எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் மானிய விலையில் வழங்கும் விழா கலெக்டர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி கலந்து கொண்டு 100 பயனாளிகளுக்கு ரூ.24,95,687/- மானியத்திலான அம்மா இரு சக்கர வாகனத்தினை வழங்கினார்.விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி பேசியதாவது-
அம்மா இரு சக்கர வாகனம்
புரட்சித்தலைவி அம்மா பெண்களின் நலனுக்காகவும், பெண்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தி தன்னம்பிக்கையுடன் வாழ்ந்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். புரட்சித்தலைவி அம்மா வேலைக்கு செல்லும் மற்றும் சொந்தமாக தொழில் செய்யும் உழைக்கும் மகளிர்கள் சுதந்திரமாகவும், விரைவாகவும் தங்களது பணியிடங்களுக்கு சென்று வரவும், தங்கள் குழந்தைகளை பள்ளிக் கூடத்திற்கு அழைத்து செல்லவும், யாரையும் சார்ந்து இருக்காமல், தங்களது அனைத்து பணிகளையும் குறித்த நேரத்தில் செய்திட ஏதுவாக, ஆண்டிற்கு ஒரு லட்சம் மகளிருக்கு 50 சதவித மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்கள். பாரத பிரதமர் , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழகம் முழுவதும் ஒரு இலட்சம் உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினை 24.02.2018 தொடங்கி வைத்தார்கள்.அதனடிப்படையில், திருநெல்வேலி மாவட்டத்தில் 4455 உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது. இன்று நடைபெறும் விழாவில் முதற்கட்டமாக மாநகராட்சி பகுதியில் 8 மகளிர்களுக்கும், நகராட்சி பகுதிகளில் 14 மகளிர்களுக்கும், பேரூராட்சி பகுதிகளில் 34 மகளிர்களுக்கும், ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 44 மகளிர்களுக்கும் ஆக மொத்தம் 100 உழைக்கும் மகளிர்களுக்கு ரூ.24.96 இலட்சம் மதிப்பில் மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களை பெறும் மகளிர்கள் தங்களது பணிகளையும், தொழில்களையும் சிறப்பாக செய்து வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டுமென பேசினார். விழாவிற்கு தலைமை வகித்து, கலெக்டர் சந்தீப் நந்தூரி, பேசியதாவது-தமிழ்நாடு அரசு வேலைக்கு செல்லும் பெண்களின் பல்வேறு சிரமங்களை குறைக்கும் வகையில், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. பெண்கள் படித்ததற்கு பிறகு வேலைக்கு செல்லவும், வரவு செலவுகளை சுதந்திரமாக செய்திடவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிர் வீட்டில் குழந்தைகளை கவனிக்கவும், சமையல் பணிகளையும், குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுக்கும் பணிகள் உள்பட பல்வேறு பணிகளை வீட்டில் செய்து முடித்து விட்டு, பணிகளுக்கும் செல்ல வேண்டியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உழைக்கும் மகளிர்களின் சிரமங்கள் குறைந்து விரைவாக பணிகளை முடிக்க முடியும். திருநெல்வேலி மாவட்டத்தில் 4455 உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு ஆண்டும் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படும். இன்று 100 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் 125 சிசிக்கு குறைவில்லாத வாகனங்கள் ஜனவரி 2018-க்கு பின்பு தயார் செய்யப்பட்ட வாகனங்களை வாங்க வேண்டும். விண்ணப்பிக்கும் மகளிருக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மகளிரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு குறைவாக இருந்திட வேண்டும். இந்த விதிமுறைகளின் அடிப்படையில், இவ்வாண்டில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில், ஆதரவற்றோர், விதவை, மாற்றுத்திறனாளி, கணவனால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட முன்னுரிமை பெற்றோருக்கும், மற்ற மகளிருக்கும் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டோருக்கு வழங்கப்படும். வாகனத்தின் விலையில் 50 சதவிதம் அல்லது அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. வங்கிகளில் கடன் பெற்று, வாகனம் வாங்குவோருக்கு மானியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இன்று வாகனம் பெறும் நீங்கள் இதை நல்லபடியாக பயன்படுத்தி, வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டுமென பேசினார்.இவ்விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், விஜிலா சத்தியானந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.முருகையாபாண்டியன், அ.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத் தலைவர் சக்திவேல்முருகன், டான்பெட் துணைத் தலைவர் கண்ணன் (எ) ராஜூ, ஆவின் சேர்மன் ரமேஷ், கூட்டுறவு பேராங்காடித் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, அக்ரோ சேர்மன் மகபூப் ஜான், நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆறுமுகம், திருநெல்வேலி கூட்டுறவு அச்சக சங்கத் தலைவர் செவல் முத்துசாமி, முக்கிய பிரமுகர்கள் சுதா பரமசிவம், பரணி சங்கரலிங்கம், தச்சை மாதவன், ஜெரால்ட், சேர்மபாண்டி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
அமித்ஷா இன்று தமிழகம் வருகை
14 Dec 2025வேலூர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
-
ராகுலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை
