எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரம் செலவிட்டனர். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருக்கும் அணி வீரர்கள் பள்ளி குழந்தைகளை சந்திக்கும் கிரிக்கெட் கிளீனிக் என்ற நிகழ்ச்சியை ஐசிசி நடத்தி வருகிறது. அதன்படி சவுத்தாம்டனில் உள்ள ஹாம்ஸ்பியர் பவுல் மைதானத்தில் 30 பள்ளி குழந்தைகளுடன் இந்திய அணி வீரர்களான விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் நேரம் செலவிட்டனர். அப்போது கேப்டன் விராட் கோலி குழந்தைகளுக்கு பந்துவீசினார். பின்னர் பேசிய கோலி, குழந்தைகளின் வாழ்க்கையில் கிரிக்கெட் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தான் நம்புவதாக கூறினார்.
____________
பாகிஸ்தான் வீரர் ட்விட்டால் சர்ச்சை
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப்பின் பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், உலகக்கோப்பையை வெல்லவும் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதைக்கண்ட பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹசன் அலி, உங்கள் விருப்பம் நிறைவேறட்டும். அதற்கு வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இவரின் இந்த ட்விட் பாகிஸ்தான் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், ட்விட் போட்ட சில நிமிடங்களிலேயே அதை அவர் நீக்கி விட்டார். இருப்பினும் ஒரு பாகிஸ்தான் வீரராக இருந்து கொண்டு, எப்படி இப்படி சொல்ல முடிகிறது என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்திய அணிக்கெதிரான போட்டியில் 9 ஓவர்கள் வீசிய ஹசன் அலி 89 ஓட்டங்கள் வாரி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
____________
கில்கிறிஸ்ட் சாதனையை சமன் செய்தார் வார்னர் !
நாட்டிங்காமில் நடந்த ஆட்டத்தில் வங்காள தேசத்தை 48 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 381 ரன் குவித்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 147 பந்தில் 166 ரன் எடுத்தார். இதில் 14 பவுண்டரி, 5 சிக்கர்கள் அடங்கும். பின்னர் விளையாடிய வங்காள தேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 333 ரன் எடுத்தது. இந்த அணியில் முஷ்பிகுர் ரஹிம் சதம் (102 ரன்) அடித்தார். வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் அடித்தது அவரது 16-வது சதமாகும். இதன் மூலம் அவர் ஆஸ்திரேலிய வீரர்களில் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை சமன் செய்தார். இருவரும் 3-வது இடத்தில் உள்ளனர். 29 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் முதலிடத்திலும், 2-வது இடத்தில் மார்க் வாக்கும் (18 சதம்) உள்ளனர். டேவிட் வார்னர் 110-வது இன்னிங்சில் 16-வது சதத்தை தொட்டார். இந்திய கேப்டன் விராட் கோலியும் தனது 16-வது சதத்தை 110-வது இன்னிங்சில்தான் அடித்தார். ஒட்டு மொத்தமாக டேவிட் வார்னர் 14-வது இடத்தில் உள்ளார்.
____________
தவானுக்காக வருத்தப்பட்ட சச்சின் டெண்டுல்கர்
உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஷிகர் தவான் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்வுப்பூர்வமான வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனையடுத்து தவானுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டரில், ‘அன்பிற்குரிய தவான், ஆடுகளம்தான் உங்களை மிஸ் செய்ய இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விரைவில் நீங்கள் குணம் அடைவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மீண்டும் நீங்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கு திரும்பி, இந்தியாவின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும்’ என பதிவிட்டார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் உருக்கமான பதிவினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் சச்சின் கூறுகையில், ‘ஷிகர், நான் உங்களுக்காக மிகவும் வருந்துகிறேன். நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள். முக்கியமான சமயத்தில் உங்களுக்கு ஏற்பட்ட காயம் என் இதயத்தை நொறுக்கிவிட்டது. நீங்கள் நிச்சயம் மீண்டு வருவீர்கள். உங்கள் திறமையை நிரூபிக்க மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள்’ என உருக்கமாக கூறியுள்ளார்.
____________
பாக். அணியில் ஓரங்கட்டப்பட்ட வீரர் இம்ரான் கானிடம் கோரிக்கை
உலககோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வரும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. மோசமான பேட்டிங், பவுலிங் என்று சகல விதத்திலும் அந்த அணி சொதப்பியது. மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிந்தும் டாஸ் வென்று பீல்டிங் செய்தது அணியின் கேப்டன் சர்பராஸை விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிரதமருமான இம்ரான் கான், டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும் என்று போட்டிக்கு முன்னதாக கூறியிருந்த நிலையில், சர்பராஸின் முடிவு வேறு விதமாக இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓரங்கட்டப்பட்ட வீரரான கம்ரான் அக்மல், அணி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். “உலகக்கோப்பை தொடரில் முதலில் பவுலிங் செய்த எந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அதிக ரன்களை குவித்து வெற்றி பெற்றது. எனினும், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றும் சர்பராஸ் பீல்டிங் தேர்வு செய்துள்ளார். நான் பிரதமர் இம்ரான் கானுக்கு கேட்டுக்கொள்வது, அணிக்காக விளையாட உண்மையான திறனுடன் ஏராளமான வீரர்கள் தயாராக உள்ளனர். மெரிட் அடிப்படையில் வீரர்கள் தேர்வு நடந்தால் பாகிஸ்தான் அணி சிறந்த இடத்துக்கு செல்வது உறுதி” என்று கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.
