எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கர்னூல் மாவட்ட ஆட்சியர் ஏ. சிறி கூறியுள்ளார்.
சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதால், பலியானவர்களை அடையாளம் காணும் முயற்சியில் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடங்கியிருப்பதாக ஆந்திரம் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் ஐதராபாத்திலிருந்து பெங்களூருக்குச் சென்ற குளிர்சாதன வசதி கொண்ட தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் தீக்காயமடைந்தனர்.
இந்த கோர பேருந்து தீ விபத்து குறித்து கர்னூல் மாவட்ட ஆட்சியர் ஏ. சிறி கூறியதாவது: ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் பின்னர் பேருந்துக்கு அடியில் சென்று பேருந்தின் டீசல் டேங்கில் மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. பேருந்து தீப்பிடித்த சில நிமிடங்களிலேயே பேருந்து முழுவதும் தீ பரவியது.
இந்த சம்பவத்தின் போது பேருந்தில் சுமார் 42 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 23 பேர் பலியாகினர், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 11 பேரின் கருகிய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதால், பலியானவர்களை அடையாளம் காணும் முயற்சியில் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது என்று விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பிறகு அவர் கூறினார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கர்னூல் மாவட்டம் தண்டரபாடு கிராமத்தை சேர்ந்த டிவி9 காலனியைச் சேர்ந்த கிரானைட் தொழிலாளி சிவசங்கர் (21) பலியாகியுள்ளார். தீ வேகமாக பரவியபோதிலும், பேருந்தில் சிக்கிக் கொண்டு கூச்சலிட்ட பயணிகள் உள்ளூர் மக்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு பல பயணிகளை மீட்டனர். தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் மற்றும் மருத்துவக் குழுக்களின் கூட்டு முயற்சியால் இரவு முழுவதும் மீட்புப் பணிகள் நடைபெற்றன, அவர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
2 பேர் தமிழர்கள்
ஆந்திராவில் பேருந்து தீ பிடித்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த தலா 6 பேர், தமிழ்நாடு, கர்நாடகாவைச் சேர்ந்த தலா 2 பேர், பீகார், ஒடிசாவைச் சேர்ந்த தலா ஒருவர், அடையாளம் காணப்படாத ஒருவர் என 23 பேர் உயிரிழந்தனர். பேருந்து தீ பிடித்த போது, தப்பி ஓடிய ஓட்டுனர்கள் இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


