எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பாக மத்திய அரசின் தேசிய பட்டியலினர் மற்றும் பழங்குடியினர் மைய திட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு, அரசு சார்பு நிறுவனங்களில் கொள்முதல் செய்யக்கூடிய பொருட்களின் 20மூ குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டும் என்றும் 4மூ பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டுமென்ற திட்டத்தினை பிரபலப்படுத்த கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்ததாவது:
கருத்தரங்கம்
இக்கருத்தரங்கில் குறிப்பிடப்படும் பல்வேறு கருத்துக்களை தொழில் முனைவோர் கவனமுடன் அறிந்து, முன்னேற வேண்டும். இக்கருத்தரங்கத்தின் நோக்கம், மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கலந்து கொண்டு, பயனடைய வேண்டுமென்பதே ஆகும். பழங்குடியின நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அதிகமாக கொள்முதல் செய்து, அதன் மூலம் பழங்குடியின நிறுவனங்கள் மென்மேலும் வளர வேண்டும் என்பதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும். மத்திய அரசு கொள்முதல் செய்யும் பொருட்களில் கட்டாயமாக 4மூ பொருட்களை பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்களிடமிருந்து வாங்க வேண்டும்.பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் தங்கள் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சரியான முறையில் விற்பனை செய்யமுடியாமல், அந்நிறுவனங்களை மூடிவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற இன்னல்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளது. எனவே, பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை கட்டாயமாக ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடும்போது அதில் அவர்களும் கலந்து கொண்டு தங்கள் பொருட்களை கொள்முதல் செய்ய உரிமையோடு கோர வேண்டும்.அவ்வாறு கொள்முதல் செய்யப்பட வேண்டுமெனில், பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவிற்கு தரமாகவும், சிறப்பாகவும் உற்பத்தி செய்ய வேண்டும். தங்கள் பொருளை மற்றவர்கள் தேடி வந்து வாங்கும் அளவிற்கு தரமாக உற்பத்தி செய்யும் தகுதியை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசு சார்பாக நடத்தப்படும் பல்வேறு தொழில் முனைவோர் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தொழில் செய்வதற்கான திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வளர்த்துக் கொண்டால், நாம் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் திட்டங்களின் மூலம் கடன் பெற்று பயனடையலாம்.ஒவ்வொரு மாதமும் நடைபெறும் வங்கியாளர்கள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு ஏற்ப வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், ரூ.10 இலட்சம் வரை வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு, தமிழக அரசின் மான்யமாக 25 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் கீழ் பல்வேறு இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.1 கோடி வரை கடனுதவி பெறலாம். இதில் 25 சதவீதம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், ரூ.25 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் ஊரக பகுதியில் அமையும் தொழில்களுக்கு 35 சவீதமும், நகர பகுதிகளில் அமையும் தொழில்களுக்கு 25 சதவீதமும் மான்யமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. இத்திட்டங்களின் மூலம் கடன் பெற்று இளைஞர்கள் தொழில் தொடங்கி சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.தொடர்ந்து, சிறந்த தொழில் முனைவோர்களுக்கு கலெக்டர் இல.சுப்பிரமணியன், விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.இக்கருத்தரங்கில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜகணேஷ், தமிழ்நாடு தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு தலைவர் லெனின், முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், தாட்கோ மாவட்ட மேலாளர் விஸ்வநாதன், என்எஸ்ஐசி புதுச்சேரி கிளை மேலாளர் ரங்கநாதன், சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், கடலூர் சிட்கோ கிளை மேலாளர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் எதிரொலி: 22 கோடி ரூபாய் வரை இழப்பு
18 Nov 2025சென்னை: அண்டை மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
18 Nov 2025தென்காசி: கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பா?
18 Nov 2025சென்னை, கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? - வாக்காளர்களுக்கு வந்தது புது சிக்கல்
18 Nov 2025சென்னை : வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? வாக்காளர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும்: இனி இருமல் மருந்து வாங்க வருகிறது புதிய கட்டுப்பாடு
18 Nov 2025புதுடெல்லி, மருத்துவர் பரிந்துறையின்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது புதிய கட்டுப்பாடு அமழுக்கு வருகிறது.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு
18 Nov 2025மேட்டூர் : மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
-
நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் இடிப்பு
18 Nov 2025நீலகிரி: நீலகிரியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் ஐகோர்ட் உத்தரவின்படி இடிக்கப்பட்டது.
-
என்னுடைய கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கர்நாடக சிறுவன்
18 Nov 2025பெங்களூரு: கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி பிரதமர் மோடிக்கு சிறுவன் கடிதம் எழுதியுள்ளது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் செங்கோட்டையன் நம்பிக்கை
18 Nov 2025மதுரை: ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் அ.தி.மு.க.வில் இணைவது தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தி.மு.க. தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு : கோவையில் வெற்றி பெற செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தல்
18 Nov 2025சென்னை : தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
-
இந்தோனேசியா: நிலச்சரிவில் 18 பேர் பலி
18 Nov 2025ஜாவா: இந்தோனேசியாவில் நிலச்சரிவில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஐதராபாத் அணி கேப்டன் அறிவிப்பு
18 Nov 2025ஐதராபாத்: வரும் ஐ.பி.எல். சீசனிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ்தான் செயல்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி சம்பவத்தில் தொடரும் விசாரணை: இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை போன்று நடத்தும் சதி திட்டம் அம்பலம்
18 Nov 2025புதுடெல்லி: இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்தி ட்ரோன் தாக்குதல்களை போல் தாக்குதல் நடத்த டெல்லி வெடிகுணடு தாக்குதலுக்கு முன் பயங்கர சதி திட்டம் திட்டியது தற்போது விசாரணையில
-
தமிழக வரலாற்றிலேயே முதல் முறை: த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை
18 Nov 2025சென்னை; தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
-
சென்னை பெருநகரத்திற்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்கள் வெளியீடு
18 Nov 2025சென்னை: சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
வருகிற 25-ம் தேதி வரை சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும்
18 Nov 2025சென்னை: சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் வருகிற 25-ந் தேதி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம்: அமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்
18 Nov 2025சென்னை: மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் வர்த்தகத்துறை செயலாளர் தகவல்
18 Nov 2025புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் நக்சலைட் தளபதி சுட்டுக்கொலை
18 Nov 2025ஐதராபாத்: ஆந்திராவில் நக்சலைட் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன்: 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம்
18 Nov 2025மும்பை: ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசனில் இடம் பெறவுள்ள 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. சி.எஸ்.கே.
-
அதிபர் ஜெலன்ஸ்கி சுற்றுப்பயணம்: பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குகிறது உக்ரைன்
18 Nov 2025பாரீஸ் : பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்கள் வாங்க உக்ரைன் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
சபரிமலை கோவிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் : பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் குவிப்பு
18 Nov 2025சபரிமலை : வருடாந்திர மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
வரும் ஜனவரிக்குள் வருமான வரி கணக்கு படிவங்கள் வெளியிடப்படும் நேரடி வரிகள் வாரியம் தகவல்
18 Nov 2025புதுடெல்லி: வருமான வரி கணக்கு படிவங்கள் ஜனவரிக்குள் வெளியிடப்படும் என்று நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.


