எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பர்மிங்ஹாம் : எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு மிக அருகில் வந்து இந்திய அணி போராடி தோல்வி தழுவியது. 194 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி 110/5 என்ற நிலையிலிருந்து 54.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 முன்னிலை பெற்றது. தனது 1000-வது போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.இந்தத் தோல்வி குறித்து இந்திய அணி பெரிதாக ஏமாற்றமடைய வேண்டியத் தேவையில்லை, மிக அருமையான தொடக்கமாக இந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் அமைந்தது, எப்போது வேண்டுமானாலும் இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இப்போது நம் பவுலர்களுக்கு வந்திருக்கும்.
அதேசமயம், பேட்ஸ்மென்கள் இன்னும் தங்கள் தரத்தை உயர்த்த வேண்டும், குறிப்பாக தவண், ராகுல், விஜய், ரஹானே போன்ற 4 முக்கிய வீரர்கள் இரு இன்னிங்ஸ்களிலும் சொதப்பினால் விராட் கோலி மட்டும் தனி நபராக எப்படி வெற்றி பெற முடியும்?
நேற்று இஷாந்த் சர்மாவுக்கு ஸ்ட்ரைக்கைக் கொடுத்ததோடு அவரே ரஷீத்தை தைரியமாக ஸ்வீப் ஆடியபோது ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தன் வசம் வைக்காமல் 2 ரன் ஓடி இசாந்திடம் ஸ்ட்ரைக்கைக் கொடுத்தது, சமயோசிதமற்ற மவுட்டீகமே. அதே ஓவரில் இஷாந்த் சர்மா, ரஷீத்திடம் எல்.பி.ஆகி வெளியேறினார்.
8 விக்கெட்டுகள் இருக்கும்போது இஷாந்தை ஸ்ட்ரைக்கிலிருந்து காத்து ஆடியிருக்க வேண்டும் 9 விக்கெட்டுகள் விழுந்திருக்கும் நிலையில் கரணம் தப்பினால் மரணம், 2ம் வாய்ப்பு கிடையாது எனும்போது உமேஷ் யாதவ்வை வைத்துக் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது.
மேலும் இந்தமாதிரி இலக்கையெல்லாம் கொஞ்சம் அடித்து ஆட வேண்டும். அச்சமற்ற கிரிக்கெட் ஆட வேண்டும், தொடர்ந்து அந்த லெந்த்தில் அவர்களை வீச அனுமதித்திருக்கக் கூடாது, வித்தியாசமாக ஏதாவது செய்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
194 ரன்கள் இலக்குடன் 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் சேர்த்திருந்தது. 84 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டநிலையில் 4-வது நாள் ஆட்டத்தைக் கோலி 43 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களிலும் தொடர்ந்தனர்.
எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் காலை நேரத்தில் 20 ஓவர்கள் வரை வேகப்பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும், ஸ்விங் நன்றாக எடுக்கும் என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்றார்போல், ஸ்டோக்ஸ், பிராட், ஆன்டர்ஸன் பந்துவீச்சில் அனல் பறந்தது.
நினைத்தது போல ஆன்டர்ஸன் முதல் ஓவரில் மிகுந்த கட்டுக்கோப்பாக வீசினார். லைன் அன்ட் லென்த்தை விட்டு விலக்காமல் வீசியதால், தினேஷ் திணறினார்.
முதல் பந்திலிருந்து அவுட் சைடாக விலகிச் சென்ற பந்தை தொட முயன்று தயங்கி, தயங்கி விளையாடிய தினேஷ் கார்த்திக், கடைசி பந்தை தொட முற்பட்டு, பந்து பேட்டை முத்தமிட்டு கீப்பரின் கையில் தஞ்சமடைந்தது. 20 ரன்களில் தினேஷ் கார்த்திக் வெளியேறினார்.
அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவும், கோலியும் நிதானமாக ஆடினார். இங்கிலாந்து வீரர்களின் கவனம் முழுவதும் கோலி மீதே இருந்தது. எப்படியாவது கோலியை ஆட்டமிழக்கச் செய்ய நெருக்கமாகப் பந்துவீசினார்கள். இருமுறை கோலிக்கு எல்பிடபியுள் அப்பீல் செய்தும் அவருக்கு அது சாதகமாக அமைந்தது.
அதேசமயம், ஹர்திக் பாண்டியா தனக்கே உரிய ஸ்டையிலில் விளையாடி, பிராட் பந்தில் இரு அருமையான பவுண்டரிகளை விளாசினார். கோலியும் பவுண்டரி அடித்து அரைசதத்தை நிறைவு செய்தார். இந்திய அணி இலக்கை மெதுவாக நெருங்கியது. ரசிகர்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், 47-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசி இந்த நம்பிக்கையை உடைத்தார்.
விராட் கோலி முதல் இன்னிங்ஸில் கவுரமான ஸ்கோரை எட்ட முக்கியக் காரணமாக அமைந்தார், 2-வது இன்னிங்ஸிலும் வெற்றிக்குப் பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கையை உடைத்தார் ஸ்டோக்ஸ்.
விராட் கோலி வெளியேறியவுடன் இங்கிலாந்து வீரர்களுக்கு உத்வேகமும், புதிய நம்பிக்கையும் பிறந்துவிட்டது. அடுத்துக் களமிறங்கிய முகமது ஷமிக்கு ஒரு பவுன்சரை எழுப்பித் தொடவைத்து வெளியேற்றினார் ஸ்டோக்ஸ். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்ததால், இந்திய அணியின் தோல்வி முடிவானது.
அடுத்து வந்த இசாந்த் சர்மா, ஹர்திக் பாண்டியாவுக்கு ஒத்துழைத்து ஆடினார். ஆனால் டெயில் என்டர்கள் பேட் செய்யும்போது, பேட்ஸ்மேன்கள் தங்களுக்கு ஆதரவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முதல் இன்னிங்ஸில் இதை கேப்டன் கோலி சரியாகச் செய்து வீரர்களுக்குப் பாடம் நடத்தினார். ஆனால், இதைப் புரிந்து கொள்ளாத ஹர்திக் பாண்டியா, சாம் கரன், ராஷித் பந்துவீச்சை இசாந்த் சர்மாவை எதிர்கொள்ள வைத்தது பெரிய முட்டாள்தனமாகும்.
ஒரு பந்தில் ஒரு ரன்னை எடுக்கவைத்துவிட்டு மீதமுள்ள பந்துகளை ஹர்திக் பாண்டியா எதிர்கொண்டிருக்க வேண்டும்.அதைச் செய்யவில்லை. அந்த சூழலிலும் இசாந்த் சர்மா 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால், ஆதில் ராஷித் சுழற்பந்துவீச்சுக்கு இரையாகி எல்பிடபிள்யு முறையில் இசாந்த் 11 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்தார். இப்போதும் அதேத் தவறை ஹர்திக் பாண்டியா செய்து, உமேஷ் யாதவை பந்துகளை எதிர்கொள்ளச் செய்தார். ரன்களும் சேரவில்லை. பென் ஸ்டோக்ஸ் வீசிய ஓவரில் முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஹர்திக் பாண்டியா 31 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் தோல்வி முடிவுக்கு வந்தது.
இந்திய அணி 54.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 31 ரன்களில் தோல்வி அடைந்தது. சாம் கரன் ஆட்டநாயகனாகன் ஆனார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.