14 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்ய, தமிழகம் - புதுச்சேரி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி டெல்லியில
-
ஈரோட்டில் விஜய் மக்கள் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
14 Dec 2025சென்னை, ஈரோட்டில் பெருந்துறை அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயருக்கான பரிந்துரை பட்டியலில் ராஜேஷ், ஸ்ரீலேகா
14 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
-
நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
14 Dec 2025திருவண்ணாமலை, நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத
-
பா.ஜ.க.-அ.தி.மு.க.வின் ஊதுகுழலாக உள்ளாா்: அன்புமணி மீது அமைச்சா் விமர்சனம்
14 Dec 2025சிதம்பரம், பா.ம.க. தலைவா் அன்புமணி தற்போது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக உள்ளாா் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
-
ஜோர்டான், ஓமன் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
14 Dec 2025புதுடெல்லி, அரசு முறைப் பயணமாக ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க. இளைஞர் அணி மட்டும்தான் துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
14 Dec 2025சென்னை, நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க.இளைஞர் அணி மட்டும்தான் என்று துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலை துணை ஜனாதிபதி வெளியிட்டார்
14 Dec 2025புதுடெல்லி, தமிழக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.
-
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு: டிசம்பர் 19-ல் வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்
14 Dec 2025சென்னை, வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
-
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியானவர்களுக்கு ரூ. ஆயிரம் நிச்சயம் கிடைக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
14 Dec 2025தருமபுரி, தமிழகத்தில் ஏற்கனவே 1 கோடியே 13 லட்சம் பேருடன் மொத்தமாக 1 கோடியே 30 லட்சம் பேருக்கு உதவித் தொகை வழங்கியுள்ளோம்.
-
கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
14 Dec 2025சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
2025-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை வெல்வாரா விராட்கோலி?
14 Dec 20252025-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை இந்திய நட்சத்திர வீரர் கோலி வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
விருப்ப மனு பெயரில் பணமோசடி: தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்
14 Dec 2025சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் என்ற பெயரில், அன்புமணி பணமோசடியில் ஈடுபடுவதாக பா.ம.க.
-
த.வெ.க. வேட்பாளர்களை தலைவர் விஜய் அறிவிப்பார்: த.வெ.க. தலைமை கழக்கம் அறிவிப்பு
14 Dec 2025சென்னை, த.வெ.க. வேட்பாளர்களை விஜய் அறிவிப்பார் என த.வெ.க. தெரிவித்துள்ளது.
-
ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் அபாரம்: அரியானாவை வீழ்த்தியது மும்பை
14 Dec 2025புனே, சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் அபார ஆட்டத்தால் அரியானாவை வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது.
-
த.வெ.க. சார்பில் விருப்பமனு விநியோகம் வழங்கப்படும்..? செங்கோட்டையன் பேட்டி
14 Dec 2025ஈரோடு, தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு போட்டி என யாரையும் சொல்ல முடியாது என தெரிவித்த செங்கோட்டையன், த.வெ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 14-12-2025
15 Dec 2025 -
2026 சட்டசபை தேர்தல் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம்: டி.டி.வி.தினகரன் பேட்டி
15 Dec 2025தஞ்சாவூர், 2026 சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது.
-
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு முழு ஆதரவு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
15 Dec 2025டெல்லி, ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
யூதர்களை குறிவைத்து ஆஸி.யில் நடந்த துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
15 Dec 2025கான்பரா, யூதர்களை குறிவைத்து ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
-
ரூ.1 லட்சத்தை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை
15 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
-
தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் முடிவு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
15 Dec 2025சென்னை, 2026 சட்டமன்ற தேர்தலிலும் ராயபுரத்தில்தான் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை உதவி இயக்குநர் அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
15 Dec 2025சென்னை, ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட நிலையில் கோர்ட் அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
-
யூத எதிர்ப்புவாதத்தை தூண்டுகிறார் ஆஸ்திரேலிய பிரதமர் மீது நெதன்யாகு குற்றச்சாட்டு
15 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.


