எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகராட்சிகளில் புதிய மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் சென்னையில் ரயில்வே திட்டங்களை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து முதல்வர் எடப்பாடிபழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான புதிய கொள்கைகளோடும், சீரிய பல திட்டங்களோடும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் சமர்பிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை வரவேற்கிறேன். பாரத் மாலா திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் மூலமாக மாநில அரசுகளின் சாலைக் கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவிலேயே மிக அதிக சாலைகள் அடர்த்தி கொண்ட மாநிலமாக விளங்குகின்ற தமிழ்நாட்டிற்கு, இத்திட்டத்தின் கீழ் போதிய நிதி ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், பிரதமரின் சாலை மேம்பாட்டுத்தின் கீழ், 80,250 கோடி ரூபாய் செலவில் 1.25 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் நல்ல சாலை கட்டமைப்பு ஏற்கனவே பெற்றிருந்ததால் இத்திட்டத்தின் முழுமையான பயனை தமிழ்நாடு அடைய இயலாத நிலை இருந்தது. தற்போது அனைத்து கிராமப்புற சந்தைப் பகுதிகளுக்கும் சாலை வசதி அளிக்க உத்தேசித்துள்ளதால் இந்த மூன்றாவது கட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு இத்திட்டத்தின் முழு பயன் கிடைக்கும் என நம்புகிறேன்.
புதிய மெட்ரோரயில் திட்டங்களை ஊக்குவிக்கவும், புறநகர் பகுதிகளில் ரயில்வே பயண வசதியை மேம்படுத்தவும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இதன் கீழ், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளுக்கான ஒப்புதலை விரைவுபடுத்துமாறும், கோவை மற்றும் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறும், சென்னை புறநகர் ரயில்வே சேவைகளை மேலும் மேம்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன். மின்சக்தித் துறையில் அதிக அளவில் மின் நுகர்வு செய்வோருக்கான மின் வழங்கல் மற்றும் மின் உற்பத்தியாளர்கள் திறந்த வெளி விற்பனை முறையில் விற்கக் கூடிய மின்சாரத்தின் மேல் விதிக்கப்படும் வரிகளை மாற்றியமைப்பதற்கான அறிவிப்பை பொறுத்தவரையிலும், பல்வேறு மானியங்களை பொறுத்தவரையிலும், மாநில அரசுகளின் வரம்புகளுக்குள் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு அனைத்து மாநில அரசுகளையும் கலந்து ஆலோசித்து ஒப்புதல் பெற்று, கருத்தொற்றுமையை உருவாக்கிய பின்னர் இதனை செயல்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
2024-ம் ஆண்டிற்குள், கிராமப்புறத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு அளிப்பதற்கான உயிர் நீர் இயக்கம், நிலத்தடி நீர் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு குறைந்த நிலத்தடி நீர் உள்ள 1,592 வட்டாரங்களை கண்டறிந்து நீர் சக்தி இயக்கத்தின் கீழ் அவற்றை மேம்படுத்துதல் போன்ற நீர்வள மேம்பாட்டுத் திட்டங்கள் பெரும் பயன்அளிக்கும். இவற்றை மாநில அரசின் திட்டங்களோடு ஒன்றிணைத்து செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இந்த நிதிநிலை கூட்டத் தொடரிலேயே கோதாவாரி - காவேரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெறும் கடன்களுக்கு இரண்டு சதவீத வட்டி மானியம் அளிப்பதற்காக 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, ஆண்டொன்றுக்கு ஐந்து கோடி ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யக் கூடிய தொழில் நிறுவனங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சேவை வரி செலுத்தும் சலுகை மற்றும் சிறு வணிகர்களுக்கு மிகுந்த பயன் அளிக்க கூடிய 3000 ரூபாய் மாதாந்திர ஓய்வூதிய திட்டம், 100 புதிய கலைஞர்களுக்கான தொழில் தொகுப்புகளை தொடங்குதல் போன்ற அறிவிப்புகள் அதிக அளவில் இத்தகைய நிறுவனங்களை கொண்டுள்ள தமிழ்நாட்டிற்கு பயனளிக்கும். இவற்றை நான் வரவேற்கிறேன்.
பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக அவற்றின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் அறிவிப்பை பொறுத்தவரையில், இத்தகைய நிறுவனங்கள் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் சமூகப் பொருளாதாரத்தில் பெரும் பங்கு ஆற்றி வருவதை கருத்தில் கொண்டு, தேவைப்படும் சில இனங்களில் மட்டும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கலந்து ஆலோசித்த பின்பே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அம்மாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன். விவசாயத் துறையில் பூஜ்ய பட்ஜெட் பண்ணையம் என்கிற இயற்கை வேளாண்மை நடைமுறைகள் ஊக்குவிக்கப்படும் என்கிற அறிவிப்பினை வரவேற்கும் அதே நேரத்தில், பல்வேறு மத்திய அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் வேளாண் அபிவிருத்தி திட்டங்களுக்கு கணிசமான அளவில் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மகளிர் சுயஉதவிக் குழுக்களை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களை பெரிதும் வரவேற்கிறோம். குறிப்பாக, அனைத்து சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கும் 5,000 ரூபாய் வரை மிகைப் பற்று வசதி அளிக்கப்பட்டுள்ளதும், ஒவ்வொரு குழுவிலும் ஒரு உறுப்பினருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படுவதும், சுயஉதவிக் குழுக்கள் தொழில் செய்வதற்கு பேருதவியாக அமையும்.
