எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை-தென்காசி இடையே மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு ரூ.413 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி வரும் மார்ச் மாதம் துவங்கும் என தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தெரிவித்ததார்.
விரிவாக்கப் பணி
நெல்லை தென்காசி மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்தும் நில உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமை வகித்தார். சாலை மேம்பாட்டு திட்ட கோட்ட பொறியாளர்கள் வேல்ராஜ், உதவி பொறியாளர் சதீ~ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கல்லுரணி, குணராமநல்லுர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் நிலம் மற்றும் கட்டிடங்களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள இழப்பீடு தொகை தற்போதைய மார்க்கெட் மதிப்பை விட மிகவும் குறைவாக உள்ளது, தற்போது அரசு அகலப்படுத்த உள்ள சாலையின் நீளம் மற்றும் அகலம் எந்த இடத்தில் எவ்வாறு உள்ளது, பாவூர்சத்திரத்தில் மேம்பாலம் எப்படி வருகிறது. அவ்வாறு வந்தால் துணைச் சாலை எவ்வாறு அமைக்கப்படும். ஒருசில கட்டிடங்களுக்கு அரசு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பாத காரணம் என்ன என்பது போன்ற பல்வேறு புகார்களையும் சந்தேகங்களையும் கூறினர். இதற்கு பதிலளித்து சாலை மேம்பாட்டுத்திட்ட தனி வருவாய் அலுவலர் அபிராமி கூறியதாவது.: நெல்லை மாவட்டத்தின் பிரதான மாநில நெடுஞ்சாலையான நெல்லை தென்காசி இடையேயான 49 கிமீட்டர் நெடுஞ்சாலை 31 மீட்டர் முதல் 35 மீட்டர் வரையிலான அளவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக அரசு 413 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சாலையின் நடுவில் இரண்டு சாலையையும் பிரிக்கும் தடுப்புகளுடன் அமைக்கப்பட உள்ளது. போக்குவரத்திற்கு மிகவும் மோசமான நிலையில் உள்ள வளைவுகள் திருத்தி நேர்வழியாக வரும் அளவில் சீரமைக்கப்பட உள்ளது. பாவூர்சத்திரத்தில் உள்ள இரயில்வே பாதையை கடக்கும் விதமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்தில் 31 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைக்கப்படஉள்ளது. ரயில்வே பாதைக்கு மேற்கே 500 மீட்டராகவும் கிழக்கில் 500 மீட்டராகவும் பிரித்து 20 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கப்பட உள்ளது. பாலத்தின் அருகில் சுரங்க வழி நடைப்பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் 5.50 மீட்டர் அகலத்தில் துணைவழிச்சாலை மேலப்பாவூர் மற்றும் ரயில்வே நிலையத்திற்கு செல்லும் வகையில் சீரமைக்கப்படும். அரசுக்கு தேவைப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பட்டா மாறாத காரணத்தால் முந்தைய உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும். ஆனால் தற்போதைய உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை கொடுத்து இழப்பீடு பெற்றுக்கொள்ள வழிசெய்யப்படும். இந்த வழித்தடத்தின் அருகில் உள்ள நில உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள விவரப்படி நிலம் கட்டிடங்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படடும். அரசு நிர்ணயித்துள்ள மதிப்பு தொகைகுறைவாக உள்ளதாக நீங்கள் கருதினால் அதற்கான படிவம் உள்ளது. அதனை பூர்த்தி செய்து எங்களிடம் மனுவாக தாருங்கள். நாங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். தற்போது பெரும்பாலான நில உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு அரசு உரிய பணத்தை வழங்கிவிட்டது. தென்காசி வட்டத்தில் உள்ள உரிமையாளர்களுக்கு விரைவில் பணம் வழங்கப்படும்.இன்னும் ஓரிரு வாரதில் சாலை அளவுகள் குறிக்கப்பட்டு, வருகின்ற மார்ச் மாதத்தில் பணிகள் துவங்கப்பட இருக்கிறது. பொதுமக்களின் நலனுக்காகவும் தற்போது ஏற்பட்டுள்ள வாகன போக்குவரத்து நெருக்கடிகளை மனதில் கொண்டும் பொதுமக்கள் மற்றும் நில உரிமையாளர்கள் கட்டிட உரிமையாளர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தந்து இத்திட்டம் சிறப்பாக நிறைவடைய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் தனி வட்டாடச்சியர் சேதுராமலிங்கம், கல்லுரணி வருவாய் ஆய்வாளர் ஜெமிலாபானு, கல்லுரணி கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், மதிமுக ஒன்றிய செயலாளர் இராம.உதயசூரியன், முன்னாள் பஞ். தலைவர்கள் அருணோதயம், தமிழ்செல்வன் என்ற ராமசாமி வணிகர்கள் சங்க நிர்வாகிகள் ஜெயசந்திரன், ராமச்சந்திரன், பூபால்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.