல்லான். அவருக்கு தமிழக அரசு, முழு உருவச்சிலை அமைத்து, மணி மண்டபம் கட்ட வேண்டும். ஆண்டு தோறும் அவரது நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இம்ரான்கானை தனிமை சிறையில் அடைத்து சித்ரவதை: பாகிஸ்தான் எம்.பி. குற்றச்சாட்டு
30 Nov 2025லாகூர், : தனிமை சிறையில் இம்ரான்கானை அடைத்து சித்ரவதை செய்யப்படுவதாக பாகிஸ்தான் எம்.பி. குற்றச்சாட்டியுள்ளார்.
-
தென்காசி அருகே விபத்து: கவுன்சிலர் உட்பட 3 பேர் பலி
30 Nov 2025தென்காசி : சுரண்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
62-வயதில் ஆஸ்திரேலியா பிரதமர் காதல் திருமணம் : பிரதமருக்கு நரேந்திரமோடி வாழ்த்து
30 Nov 2025புதுடெல்லி : 62-வயதில் காதல் திருமணம் செய்து கொண்ட ஆஸ்திரேலியா பிரதமருக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கூட்ட நெரிசல் சம்பவம்: சுப்ரீம் கோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி இன்று கரூர் வருகை
30 Nov 2025கரூர் : கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி இன்று கரூர் வருகிறார்.
-
விரைவில் முழு கொள்ளளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி : பூண்டி ஏரியில் 4 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
30 Nov 2025சென்னை : புயல் எச்சரிக்கையையொட்டி ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
-
இந்த ஆண்டும் திருவண்ணாமலை கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மகா தீபத்தன்று மலை ஏறத்தடை
30 Nov 2025தி.மலை : 'டித்வா' புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழை பொழிவதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வரும் புதன் கிழமை மகா தீபத்
-
உத்தரகாண்டில் நிலநடுக்கம்
30 Nov 2025டேராடூன் : உத்தரகண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
-
உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியல் ஜப்பானை பின்னுக்குத்தள்ளி 3-வது இடத்திற்கு முன்னேற்றிய இந்தியா
30 Nov 2025புதுடெல்லி : லோவி இன்ஸ்டிடியூட் என்ற குழு ‘ஆசிய சக்தி குறியீடு' மூலம் உலகில் தலைசிறந்த நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி
30 Nov 2025நியூயார்க் : அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக கவர்னர் சாமி தரிசனம்
30 Nov 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
-
விமானப்படையின் 80-வது ஆண்டு விழா: வான்சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்த அதிபர் கிம்
30 Nov 2025பியாங்யாங் : வடகொரிய விமானப்படையின் 80-வது ஆண்டு விழாவில் வான்சாகச நிகழ்ச்சியை அதிபர் கிம் கண்டுகளித்தார்.
-
எந்த விமானமும் பறக்கக் கூடாது: வெனிசுலாவின் வான்வெளி மூடப்படுவதாக ட்ரம்ப் அறிவிப்பு
30 Nov 2025நியூயார்க் : வெனிசுலாவின் வான்வெளி மூடப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல், சோனியா எதிராக புதிதாக எப்.ஐ.ஆர். பதிவு
30 Nov 2025புதுடெல்லி : நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல்காந்தி, சோனியா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கர்நாடகாவில் சோகம்: விபத்தில் ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலி
30 Nov 2025நகரி : கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் கோவிலுக்கு சென்றபோது, சாலையில் எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
-
இங்கிலாந்தில் இந்தியர் குத்திக்கொலை
30 Nov 2025லண்டன் : இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த அரியானவை சேர்ந்த இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
-
டெல்லியில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் : ராமதாஸ் அறிவிப்பு
30 Nov 2025சென்னை : தேர்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கையை கண்டித்து டெல்லியில் 04.12.2025 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு பா.ம.க.
-
'டித்வா' புயலால் இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 190 ஆக உயர்வு
30 Nov 2025கொழும்பு : டித்வா புயலால் இலங்கை முழுவதும் 9.68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது.
-
டித்வா புயல் எதிரொலி: சென்னையில் 2-வது நாளாக 47 விமானங்கள் சேவை ரத்து
30 Nov 2025சென்னை : டித்வா புயல் காரணமாக, சென்னையில் 2-வது நாளாக நேற்றும் 47 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
-
கார்த்திகை தீப திருவிழா வரலாறு
30 Nov 2025தி.மலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீபத்திருவிழா வரலாறு வருமாறு:-
-
டித்வா புயல்: தேவையான உதவிகளை மக்களுக்கு செய்ய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
30 Nov 2025சென்னை : டித்வா புயல் காரணமாக பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள களத்தில் தயாராக இருக்குமாறு அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
-
கோவையில் கொள்ளை சம்பவத்தில் சுட்டுப்பிடிக்கப்பட்ட 3 பேரில் ஒருவன் சிகிச்சை பலனின்றி பலி
30 Nov 2025கோவை : கோவை கொள்ளை சம்பவத்தில் சுட்டுப்பிடிக்கப்பட்ட 3 பேர்களில் ஒருவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலைியல் ஆசிப் என்பவர் சிகிச்சை பலனின
-
காசாவில் இடிந்த கட்டிடங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான உடல்கள் மீட்பு
30 Nov 2025டெல்அவீவ் : இஸ்ரேல் படைகளின் பல்வேறு உக்கிரமான தாக்குதல்களினால் காசாவில் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் 10,000-க்கும் அதிகமான உடல்கள் சிக்கியிருக்கின்றன என்றும், அ
-
தமிழ கவர்னரின் கோரிக்கை ஏற்பு: 'ராஜ்பவன்' பெயர் 'லோக் பவன்' என மாற்றம்
30 Nov 2025சென்னை : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், இந்தியா முழுவதும் உள்ள ராஜ்பவன்கள் 'லோக் பவன்' என்றும் (மக்கள் பவன்), ராஜ் நிவாஸ்கள் 'லோக்
-
டெல்லியில் தீவிபத்து: 4 பேர் பலி
30 Nov 2025டெல்லி : தலைநகர் டெல்லியில் நடந்த தீவிபத்தில் ஒரு சகோதரி மற்றும் சகோதரர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-12-2025.
01 Dec 2025


