எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பர்மிங்ஹாம் : எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு மிக அருகில் வந்து இந்திய அணி போராடி தோல்வி தழுவியது. 194 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி 110/5 என்ற நிலையிலிருந்து 54.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 முன்னிலை பெற்றது. தனது 1000-வது போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.இந்தத் தோல்வி குறித்து இந்திய அணி பெரிதாக ஏமாற்றமடைய வேண்டியத் தேவையில்லை, மிக அருமையான தொடக்கமாக இந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் அமைந்தது, எப்போது வேண்டுமானாலும் இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இப்போது நம் பவுலர்களுக்கு வந்திருக்கும்.
அதேசமயம், பேட்ஸ்மென்கள் இன்னும் தங்கள் தரத்தை உயர்த்த வேண்டும், குறிப்பாக தவண், ராகுல், விஜய், ரஹானே போன்ற 4 முக்கிய வீரர்கள் இரு இன்னிங்ஸ்களிலும் சொதப்பினால் விராட் கோலி மட்டும் தனி நபராக எப்படி வெற்றி பெற முடியும்?
நேற்று இஷாந்த் சர்மாவுக்கு ஸ்ட்ரைக்கைக் கொடுத்ததோடு அவரே ரஷீத்தை தைரியமாக ஸ்வீப் ஆடியபோது ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தன் வசம் வைக்காமல் 2 ரன் ஓடி இசாந்திடம் ஸ்ட்ரைக்கைக் கொடுத்தது, சமயோசிதமற்ற மவுட்டீகமே. அதே ஓவரில் இஷாந்த் சர்மா, ரஷீத்திடம் எல்.பி.ஆகி வெளியேறினார்.
8 விக்கெட்டுகள் இருக்கும்போது இஷாந்தை ஸ்ட்ரைக்கிலிருந்து காத்து ஆடியிருக்க வேண்டும் 9 விக்கெட்டுகள் விழுந்திருக்கும் நிலையில் கரணம் தப்பினால் மரணம், 2ம் வாய்ப்பு கிடையாது எனும்போது உமேஷ் யாதவ்வை வைத்துக் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது.
மேலும் இந்தமாதிரி இலக்கையெல்லாம் கொஞ்சம் அடித்து ஆட வேண்டும். அச்சமற்ற கிரிக்கெட் ஆட வேண்டும், தொடர்ந்து அந்த லெந்த்தில் அவர்களை வீச அனுமதித்திருக்கக் கூடாது, வித்தியாசமாக ஏதாவது செய்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
194 ரன்கள் இலக்குடன் 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் சேர்த்திருந்தது. 84 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டநிலையில் 4-வது நாள் ஆட்டத்தைக் கோலி 43 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களிலும் தொடர்ந்தனர்.
எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் காலை நேரத்தில் 20 ஓவர்கள் வரை வேகப்பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும், ஸ்விங் நன்றாக எடுக்கும் என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்றார்போல், ஸ்டோக்ஸ், பிராட், ஆன்டர்ஸன் பந்துவீச்சில் அனல் பறந்தது.
நினைத்தது போல ஆன்டர்ஸன் முதல் ஓவரில் மிகுந்த கட்டுக்கோப்பாக வீசினார். லைன் அன்ட் லென்த்தை விட்டு விலக்காமல் வீசியதால், தினேஷ் திணறினார்.
முதல் பந்திலிருந்து அவுட் சைடாக விலகிச் சென்ற பந்தை தொட முயன்று தயங்கி, தயங்கி விளையாடிய தினேஷ் கார்த்திக், கடைசி பந்தை தொட முற்பட்டு, பந்து பேட்டை முத்தமிட்டு கீப்பரின் கையில் தஞ்சமடைந்தது. 20 ரன்களில் தினேஷ் கார்த்திக் வெளியேறினார்.
அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவும், கோலியும் நிதானமாக ஆடினார். இங்கிலாந்து வீரர்களின் கவனம் முழுவதும் கோலி மீதே இருந்தது. எப்படியாவது கோலியை ஆட்டமிழக்கச் செய்ய நெருக்கமாகப் பந்துவீசினார்கள். இருமுறை கோலிக்கு எல்பிடபியுள் அப்பீல் செய்தும் அவருக்கு அது சாதகமாக அமைந்தது.
