எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து காலை, இரவு வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். திருவிழா தொடங்கிய நாளில் இருந்து மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது. நாள்தோறும் சுவாமி ஊர்வலத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாசி வீதிகளில் திரண்டு வந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
பட்டாபிஷேகம்
நேற்று முன்தினம் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. கோவில் அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் நடந்த இந்த விழாவில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ராமர் கிரீடம் சூட்டப்பட்டு செங்கோல் வழங்கி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். பட்டாபிஷேகம் சூட்டப்பட்டதில் இருந்து ஜனவரி மாதம் வரை 4 மாதங்களுக்கு மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குகிறது என்பது ஐதீகம்.
திருக்கல்யாணம்
நேற்று திருவிழாவின் 9-ம் நாளை முன்னிட்டு காலையில் மரவர்ண சப்பரத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தனர். மாலையில் இந்திர விமானத்தில் சுவாமி, அம்மன் 4 மாசி வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது மீனாட்சி அம்மன் திக்விஜய லீலை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது.
அதிகாலை 4 மணிக்கு சுவாமி, அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் உலா வருகின்றனர். பின்னர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கின்றனர். தொடர்ந்து காலை 9 மணி முதல் 10.14 மணிக்குள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடக்கிறது. இரவு யானை வாகனம், ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர்.
நாளை தேரோட்டம்
திருக்கல்யாண நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சிகளை காண்பதற்காக சித்திரை வீதிகள், ஜான்சிராணி பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருக்கல்யாணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்படும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக திருக்கல்யாணம் முடிந்த பிறகு பெண்கள் தங்கள் மங்கள நாணை(தாலி) மாற்றிக் கொள்வார்கள். நாளை மதுரை மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். இந்த தேர் மாசி வீதிகளில் வலம் வந்து பின்னர் தேர் நிலையை சென்றடையும். இத்துடன் மதுரை சித்திரை திருவிழா நிறைவுக்கு வரும்.
அழகர் வருவார்
அதன் பிறகு கள்ளழகர் திருவிழா தொடங்கும். இதையொட்டி அழகர் மலையில் இருந்து புறப்பட்டு மதுரை நோக்கி வருவார். அவருக்கு வழியெங்கும் பக்தர்கள் எதிர்சேவை செய்து உற்சாகத்துடன் வரவேற்பார்கள். எதிர்சேவை முடிந்ததும் வழக்கப்படி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பிறகு அவர் வண்டியூர் புறப்பட்டு செல்வார். அங்கு வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதை தொடர்ந்து மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்த பின் அழகர் தனது இருப்பிடமான அழகர்மலைக்கு புறப்பட்டு செல்வார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
தேசியத் தலைவர்கள் விழாவை எல்லா சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்
30 Oct 2025ராமநாதபுரம், வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியா
-
வாக்குகளுக்காக பீகாரை சுரண்டுகிறார்கள்: தே.ஜ.க. கூட்டணி மீது தேஜஸ்வி தாக்கு
30 Oct 2025பாட்னா, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொழில்களை எல்லாம் குஜராத்தில் அமைத்துவிட்டு, பீகார் மாநிலத்தை வாக்குகளுக்காக சுரண்டி வருகிறது என ஆர்.ஜே.டி.
-
63-வது குருபூஜை - 118-வது ஜெயந்தி விழா: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
30 Oct 2025மதுரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.10.2025) ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-10-2025.
30 Oct 2025 -
கேரளாவில் திருமண விழாவில் ருசிகரம்: ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூல்
30 Oct 2025எர்ணாகுளம், கேரளாவில் நடந்த திருமண விழாவில் ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூலிக்கப்பட்டது.
-
பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறது கேரள அரசு
30 Oct 2025திருவனந்தபுரம், பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலக கேரள அரசு முடிவு செய்துள்ளது.
-
ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
30 Oct 2025புதுடெல்லி, ஜப்பான் பெண் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
-
ஐ.பி.எல். கொல்கத்தா அணியின் புதிய பயிற்சியாளரானார் அபிஷேக்
30 Oct 2025கொல்கத்தா, ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
-
சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 150 சிக்சர் அடித்த 2வது வீரர்: சூர்யகுமார் புதிய மைல் கல்
30 Oct 2025கான்பெர்ரா, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக இந்த மைகல்லை (150 சிக்சர்கள்) எட்டிய 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.
-
சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் அபராதம்
30 Oct 2025சென்னை, சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் இனி ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.
-
மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை
30 Oct 2025மதுரை, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
-
தங்கம் விலை உயர்வு
30 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனையானது.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம்: நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
30 Oct 2025மதுரை, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம் என்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பனையூர் த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்திற்கு விஜய் மலர்தூவி மரியாதை
30 Oct 2025சென்னை, பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவ படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர்: சீமானுக்கு வைகோ திடீர் புகழாரம்
30 Oct 2025ராமநாதபுரம், தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் சீமான் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தான தலைவர் தகவல்
30 Oct 2025திருப்பதி, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:- முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி எஸ். சி. மற்றும் எஸ்.டி.
-
டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை: உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை: இந்தியா - தெ.ஆப்பிரிக்க போட்டியில் அறிமுகம்
30 Oct 2025மும்பை, டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை நடைமுறைக்கு வருகிறது.
-
33 ஆண்டுகளுக்கு பிறகு அணு ஆயுத சோதனை நடத்துகிறது அமெரிக்கா..!
30 Oct 2025நியூயார்க், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
-
பணி அனுமதியை புதுப்பிக்கும் விவகாரம்: அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்
30 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் பணி அனுமதியை புதுப்பிக்கும் விவகாரத்தில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ஏள புதிய முடிவால் அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை
-
தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
30 Oct 2025சென்னை, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய
-
விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
30 Oct 2025மும்பை, விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, கூட்டணி கட்சியுடன் ஆலோசனை செய்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
-
தமிழ் வளர்ச்சித்துறையில் உதவி இயக்குநர்களாக 13 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
30 Oct 2025சென்னை, தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர்களுக்கான பணி நியமன ஆணையத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
-
சீனா மீதான இறக்குமதி வரி 10 சதவீதம் குறைத்த ட்ரம்ப்: ஜி ஜின்பிங் : உடனான சந்திப்புக்குப் பின் அறிவிப்பு
30 Oct 2025புசான், தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்கு
-
கோவில் சொத்துகளை இணையதளத்தில் வெளியிடுவதில் என்ன சிக்கல் உள்ளது..? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Oct 2025சென்னை, கோவில் சொத்துகளின் விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை தயங்குவது ஏன்?
-
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை
30 Oct 2025ராமநாதபுரம், பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நினைவாலயத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.


