முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வை பொறுத்த வரை கமல்ஹாசன் சொன்னது உண்மை - அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தி.மு.க.வை பொறுத்த வரை கமல்ஹாசன் சொன்னது உண்மை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து மெட்ரோ ரயில் தொடங்கி வைக்கப்படுவது மக்களுக்கு பயனுள்ளது. வடசென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமானநிலையத்திற்கு எந்த தடையும் இல்லாமல் 35 நிமிடத்தில் சென்று விடலாம், அடுத்தது விம்கோ நகருக்கும் மெட்ரோ ரயில் விரைவில் தயாராகி விடும். 2020 - ஆம் ஆண்டுக்குள் விம்கோ நகருக்கும் மெட்ரோ ரயில் வசதிகள் கிடைத்து விடும்.இதனால் வடசென்னை மிகப்பெரிய பொருளாதார மண்டலமாக உருவாகி விடும்.

தி.மு.க.- அ.தி.மு.க. இரண்டும் ஊழல் கட்சிகள் என்று நடிகர் கமல் கூறியிருப்பது பற்றி நிருபர்கள் கேட்டபோது, தி.மு.க.வை பொறுத்தவரை கமல் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள். ஊறித்திளைத்தவர்களின் கட்சி தி.மு.க. அ.தி.மு.க.வை பொறுத்தவரை எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டும் இதுவரை இல்லை.  என்றார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து