எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பாக மத்திய அரசின் தேசிய பட்டியலினர் மற்றும் பழங்குடியினர் மைய திட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு, அரசு சார்பு நிறுவனங்களில் கொள்முதல் செய்யக்கூடிய பொருட்களின் 20மூ குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டும் என்றும் 4மூ பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டுமென்ற திட்டத்தினை பிரபலப்படுத்த கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்ததாவது:
கருத்தரங்கம்
இக்கருத்தரங்கில் குறிப்பிடப்படும் பல்வேறு கருத்துக்களை தொழில் முனைவோர் கவனமுடன் அறிந்து, முன்னேற வேண்டும். இக்கருத்தரங்கத்தின் நோக்கம், மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கலந்து கொண்டு, பயனடைய வேண்டுமென்பதே ஆகும். பழங்குடியின நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அதிகமாக கொள்முதல் செய்து, அதன் மூலம் பழங்குடியின நிறுவனங்கள் மென்மேலும் வளர வேண்டும் என்பதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும். மத்திய அரசு கொள்முதல் செய்யும் பொருட்களில் கட்டாயமாக 4மூ பொருட்களை பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்களிடமிருந்து வாங்க வேண்டும்.பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் தங்கள் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சரியான முறையில் விற்பனை செய்யமுடியாமல், அந்நிறுவனங்களை மூடிவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற இன்னல்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளது. எனவே, பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை கட்டாயமாக ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடும்போது அதில் அவர்களும் கலந்து கொண்டு தங்கள் பொருட்களை கொள்முதல் செய்ய உரிமையோடு கோர வேண்டும்.அவ்வாறு கொள்முதல் செய்யப்பட வேண்டுமெனில், பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவிற்கு தரமாகவும், சிறப்பாகவும் உற்பத்தி செய்ய வேண்டும். தங்கள் பொருளை மற்றவர்கள் தேடி வந்து வாங்கும் அளவிற்கு தரமாக உற்பத்தி செய்யும் தகுதியை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசு சார்பாக நடத்தப்படும் பல்வேறு தொழில் முனைவோர் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தொழில் செய்வதற்கான திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வளர்த்துக் கொண்டால், நாம் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் திட்டங்களின் மூலம் கடன் பெற்று பயனடையலாம்.ஒவ்வொரு மாதமும் நடைபெறும் வங்கியாளர்கள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு ஏற்ப வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், ரூ.10 இலட்சம் வரை வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு, தமிழக அரசின் மான்யமாக 25 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் கீழ் பல்வேறு இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.1 கோடி வரை கடனுதவி பெறலாம். இதில் 25 சதவீதம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், ரூ.25 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் ஊரக பகுதியில் அமையும் தொழில்களுக்கு 35 சவீதமும், நகர பகுதிகளில் அமையும் தொழில்களுக்கு 25 சதவீதமும் மான்யமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. இத்திட்டங்களின் மூலம் கடன் பெற்று இளைஞர்கள் தொழில் தொடங்கி சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.தொடர்ந்து, சிறந்த தொழில் முனைவோர்களுக்கு கலெக்டர் இல.சுப்பிரமணியன், விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.இக்கருத்தரங்கில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜகணேஷ், தமிழ்நாடு தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு தலைவர் லெனின், முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், தாட்கோ மாவட்ட மேலாளர் விஸ்வநாதன், என்எஸ்ஐசி புதுச்சேரி கிளை மேலாளர் ரங்கநாதன், சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், கடலூர் சிட்கோ கிளை மேலாளர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்கு கீழே அடியுங்கள்: ராஜ் தாக்கரே
05 Jul 2025மும்பை : மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என்ற ராஜ் தாக்கரே பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
சுற்றுப்பயணத்திற்கான கட்சிப் பாடல், லோகோவை வெளியிட்டார் இ.பி.எஸ்.
05 Jul 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்துக்கான பாடல் மற்றும் லோகோ அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.
-
எந்த காலக்கெடுவுக்கும் இந்தியா அஞ்சாது: ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி
05 Jul 2025புதுடெல்லி, எந்த காலக்கெடுவுக்கும் அஞ்சி இந்தியா செயல்படாது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.
-
சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை பொதுமக்கள் இன்று பார்க்கலாம்
05 Jul 2025சென்னை : சர்வதேச விண்வெளி மையத்தை இன்று இரவு 8 மணிக்கு முதல் 8.06 மணி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பார்க்கலாம
-
கும்பாபிஷேக விழா: திருச்செந்தூரில் எஸ்.பி. ஆய்வு
05 Jul 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு நடத்தினார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.