எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை-தென்காசி இடையே மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு ரூ.413 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி வரும் மார்ச் மாதம் துவங்கும் என தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தெரிவித்ததார்.
விரிவாக்கப் பணி
நெல்லை தென்காசி மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்தும் நில உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமை வகித்தார். சாலை மேம்பாட்டு திட்ட கோட்ட பொறியாளர்கள் வேல்ராஜ், உதவி பொறியாளர் சதீ~ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கல்லுரணி, குணராமநல்லுர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் நிலம் மற்றும் கட்டிடங்களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள இழப்பீடு தொகை தற்போதைய மார்க்கெட் மதிப்பை விட மிகவும் குறைவாக உள்ளது, தற்போது அரசு அகலப்படுத்த உள்ள சாலையின் நீளம் மற்றும் அகலம் எந்த இடத்தில் எவ்வாறு உள்ளது, பாவூர்சத்திரத்தில் மேம்பாலம் எப்படி வருகிறது. அவ்வாறு வந்தால் துணைச் சாலை எவ்வாறு அமைக்கப்படும். ஒருசில கட்டிடங்களுக்கு அரசு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பாத காரணம் என்ன என்பது போன்ற பல்வேறு புகார்களையும் சந்தேகங்களையும் கூறினர். இதற்கு பதிலளித்து சாலை மேம்பாட்டுத்திட்ட தனி வருவாய் அலுவலர் அபிராமி கூறியதாவது.: நெல்லை மாவட்டத்தின் பிரதான மாநில நெடுஞ்சாலையான நெல்லை தென்காசி இடையேயான 49 கிமீட்டர் நெடுஞ்சாலை 31 மீட்டர் முதல் 35 மீட்டர் வரையிலான அளவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக அரசு 413 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சாலையின் நடுவில் இரண்டு சாலையையும் பிரிக்கும் தடுப்புகளுடன் அமைக்கப்பட உள்ளது. போக்குவரத்திற்கு மிகவும் மோசமான நிலையில் உள்ள வளைவுகள் திருத்தி நேர்வழியாக வரும் அளவில் சீரமைக்கப்பட உள்ளது. பாவூர்சத்திரத்தில் உள்ள இரயில்வே பாதையை கடக்கும் விதமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்தில் 31 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைக்கப்படஉள்ளது. ரயில்வே பாதைக்கு மேற்கே 500 மீட்டராகவும் கிழக்கில் 500 மீட்டராகவும் பிரித்து 20 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கப்பட உள்ளது. பாலத்தின் அருகில் சுரங்க வழி நடைப்பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் 5.50 மீட்டர் அகலத்தில் துணைவழிச்சாலை மேலப்பாவூர் மற்றும் ரயில்வே நிலையத்திற்கு செல்லும் வகையில் சீரமைக்கப்படும். அரசுக்கு தேவைப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பட்டா மாறாத காரணத்தால் முந்தைய உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும். ஆனால் தற்போதைய உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை கொடுத்து இழப்பீடு பெற்றுக்கொள்ள வழிசெய்யப்படும். இந்த வழித்தடத்தின் அருகில் உள்ள நில உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள விவரப்படி நிலம் கட்டிடங்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படடும். அரசு நிர்ணயித்துள்ள மதிப்பு தொகைகுறைவாக உள்ளதாக நீங்கள் கருதினால் அதற்கான படிவம் உள்ளது. அதனை பூர்த்தி செய்து எங்களிடம் மனுவாக தாருங்கள். நாங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். தற்போது பெரும்பாலான நில உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு அரசு உரிய பணத்தை வழங்கிவிட்டது. தென்காசி வட்டத்தில் உள்ள உரிமையாளர்களுக்கு விரைவில் பணம் வழங்கப்படும்.இன்னும் ஓரிரு வாரதில் சாலை அளவுகள் குறிக்கப்பட்டு, வருகின்ற மார்ச் மாதத்தில் பணிகள் துவங்கப்பட இருக்கிறது. பொதுமக்களின் நலனுக்காகவும் தற்போது ஏற்பட்டுள்ள வாகன போக்குவரத்து நெருக்கடிகளை மனதில் கொண்டும் பொதுமக்கள் மற்றும் நில உரிமையாளர்கள் கட்டிட உரிமையாளர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தந்து இத்திட்டம் சிறப்பாக நிறைவடைய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் தனி வட்டாடச்சியர் சேதுராமலிங்கம், கல்லுரணி வருவாய் ஆய்வாளர் ஜெமிலாபானு, கல்லுரணி கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், மதிமுக ஒன்றிய செயலாளர் இராம.உதயசூரியன், முன்னாள் பஞ். தலைவர்கள் அருணோதயம், தமிழ்செல்வன் என்ற ராமசாமி வணிகர்கள் சங்க நிர்வாகிகள் ஜெயசந்திரன், ராமச்சந்திரன், பூபால்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
-
சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்
31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்
31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
-
பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி
31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார்.
-
வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
31 Oct 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
31 Oct 2025சென்னை : ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு ஏற்படுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து
31 Oct 2025சென்னை : ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது.
-
இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து
31 Oct 2025தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு.
-
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை
31 Oct 2025சென்னை : திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி
31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
-
த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
-
இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா, கார்கே, ராகுல் அஞ்சலி
31 Oct 2025புதுடெல்லி : இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் சோனியா, கார்கே, ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ராஜ்நாத் சிங் கையெழுத்து
31 Oct 2025டெல்லி : இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.
-
முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு
31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
31 Oct 2025தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான 'ஆன்லைன்' முன்பதிவு இன்று தொடங்குகிறது
31 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டது.
-
பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர
-
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்: பிரதமர் நரேந்திர மோடி மரியாதை
31 Oct 2025காந்தி நகர் : சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் கெவாடியா பகுதியில் உள்ள வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை
-
பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்
31 Oct 2025சென்னை : பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்யின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்க
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்
31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் பீகார் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை : வி.சி.க. தலைவர் திருமாவளவன்
31 Oct 2025சென்னை : பீகார் மக்களுக்கு தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று திருமாவளவன் கூறினார்.
-
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும்: கார்கே
31 Oct 2025புதுடெல்லி : ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
31 Oct 2025சென்னை : சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


