முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செல்லும்: ஐகோர்ட்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செல்லும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

தேர்தல் ரத்து...

வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு வருமானவரித்துறை அறிக்கை அனுப்பி இருந்தது. இதனையடுத்து வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

ஐகோர்ட்டில் மனு...

இந்த நிலையில், தேர்தல் ரத்து செய்ததற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று காலை ஐகோர்ட் விசாரித்தது. அப்போது, ஏ.சி. சண்முகம் தரப்பு வழக்கறிஞர், தவறிழைக்கும் வேட்பாளர் மற்றும் கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ரத்து காரணமாக மக்களின் வரிப்பணம் வீணாகிறது என வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

ரத்து செல்லும்...

வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பை சென்னை ஐகோர்ட் நேற்று மாலை 4.30 மணிக்கு ஒத்திவைத்தது. இதையடுத்து மாலை தீர்ப்பு அளித்த சென்னை ஐகோர்ட், வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் என தீர்ப்பளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து