____________
தவான் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பில்லை - மைக்கேல் ஹசி
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர் ஷிகர் தவானுக்கு ஆஸ்திரேலியாவுடனான போட்டியின் போது இடது கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இவர் அந்தப் போட்டியில் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. இதனைத் தொடர்ந்து ஷிகர் தவானுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவரது கைவிரல் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதன் காரணமாக ஷிகர் தவான் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் ஷிகர் தவான் உலகக் கோப்பையிலிருந்து விலகியது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தவான் உலகக் கோப்பையிலிருந்து விலகியது இந்திய அணிக்கு பெரிய அளவில் பாதிப்பாக இருக்காது. இந்திய அணியில் தவானின் இடத்தை நிரப்ப திறமையான வீரர்கள் உள்ளனர். எனவே இந்திய அணியின் உலகக் கோப்பை பயணத்தில் தவான் இல்லாதது எந்தவித தொய்வும் ஏற்படுத்தாது. இந்திய அணியிலுள்ள வீரர்களின் திறமையை வைத்து பார்க்கும் போது இந்திய அணி இறுதி வரை செல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.
_____________
குளோபல் டி20 தொடரில் யுவராஜ் சிங் ஒப்பந்தம் !
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் இவர் அறிவித்திருந்தார். அப்போது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டு வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளதாக அவர் கூறியிருந்தார். அதற்கு அனுமதி அளிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அவர் சமீபத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கு வாரியம் பதில் ஏதும் அனுப்பவில்லை. யுவராஜ் சிங் ஓய்வு பெற்றுவிட்டதால், இந்த அனுமதி தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கனடாவில் நடக்கும் ’குளோபல் டி20’ தொடரில் விளையாட யுவராஜ் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் ஒவ்வொரு அணியிலும் தலா நான்கு கனடா வீரர்களும் இடம் பெறுவார்கள். இந்த தொடரின் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் 25ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் ‘டொரண்டோ நேஷனல்ஸ்’ அணிக்காக விளையாட யுவராஜ் சிங் ஒப்பந் தமாகியுள்ளார். இதை குளோபல் டி20 கனடா தனது அதிகாரப் பூர்வ ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
____________
வார்னரின் செல்லப் பெயர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஃபார்மில் இருக்கிறார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர், 89.40 சராசரியில் 447 ரன்கள் எடுத்துள்ளார். வங்காள தேசத்திற்கு எதிராக நடந்த போட்டியில் 166 ரன்களை வார்னர் குவித்தார். இதனால் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 2019 உலக கோப்பையில் இதுவே அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் ஆகும். இது குறித்து வார்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
எனது அணியினர் என்னை இப்போதெல்லாம் ‘Hum-Bull' (Humble- அமைதி Bull-காளை) என அழைக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக நான் நல்ல முறையில் நடந்து கொள்வதால் இப்படிச் செல்லமாக அழைக்கின்றனர். நான் வாழ்க்கையிலும், கிரிக்கெட்டிலும் கோபமாக நடந்துக் கொள்ள முடியாத சூழலில் இருக்கிறேன்.
____________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்
14 Jul 2025பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
-
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-07-2025.
14 Jul 2025 -
கோவா, அரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
14 Jul 2025புதுடெல்லி, கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
மாயக்கூத்து திரை விமர்சனம்
14 Jul 2025எழுத்தாளர் நாகராஜன் கண்ணன், ஒரு கதை எழுதுகிறார்.
-
சூர்யா சேதுபதிக்கு இயக்குநர் அனல் அரசு புகழாரம்
14 Jul 2025சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கைமேரா இசை வெளியீட்டு விழா
14 Jul 2025மாணிக் ஜெய். என் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
14 Jul 2025ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
-
உள்ளே செல்ல அனுமதி மறுப்பு: தியாகிகள் கல்லறைக்கு சுவர் ஏறி சென்று முதல்வர் உமர் அஞ்சலி
14 Jul 2025ஸ்ரீநகர் : தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
14 Jul 2025புதுடெல்லி : பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி: இயக்குனர் பா.ரஞ்சித் வழக்கு பதிவு
14 Jul 2025நாகை : படப்பிடிப்பு தளத்தில் ஸ்டன்ட் காட்சியின் போது ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு
-
ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.500 வினியோகம் நிறுத்தம்? மத்திய அரசு விளக்கம்
14 Jul 2025புதுடெல்லி, சட்டப்பூர்வமாக ரூ.500 நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.