எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பர்மிங்ஹாம் : எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு மிக அருகில் வந்து இந்திய அணி போராடி தோல்வி தழுவியது. 194 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி 110/5 என்ற நிலையிலிருந்து 54.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 முன்னிலை பெற்றது. தனது 1000-வது போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.இந்தத் தோல்வி குறித்து இந்திய அணி பெரிதாக ஏமாற்றமடைய வேண்டியத் தேவையில்லை, மிக அருமையான தொடக்கமாக இந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் அமைந்தது, எப்போது வேண்டுமானாலும் இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இப்போது நம் பவுலர்களுக்கு வந்திருக்கும்.
அதேசமயம், பேட்ஸ்மென்கள் இன்னும் தங்கள் தரத்தை உயர்த்த வேண்டும், குறிப்பாக தவண், ராகுல், விஜய், ரஹானே போன்ற 4 முக்கிய வீரர்கள் இரு இன்னிங்ஸ்களிலும் சொதப்பினால் விராட் கோலி மட்டும் தனி நபராக எப்படி வெற்றி பெற முடியும்?
நேற்று இஷாந்த் சர்மாவுக்கு ஸ்ட்ரைக்கைக் கொடுத்ததோடு அவரே ரஷீத்தை தைரியமாக ஸ்வீப் ஆடியபோது ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தன் வசம் வைக்காமல் 2 ரன் ஓடி இசாந்திடம் ஸ்ட்ரைக்கைக் கொடுத்தது, சமயோசிதமற்ற மவுட்டீகமே. அதே ஓவரில் இஷாந்த் சர்மா, ரஷீத்திடம் எல்.பி.ஆகி வெளியேறினார்.
8 விக்கெட்டுகள் இருக்கும்போது இஷாந்தை ஸ்ட்ரைக்கிலிருந்து காத்து ஆடியிருக்க வேண்டும் 9 விக்கெட்டுகள் விழுந்திருக்கும் நிலையில் கரணம் தப்பினால் மரணம், 2ம் வாய்ப்பு கிடையாது எனும்போது உமேஷ் யாதவ்வை வைத்துக் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது.
மேலும் இந்தமாதிரி இலக்கையெல்லாம் கொஞ்சம் அடித்து ஆட வேண்டும். அச்சமற்ற கிரிக்கெட் ஆட வேண்டும், தொடர்ந்து அந்த லெந்த்தில் அவர்களை வீச அனுமதித்திருக்கக் கூடாது, வித்தியாசமாக ஏதாவது செய்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
194 ரன்கள் இலக்குடன் 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் சேர்த்திருந்தது. 84 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டநிலையில் 4-வது நாள் ஆட்டத்தைக் கோலி 43 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களிலும் தொடர்ந்தனர்.
எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் காலை நேரத்தில் 20 ஓவர்கள் வரை வேகப்பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும், ஸ்விங் நன்றாக எடுக்கும் என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்றார்போல், ஸ்டோக்ஸ், பிராட், ஆன்டர்ஸன் பந்துவீச்சில் அனல் பறந்தது.
நினைத்தது போல ஆன்டர்ஸன் முதல் ஓவரில் மிகுந்த கட்டுக்கோப்பாக வீசினார். லைன் அன்ட் லென்த்தை விட்டு விலக்காமல் வீசியதால், தினேஷ் திணறினார்.
முதல் பந்திலிருந்து அவுட் சைடாக விலகிச் சென்ற பந்தை தொட முயன்று தயங்கி, தயங்கி விளையாடிய தினேஷ் கார்த்திக், கடைசி பந்தை தொட முற்பட்டு, பந்து பேட்டை முத்தமிட்டு கீப்பரின் கையில் தஞ்சமடைந்தது. 20 ரன்களில் தினேஷ் கார்த்திக் வெளியேறினார்.
அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவும், கோலியும் நிதானமாக ஆடினார். இங்கிலாந்து வீரர்களின் கவனம் முழுவதும் கோலி மீதே இருந்தது. எப்படியாவது கோலியை ஆட்டமிழக்கச் செய்ய நெருக்கமாகப் பந்துவீசினார்கள். இருமுறை கோலிக்கு எல்பிடபியுள் அப்பீல் செய்தும் அவருக்கு அது சாதகமாக அமைந்தது.
அதேசமயம், ஹர்திக் பாண்டியா தனக்கே உரிய ஸ்டையிலில் விளையாடி, பிராட் பந்தில் இரு அருமையான பவுண்டரிகளை விளாசினார். கோலியும் பவுண்டரி அடித்து அரைசதத்தை நிறைவு செய்தார். இந்திய அணி இலக்கை மெதுவாக நெருங்கியது. ரசிகர்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், 47-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசி இந்த நம்பிக்கையை உடைத்தார்.
விராட் கோலி முதல் இன்னிங்ஸில் கவுரமான ஸ்கோரை எட்ட முக்கியக் காரணமாக அமைந்தார், 2-வது இன்னிங்ஸிலும் வெற்றிக்குப் பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கையை உடைத்தார் ஸ்டோக்ஸ்.
விராட் கோலி வெளியேறியவுடன் இங்கிலாந்து வீரர்களுக்கு உத்வேகமும், புதிய நம்பிக்கையும் பிறந்துவிட்டது. அடுத்துக் களமிறங்கிய முகமது ஷமிக்கு ஒரு பவுன்சரை எழுப்பித் தொடவைத்து வெளியேற்றினார் ஸ்டோக்ஸ். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்ததால், இந்திய அணியின் தோல்வி முடிவானது.
அடுத்து வந்த இசாந்த் சர்மா, ஹர்திக் பாண்டியாவுக்கு ஒத்துழைத்து ஆடினார். ஆனால் டெயில் என்டர்கள் பேட் செய்யும்போது, பேட்ஸ்மேன்கள் தங்களுக்கு ஆதரவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முதல் இன்னிங்ஸில் இதை கேப்டன் கோலி சரியாகச் செய்து வீரர்களுக்குப் பாடம் நடத்தினார். ஆனால், இதைப் புரிந்து கொள்ளாத ஹர்திக் பாண்டியா, சாம் கரன், ராஷித் பந்துவீச்சை இசாந்த் சர்மாவை எதிர்கொள்ள வைத்தது பெரிய முட்டாள்தனமாகும்.
ஒரு பந்தில் ஒரு ரன்னை எடுக்கவைத்துவிட்டு மீதமுள்ள பந்துகளை ஹர்திக் பாண்டியா எதிர்கொண்டிருக்க வேண்டும்.அதைச் செய்யவில்லை. அந்த சூழலிலும் இசாந்த் சர்மா 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால், ஆதில் ராஷித் சுழற்பந்துவீச்சுக்கு இரையாகி எல்பிடபிள்யு முறையில் இசாந்த் 11 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்தார். இப்போதும் அதேத் தவறை ஹர்திக் பாண்டியா செய்து, உமேஷ் யாதவை பந்துகளை எதிர்கொள்ளச் செய்தார். ரன்களும் சேரவில்லை. பென் ஸ்டோக்ஸ் வீசிய ஓவரில் முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஹர்திக் பாண்டியா 31 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் தோல்வி முடிவுக்கு வந்தது.
இந்திய அணி 54.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 31 ரன்களில் தோல்வி அடைந்தது. சாம் கரன் ஆட்டநாயகனாகன் ஆனார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.