எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து காலை, இரவு வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். திருவிழா தொடங்கிய நாளில் இருந்து மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது. நாள்தோறும் சுவாமி ஊர்வலத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாசி வீதிகளில் திரண்டு வந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
பட்டாபிஷேகம்
நேற்று முன்தினம் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. கோவில் அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் நடந்த இந்த விழாவில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ராமர் கிரீடம் சூட்டப்பட்டு செங்கோல் வழங்கி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். பட்டாபிஷேகம் சூட்டப்பட்டதில் இருந்து ஜனவரி மாதம் வரை 4 மாதங்களுக்கு மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குகிறது என்பது ஐதீகம்.
திருக்கல்யாணம்
நேற்று திருவிழாவின் 9-ம் நாளை முன்னிட்டு காலையில் மரவர்ண சப்பரத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தனர். மாலையில் இந்திர விமானத்தில் சுவாமி, அம்மன் 4 மாசி வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது மீனாட்சி அம்மன் திக்விஜய லீலை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது.
அதிகாலை 4 மணிக்கு சுவாமி, அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் உலா வருகின்றனர். பின்னர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கின்றனர். தொடர்ந்து காலை 9 மணி முதல் 10.14 மணிக்குள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடக்கிறது. இரவு யானை வாகனம், ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர்.
நாளை தேரோட்டம்
திருக்கல்யாண நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சிகளை காண்பதற்காக சித்திரை வீதிகள், ஜான்சிராணி பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருக்கல்யாணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்படும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக திருக்கல்யாணம் முடிந்த பிறகு பெண்கள் தங்கள் மங்கள நாணை(தாலி) மாற்றிக் கொள்வார்கள். நாளை மதுரை மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். இந்த தேர் மாசி வீதிகளில் வலம் வந்து பின்னர் தேர் நிலையை சென்றடையும். இத்துடன் மதுரை சித்திரை திருவிழா நிறைவுக்கு வரும்.
அழகர் வருவார்
அதன் பிறகு கள்ளழகர் திருவிழா தொடங்கும். இதையொட்டி அழகர் மலையில் இருந்து புறப்பட்டு மதுரை நோக்கி வருவார். அவருக்கு வழியெங்கும் பக்தர்கள் எதிர்சேவை செய்து உற்சாகத்துடன் வரவேற்பார்கள். எதிர்சேவை முடிந்ததும் வழக்கப்படி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பிறகு அவர் வண்டியூர் புறப்பட்டு செல்வார். அங்கு வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதை தொடர்ந்து மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்த பின் அழகர் தனது இருப்பிடமான அழகர்மலைக்கு புறப்பட்டு செல்வார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பு பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் குறித்து கருத்துகளை கேட்டறிய புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டக்கோரிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு: ஐ.ஏ.எஸ். தலைமையிலான 3 பேர் கொண்ட குழு வழங்கியது
30 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை ஐ.ஏ.எஸ்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
துருக்கியில் போலீசார் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 3 போலீஸ் அதிகாரிகளும் பலி
30 Dec 2025அங்காரா, துருக்கியில் 6 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகளும் பலியானார்கள்.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்
30 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம்: நாளை முதல் அதிகரிப்பு
30 Dec 2025சென்னை, தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு: பாதுகாப்பு பணிக்கு 1 லட்சம் போலீசார் குவிப்பு
30 Dec 2025சென்னை, இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
30 Dec 2025சென்னை, தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோவையில் 11 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்கிய நிலையில் துணை முதல்வர் உதயநி
-
அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்: வீரபாண்டியில் ஜனவரி 4-ம் தேதி எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
30 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 4-ம் தேதி சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
-
பிரியங்காவின் மகன் ரைஹானுக்கு இன்று ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் டெல்லி பெண்ணை மணக்கிறார்
30 Dec 2025ஜெயப்பூர், காங்கிரஸ் எம்.பி.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். பேச்சு
30 Dec 2025திருவள்ளூர், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
-
3 நாட்கள் அரசு முறை பயணமாக அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் பயணம்
30 Dec 2025டெல்லி, 3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் செல்கிறார்.
-
யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம்
30 Dec 2025சென்னை, யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி? அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு
30 Dec 2025கீவ், ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் படைகளால் 91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷ்ய வான் பாதுகாப்பு படை அழித்ததாக கூறப்பட்ட நிலையில் உக்ரைன
-
அதிபர் புதின் வீட்டின் மீதான தாக்குதலுக்கு மோடி வருத்தம் பகையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
30 Dec 2025புதுடெல்லி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினின் வீட்டைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
30 Dec 2025சென்னை, குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
30 Dec 2025- திருப்பதி நவநதி மகாதீர்த்தம்.
- ஆவுடையார்கோவில் மாணிக்க வாசகர் எல்லாம் வல்ல சித்தராய் காட்சி. இரவு வெள்ளி குதிரையில் சேவகனாய் காட்சி.
- திருவிண்ணாழி பிரதட்சணம்.
-
இன்றைய நாள் எப்படி?
30 Dec 2025 -
இன்றைய ராசிபலன்
30 Dec 2025



