முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கை மாவட்டத்தில் கஜா புயலினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி: அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2018      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை - சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கஜா புயலினால் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமை வகித்தார். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்  .பிஆர்.செந்தில்நாதன்   முன்னிலை வகித்தார்.   கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்  நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவிக்கையில்,
     தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கஜா புயலினால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மனித உயிரிழப்பு மற்றும் கால்நடை உயிரிழப்பு, வீடுகள் பாதிப்பு போன்றவற்றிற்கு உடனடியாக நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கம் காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகியப் பகுதிகளில் அதிகளவில் இருந்தன. உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு இரு தினங்களுக்குள் சரிசெய்யப்பட்டுவிட்டன. ஒரு சில பகுதிகளில் மின்;வாரியப் பணிகள் நடைபெற்து வருகிறது. அதுவும் விரைந்து முடிக்கப்படும். கடந்த கஜா புயலின் தாக்கத்தால் சிவகங்கை மற்றும் திருப்பத்தூரில் உயிரிழந்த இருவருக்கும் தலா ரூ.10 இலட்சம் வீதம் ரூ.20 இலட்சம் உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது. அதேபோல் சிவகங்கை நகர் தெப்பக்குளத்தில் உயிரிழந்த ஒருவருக்கு ரூ.4 இலட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கால்நடைகள் உயிர் சேதமடைந்ததை பதிவு செய்து அதன்படி திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகியப் பகுதிகளில் 3 கால்நடைகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.90 ஆயிரம் நிதியுதவியும், 6 ஆடுகள் உயிரிழப்பிற்கு ரூ.18 ஆயிரம் நிதியுதவியும், வீடுகள் சேதமடைந்ததற்காக முதற்கட்;டமாக 40 வீடுகளுக்கு ரூ.3.25 இலட்சம் நிவாரணத் தொகையும் மற்றும் 10 கிலோ அரிசி, வேட்டி, சேலையும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் எஸ்.புதூர், சிங்கம்புணரி, காரைக்குடி பகுதியில் மின் இணைப்பு இல்லாத இடங்களில் நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் சுத்தம் செய்யப்பட்ட குடிநீர் டேங்கர் லாரிகளில் வழங்கப்பட்டு வருகிறது.
தோட்டக்கலைத்துறையின் மூலம் சுமார் 100 ஏக்கருக்கு மேல் தென்னை, வாழை, பப்பாளி பயிர்கள் சேதமடைந்துள்ளதை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வேளாண்மைத்துறையின் மூலம் பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வீடுகள் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மொத்த மதிப்பீடு தயார் செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு எடுத்துச் சென்று அனைவருக்கும் உரிய இழப்பீடு பெற்றும் தரப்படும் என மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திரு.ஜி.பாஸ்கரன் அவர்கள் தெரிவித்தார்.
      தொடர்ந்து மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் காரைக்குடி பகுதியில் மின் இணைப்பு பணிகள் சரிசெய்யப்பட்டு வருவதை பார்வையிட்டார்.
      இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கேஆர்.பெரியகருப்பன், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆஷா அஜீத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், காரைக்குடி ஆவின் தலைவர் அசோகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து