முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை   முன்னிட்டு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை,  போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும்  யூத் ரெட் கிராஸ் ஆகியோர் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி கீழக்கரை ஆகிய 4 கல்லூரிகளில் இருந்து  400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியை சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் இந்தியன் ரெட் கிராஸ் மாவட்ட சேர்மன் எஸ். ஹாரூன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா துவக்கி வைத்தார். போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரங்களை காவல் கண்காணிப்பாளர் வெளியிட கலால் துறை உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பால்மாறன் ஆகியோர் பெற்று மக்களிடம் வி‌நியோகித்தனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்களை கோஷமிட்டு சென்றனர். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது.
    நிகழ்ச்சியில், மது விலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் முனைவர் வெள்ளத்துரை, ராமநாதபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளி விநாயகம், ஒருங்கிணைப்பாளர்கள் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முனைவர் ஆனந்த், தாசீம் பீவி மகளிர் கல்லூரி முனைவர் ஸ்ரீமதி மற்றும் ரெட் கிராஸ் ஆயுட் கால உறுப்பினர் மலைக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் ஆர். முத்து லெட்சுமி, ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் ரெட் கிராஸ் ஆயுட் கால உறுப்பினர்கள் எல். கருப்பசாமி வி. சதீஷ் குமார் ஆகியோர் பேரணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து