எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை-தென்காசி இடையே மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு ரூ.413 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி வரும் மார்ச் மாதம் துவங்கும் என தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தெரிவித்ததார்.
விரிவாக்கப் பணி
நெல்லை தென்காசி மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்தும் நில உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமை வகித்தார். சாலை மேம்பாட்டு திட்ட கோட்ட பொறியாளர்கள் வேல்ராஜ், உதவி பொறியாளர் சதீ~ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கல்லுரணி, குணராமநல்லுர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் நிலம் மற்றும் கட்டிடங்களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள இழப்பீடு தொகை தற்போதைய மார்க்கெட் மதிப்பை விட மிகவும் குறைவாக உள்ளது, தற்போது அரசு அகலப்படுத்த உள்ள சாலையின் நீளம் மற்றும் அகலம் எந்த இடத்தில் எவ்வாறு உள்ளது, பாவூர்சத்திரத்தில் மேம்பாலம் எப்படி வருகிறது. அவ்வாறு வந்தால் துணைச் சாலை எவ்வாறு அமைக்கப்படும். ஒருசில கட்டிடங்களுக்கு அரசு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பாத காரணம் என்ன என்பது போன்ற பல்வேறு புகார்களையும் சந்தேகங்களையும் கூறினர். இதற்கு பதிலளித்து சாலை மேம்பாட்டுத்திட்ட தனி வருவாய் அலுவலர் அபிராமி கூறியதாவது.: நெல்லை மாவட்டத்தின் பிரதான மாநில நெடுஞ்சாலையான நெல்லை தென்காசி இடையேயான 49 கிமீட்டர் நெடுஞ்சாலை 31 மீட்டர் முதல் 35 மீட்டர் வரையிலான அளவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக அரசு 413 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சாலையின் நடுவில் இரண்டு சாலையையும் பிரிக்கும் தடுப்புகளுடன் அமைக்கப்பட உள்ளது. போக்குவரத்திற்கு மிகவும் மோசமான நிலையில் உள்ள வளைவுகள் திருத்தி நேர்வழியாக வரும் அளவில் சீரமைக்கப்பட உள்ளது. பாவூர்சத்திரத்தில் உள்ள இரயில்வே பாதையை கடக்கும் விதமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்தில் 31 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைக்கப்படஉள்ளது. ரயில்வே பாதைக்கு மேற்கே 500 மீட்டராகவும் கிழக்கில் 500 மீட்டராகவும் பிரித்து 20 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கப்பட உள்ளது. பாலத்தின் அருகில் சுரங்க வழி நடைப்பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் 5.50 மீட்டர் அகலத்தில் துணைவழிச்சாலை மேலப்பாவூர் மற்றும் ரயில்வே நிலையத்திற்கு செல்லும் வகையில் சீரமைக்கப்படும். அரசுக்கு தேவைப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பட்டா மாறாத காரணத்தால் முந்தைய உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும். ஆனால் தற்போதைய உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை கொடுத்து இழப்பீடு பெற்றுக்கொள்ள வழிசெய்யப்படும். இந்த வழித்தடத்தின் அருகில் உள்ள நில உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள விவரப்படி நிலம் கட்டிடங்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படடும். அரசு நிர்ணயித்துள்ள மதிப்பு தொகைகுறைவாக உள்ளதாக நீங்கள் கருதினால் அதற்கான படிவம் உள்ளது. அதனை பூர்த்தி செய்து எங்களிடம் மனுவாக தாருங்கள். நாங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். தற்போது பெரும்பாலான நில உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு அரசு உரிய பணத்தை வழங்கிவிட்டது. தென்காசி வட்டத்தில் உள்ள உரிமையாளர்களுக்கு விரைவில் பணம் வழங்கப்படும்.இன்னும் ஓரிரு வாரதில் சாலை அளவுகள் குறிக்கப்பட்டு, வருகின்ற மார்ச் மாதத்தில் பணிகள் துவங்கப்பட இருக்கிறது. பொதுமக்களின் நலனுக்காகவும் தற்போது ஏற்பட்டுள்ள வாகன போக்குவரத்து நெருக்கடிகளை மனதில் கொண்டும் பொதுமக்கள் மற்றும் நில உரிமையாளர்கள் கட்டிட உரிமையாளர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தந்து இத்திட்டம் சிறப்பாக நிறைவடைய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் தனி வட்டாடச்சியர் சேதுராமலிங்கம், கல்லுரணி வருவாய் ஆய்வாளர் ஜெமிலாபானு, கல்லுரணி கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், மதிமுக ஒன்றிய செயலாளர் இராம.உதயசூரியன், முன்னாள் பஞ். தலைவர்கள் அருணோதயம், தமிழ்செல்வன் என்ற ராமசாமி வணிகர்கள் சங்க நிர்வாகிகள் ஜெயசந்திரன், ராமச்சந்திரன், பூபால்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –30-01-2026
30 Jan 2026 -
போராட்டங்கள் இயல்பாக நடக்க வேண்டும்: தற்காலிக ஊழியர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் கருத்து
30 Jan 2026சென்னை, தற்காலிக ஊழியர்களை போராட தூண்டி விடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்
-
பண்ருட்டி சம்பவம் எதிரொலி: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி
30 Jan 2026சென்னை, “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று அ.தி.மு.க.
-
அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
30 Jan 2026நியூயார்க், அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
-
பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்பு
30 Jan 2026சென்னை, கொலை செய்து வீசப்பட்ட பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
-
பா.ஜக. - அ.தி.மு.க. துரோக கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது: சென்னையில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Jan 2026சென்னை, இந்தியாவிலேயே யாரும் அடைய முடியாத 11.19 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை, திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.
-
சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சரண்
30 Jan 2026ராஞ்சி, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் நேற்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்ரவரி 5-ல் கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Jan 2026சென்னை, பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி (வியாழக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின
-
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்
30 Jan 2026டாக்கா, வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே கடந்த 14 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
30 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ வாருங்கள்: ஜெலன்ஸ்கிக்கு ரஷ்யா அழைப்பு
30 Jan 2026மாஸ்கோ, அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
சிவகங்கை மாவட்டத்தில் இன்று அரசு சார்பில் விழா: 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான 49 முடிவடைந்த திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
30 Jan 2026சென்னை, சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ.
-
உக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வாரம் நிறுத்த புதின் சம்மதம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
30 Jan 2026நியூயார்க், உக்ரைன் மீதான தாக்குதலை ஒரு வாரத்துக்கு நிறுத்த ரஷ்ய அதிபர் புதியன் சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மகாத்மா காந்தியின் 79-வது நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
30 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு: காங்கிரசுடன் உறவு சுமுகமாகவே உள்ளது: கனிமொழி எம்.பி. பேட்டி
30 Jan 2026நெல்லை, தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள தி.மு.க. எம்.பி.
-
திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டு பெண்கள் முடிவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
30 Jan 2026சென்னை, திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
ஜோ பைடன் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகளின் பட்டியலை வெளியிட்டது அமெரிக்கா அரசு
30 Jan 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர இந்தியத் தலைவர்கள், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள் க


