எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பாக மத்திய அரசின் தேசிய பட்டியலினர் மற்றும் பழங்குடியினர் மைய திட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு, அரசு சார்பு நிறுவனங்களில் கொள்முதல் செய்யக்கூடிய பொருட்களின் 20மூ குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டும் என்றும் 4மூ பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டுமென்ற திட்டத்தினை பிரபலப்படுத்த கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்ததாவது:
கருத்தரங்கம்
இக்கருத்தரங்கில் குறிப்பிடப்படும் பல்வேறு கருத்துக்களை தொழில் முனைவோர் கவனமுடன் அறிந்து, முன்னேற வேண்டும். இக்கருத்தரங்கத்தின் நோக்கம், மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கலந்து கொண்டு, பயனடைய வேண்டுமென்பதே ஆகும். பழங்குடியின நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அதிகமாக கொள்முதல் செய்து, அதன் மூலம் பழங்குடியின நிறுவனங்கள் மென்மேலும் வளர வேண்டும் என்பதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும். மத்திய அரசு கொள்முதல் செய்யும் பொருட்களில் கட்டாயமாக 4மூ பொருட்களை பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்களிடமிருந்து வாங்க வேண்டும்.பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் தங்கள் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சரியான முறையில் விற்பனை செய்யமுடியாமல், அந்நிறுவனங்களை மூடிவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற இன்னல்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளது. எனவே, பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை கட்டாயமாக ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடும்போது அதில் அவர்களும் கலந்து கொண்டு தங்கள் பொருட்களை கொள்முதல் செய்ய உரிமையோடு கோர வேண்டும்.அவ்வாறு கொள்முதல் செய்யப்பட வேண்டுமெனில், பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவிற்கு தரமாகவும், சிறப்பாகவும் உற்பத்தி செய்ய வேண்டும். தங்கள் பொருளை மற்றவர்கள் தேடி வந்து வாங்கும் அளவிற்கு தரமாக உற்பத்தி செய்யும் தகுதியை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசு சார்பாக நடத்தப்படும் பல்வேறு தொழில் முனைவோர் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தொழில் செய்வதற்கான திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வளர்த்துக் கொண்டால், நாம் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் திட்டங்களின் மூலம் கடன் பெற்று பயனடையலாம்.ஒவ்வொரு மாதமும் நடைபெறும் வங்கியாளர்கள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு ஏற்ப வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், ரூ.10 இலட்சம் வரை வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு, தமிழக அரசின் மான்யமாக 25 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் கீழ் பல்வேறு இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.1 கோடி வரை கடனுதவி பெறலாம். இதில் 25 சதவீதம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், ரூ.25 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் ஊரக பகுதியில் அமையும் தொழில்களுக்கு 35 சவீதமும், நகர பகுதிகளில் அமையும் தொழில்களுக்கு 25 சதவீதமும் மான்யமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. இத்திட்டங்களின் மூலம் கடன் பெற்று இளைஞர்கள் தொழில் தொடங்கி சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.தொடர்ந்து, சிறந்த தொழில் முனைவோர்களுக்கு கலெக்டர் இல.சுப்பிரமணியன், விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.இக்கருத்தரங்கில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜகணேஷ், தமிழ்நாடு தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு தலைவர் லெனின், முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், தாட்கோ மாவட்ட மேலாளர் விஸ்வநாதன், என்எஸ்ஐசி புதுச்சேரி கிளை மேலாளர் ரங்கநாதன், சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், கடலூர் சிட்கோ கிளை மேலாளர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: