முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரியங்கா - ராகுல் காந்தி பிப். 4-ல் கூட்டாக பேட்டி

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      அரசியல்
Image Unavailable

லக்னோ, கிழக்கு உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா, தனது சகோதரரும், கட்சி தலைவருமான ராகுலுடன் இணைந்து பிப்ரவரி மாதம் 4-ம் தேதி லக்னோவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.

ராகுலும், பிரியங்காவும் இணைந்து செய்தியாளர்களை சந்திப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன் கடந்த 2004-ம் ஆண்டில் பிரியங்கா, ராகுல் அரசியலுக்கு வருவதை முறைப்படி அறிவித்ததுடன், அமேதி தொகுதி வேட்பாளராகவும் ராகுலை அறிமுகம் செய்து வைத்தார். இந்த முறை, பிரியங்கா அரசியலுக்கு வருவதை ராகுல் முறைப்படி செய்தியாளர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து