முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாம் உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது - முன்னாள் வீரர் அசாருதீன் நம்பிக்கை

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் : மே 30-ம் தேதி தொடங்கும் உலகக்கோப்பையை இந்தியா வெல்லாவிடில், நான் மிகவும் ஏமாற்றம் அடைவேன் என்று முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.

அதிக வாய்ப்பு...

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வருகிற 30-ம்தேதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர் ‘ரவுண்ட் ராபின்’ முறையில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்பு உள்ளதாக முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.

உலகத்தரம் வாய்ந்த...

இதுகுறித்து அசாருதீன் கூறுகையில் ‘‘நாம் உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. நாம் சிறந்த அணியை தேர்வு செய்துள்ளோம். ஆடுகளங்கள் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், நாம் கஷ்டப்படுவோம் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம்முடைய பந்து வீச்சாளர்கள் கூட எதிரணியை எளிதில் அவுட்டாக்கி விடுவார்கள். நம்மிடம் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்தியா சிறந்த அணி. உலகக்கோப்பையை இந்தியா வெல்லவில்லை என்றால், நான் மிகவும் ஏமாற்றம் அடைவேன்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து