அதேசமயம், ஹர்திக் பாண்டியா தனக்கே உரிய ஸ்டையிலில் விளையாடி, பிராட் பந்தில் இரு அருமையான பவுண்டரிகளை விளாசினார். கோலியும் பவுண்டரி அடித்து அரைசதத்தை நிறைவு செய்தார். இந்திய அணி இலக்கை மெதுவாக நெருங்கியது. ரசிகர்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், 47-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசி இந்த நம்பிக்கையை உடைத்தார்.
விராட் கோலி முதல் இன்னிங்ஸில் கவுரமான ஸ்கோரை எட்ட முக்கியக் காரணமாக அமைந்தார், 2-வது இன்னிங்ஸிலும் வெற்றிக்குப் பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கையை உடைத்தார் ஸ்டோக்ஸ்.
விராட் கோலி வெளியேறியவுடன் இங்கிலாந்து வீரர்களுக்கு உத்வேகமும், புதிய நம்பிக்கையும் பிறந்துவிட்டது. அடுத்துக் களமிறங்கிய முகமது ஷமிக்கு ஒரு பவுன்சரை எழுப்பித் தொடவைத்து வெளியேற்றினார் ஸ்டோக்ஸ். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்ததால், இந்திய அணியின் தோல்வி முடிவானது.
அடுத்து வந்த இசாந்த் சர்மா, ஹர்திக் பாண்டியாவுக்கு ஒத்துழைத்து ஆடினார். ஆனால் டெயில் என்டர்கள் பேட் செய்யும்போது, பேட்ஸ்மேன்கள் தங்களுக்கு ஆதரவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முதல் இன்னிங்ஸில் இதை கேப்டன் கோலி சரியாகச் செய்து வீரர்களுக்குப் பாடம் நடத்தினார். ஆனால், இதைப் புரிந்து கொள்ளாத ஹர்திக் பாண்டியா, சாம் கரன், ராஷித் பந்துவீச்சை இசாந்த் சர்மாவை எதிர்கொள்ள வைத்தது பெரிய முட்டாள்தனமாகும்.
ஒரு பந்தில் ஒரு ரன்னை எடுக்கவைத்துவிட்டு மீதமுள்ள பந்துகளை ஹர்திக் பாண்டியா எதிர்கொண்டிருக்க வேண்டும்.அதைச் செய்யவில்லை. அந்த சூழலிலும் இசாந்த் சர்மா 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால், ஆதில் ராஷித் சுழற்பந்துவீச்சுக்கு இரையாகி எல்பிடபிள்யு முறையில் இசாந்த் 11 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்தார். இப்போதும் அதேத் தவறை ஹர்திக் பாண்டியா செய்து, உமேஷ் யாதவை பந்துகளை எதிர்கொள்ளச் செய்தார். ரன்களும் சேரவில்லை. பென் ஸ்டோக்ஸ் வீசிய ஓவரில் முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஹர்திக் பாண்டியா 31 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் தோல்வி முடிவுக்கு வந்தது.
இந்திய அணி 54.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 31 ரன்களில் தோல்வி அடைந்தது. சாம் கரன் ஆட்டநாயகனாகன் ஆனார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
ரூ.42.45 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
24 Oct 2025சென்னை, ரூ.42.45 கோடியில் நடந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொல்காப்பியப் பூங்காவை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை?
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விவரத்தை தெரித்
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
24 Oct 2025மேட்டூர்: வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிப்பட்டுள்ளதை அடுத்து சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி உள்ளிட
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச
-
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: வங்கக்கடலில் அக். 27-ம் தேதி உருவாகிறது 'மோந்தா' புயல் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
24 Oct 2025சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
24 Oct 2025டெல்லி: டெல்லியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வெள்ளிக்கிழமை காலை நான்கு பள்ளிகளுக்கு வந்த மின்னஞ்சல்களால் பரபரப்பு நிலவியது.
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்கு
24 Oct 2025பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
24 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து அங்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்க
-
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


