எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், கயத்தாறு வட்டம் தென்னம்பட்டி கிராமத்தில், கலெக்டர் என்.வெங்கடேஷ், தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.முகாமில் கலெக்டர் என்.வெங்கடேஷ், தெரிவித்ததாவது:
மனுநீதி நாள் முகாம்
நமது மாவட்டத்தை முழு சுகாதாரமான மாவட்டமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரம் என்பது ஒவ்வொருவரின் பொறுப்பு, அதை பேணி காப்பது இங்கு கூடியிருக்கும் கிராம மக்களாகிய உங்களிடம் தான் உள்ளது. குறிப்பாக, திறந்த வெளியில் மலம் கழிப்பதினால் ஏற்படும் தீமைகள், உயிர் இழப்புகள், நோய் தொற்றுகள் ஆகியவற்றை தவிர்க்க தங்கள் இல்லங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தனி நபர் இல்லக்கழிப்பறைகளை பயன்படுத்தவேண்டும். இப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் தனி நபர் இல்லக்கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தங்கள் பகுதியை சுகாதாரத்துடன் வைத்துக்கொண்டால் டெங்கு காய்ச்சல் போன்ற நோய் பரவமால் தடுக்கலாம். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தானாக சுய வைத்தியம் செய்து கொள்ளமால், தாமதமின்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனக்கு சென்று மருத்துவரின் ஆலோசனையின்படி உரிய சிகிச்சை பெற வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், அதற்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. நீங்கள் முழு பொறுப்புடன் செயல்பட்டால் நமது சமுதாயத்தை முழு வளர்ச்சியடைந்த, ஆரோக்கியமான சமுதாயமாக உருவாக்க முடியும். மேலும், நீங்கள் அளித்துள்ள மொத்த கோரிக்கை மனுக்கள் 224, அதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது 89, தள்ளுபடி செய்யப்பட்டது 135 ஆகும். தள்ளுபடி செய்யப்பட்ட கோரிக்கை மனுக்களுடன், உரிய சான்றிதழ்கள் இணைக்கப்பட்டு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் என்.வெங்கடேஷ், தெரிவித்தார்கள்.முகாமில் வருவாய்த்துறையின் மூலம் 39 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவினையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு அட்டை, ஊனமுற்றோர் உதவித்தொகை என மொத்தம் ரூ.2,11750- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட வழங்கல் துறையின் மூலம் 24 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையினையும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 4 வது தவனையாக 7 பயனாளிகளுக்கு ரூ.35808-ம், வேளாண்மைத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு தென்னங்கன்று, 2 பயனாளிகளுக்கு மான்ய விலையில் வேளாண் இடுபொருள்களை கலெக்டர் என்.வெங்கடேஷ், வழங்கினார்கள். முன்னதாக கலெக்டர் என்.வெங்கடேஷ், தென்னம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றினை நட்டார். தொடர்ந்து மனுநீதி நாள் முகாமில் வேளாண்மைத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சி மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை பார்வையிட்டார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |