முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலஸ்தீன அகதிகளுக்கு உதவி செய்த ஐ.நா. பிரிவுக்கு அளித்த அனைத்து உதவிகளும் நிறுத்தம்: அமெரிக்கா

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரண உதவிகளைச் செய்து வரும் ஐ.நா. பிரிவுக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து உதவிகளையும் நிறுத்துவதாக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹெதர் நாவெர்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பிரிவு அமைப்பிடமிருந்து உதவி பெறுவோர் வரைமுறையோ, முடிவோ இல்லாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த அமைப்பு செயல்படும் விதமோ, அது நிதியை கையாளும் விதமோ சரி செய்ய முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பேரிடர் காலங்களில் செயல்படுவதைப் போலவே அந்த அமைப்பு எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதன் செயல்பாடுகளை நன்கு ஆய்வு செய்த அமெரிக்க அரசு, அந்த அமைப்புக்கு இனியும் உதவிகள் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. அந்த அமைப்பின் தோல்வியினால் அப்பாவி பாலஸ்தீனர்கள், குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அமெரிக்கா மிகுந்த கவலை கொண்டுள்ளது என்றார் ஹெதர்.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. உதவி அமைப்புக்கு பெரும்பான்மை உதவிகளை அளித்து வந்த அமெரிக்கா, திடீரென உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது அந்த அமைப்பை சிக்கலில் தள்ளியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து