இந்தியாவில் வானுர்தி தயாரிப்பு, ஊடகம், காப்பீடு, அனிமேஷன் ஆகிய துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்புக்குரியது. இதன் மூலம், தமிழ்நாட்டில் வெளிநாடுகளில் இருந்து நேரடி முதலீடு செய்ய உத்தேசித்துள்ள தொழில் முனைவோரின் முதலீடுகள் மூலமாக தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மேலும் உயரும் என நம்புகிறேன். அனைத்து துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெறுவதற்கு உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட இந்த நிதிநிலை அறிக்கையை நான் வரவேற்கிறேன். மேலும், பிசிராந்தையார் பாடிய புறநானூற்றுப் பாடலை நிதிநிலை அறிக்கையில் மேற்கோள் காட்டி, தமிழுக்கு பெருமை சேர்த்தமைக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாளில் வினியோகம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தகவல்
02 Jan 2026சென்னை, ரேஷன் கார்டு தாரர்களுக்கு இந்த மாதம் வழங்க வேண்டிய சர்க்கரை, அரிசி போன்றவை வந்துவிட்டன.
-
ரஷ்ய பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 24 பேர் பலி
02 Jan 2026கீவ், ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
-
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு
02 Jan 2026சென்னை, பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் என்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜாக்டோ ஜியோ ந
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு முகாம்
02 Jan 2026சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 2-ம் கட்டமாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
-
ஜனவரி 8-ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடக்கம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
02 Jan 2026சென்னை, தமிழகத்தில் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 8ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
-
சென்னை வந்த துணை ஜனாதிபதிக்கு துணை முதல்வர் உதயநிதி வரவேற்பு: இன்று வேலூர் பொற்கோவிலுக்கு பயணம்
02 Jan 2026சென்னை, சென்னை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் வரவேற்றார்.
-
நாமக்கல்லில் சிறுவன் உயிரிழப்பு: இழப்பீட்டை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
02 Jan 2026சென்னை, நாமக்கல்லில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் இழப்பீட்டை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
02 Jan 2026சென்னை, முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ -ஜியோ கூறியுள்ளது.
-
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஜன. 6-ல் புதிய புயல் சின்னம் உருவாகிறது
02 Jan 2026சென்னை, தென்மேற்கு வங்கக்கடலில் வருகிற 6-ம் தேதி அல்லது அந்த வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
சமத்துவ நடைபயணம் என்ற பெயரில் திருச்சியில் வைகோவின் நடைபயணம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
02 Jan 2026திருச்சி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.
-
மிகப்பெரிய நெட்வொர்க்கான போதைப்பொருளை ஒழிக்க மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்: திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jan 2026சென்னை, போதைப்பொருள் என்பது மிகப்பெரிய நெட்வொர்க்.
-
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜனவரி 19-ல் தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
02 Jan 2026சென்னை, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜனவரி 19-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ தி.மு.க.
-
ஆஷஸ் சிட்னி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு
02 Jan 2026லண்டன், ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம்...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-01-2026
02 Jan 2026 -
ம.பி.யில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த மேலும் 4 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
02 Jan 2026இந்தூர், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
-
சென்னையில் 4, 5-ம் தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்கள் நேரில் விநியோகம்: இல்லம் தேடி சென்று வழங்க உத்தரவு
02 Jan 2026சென்னை, சென்னையில் ஜனவரி 4, 5-ல் 15 மண்டலங்களில், 990 ரேசன் கடைகளின் விற்பனையாளர்கள் ரேசன் பொருட்களை முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி சென்று விநியோகம் செய்ய உத்
-
தி.மு.க. ஆட்சியில் 4.5 ஆண்டுகளில் 3967 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
02 Jan 2026நாகர்கோவில், தி.மு.க. ஆட்சியில் 4.5 ஆண்டுகளில் 3967 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை அதிகரிக்க எலான் மஸ்க் முடிவு
02 Jan 2026நியூயார்க், மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை நடப்பு ஆண்டில் (2026) அதிகரிக்க திட்டம் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
நீலகிரியில் கனமழை: உதகை மலை ரயில் சேவை ரத்து
02 Jan 2026நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை உதகைக்கு புறப்பட்ட ரயில், மண் சரிவு காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு திரும்பியது.
-
தஞ்சை பல்கலை. இணையத்தில் நீக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் படத்தை பதிவேற்ற இ.பி.எஸ். வலியுறுத்தல்
02 Jan 2026சென்னை, தஞ்சை தமிழ்ப்பல்கலை இணையதளத்தில் எம்.ஜி.ஆர் பெயர், படம் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் புகழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து
-
தமிழகம் வரும் அமித்ஷாவை சந்திக்க இ.பி.எஸ். திட்டம்
02 Jan 2026சென்ன, வருகிற 4-ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
02 Jan 2026கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவில் தோரட்டம் நேற்று (ஜன.2) நடைபெற்றது.
-
அர்ஜுன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்: யுவராஜ் தந்தை யோசனை
02 Jan 2026மும்பை, அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று யுவராஜ் தந்தை யோசனை தெரிவித்துள்ளார்.
-
இனி நடைப்பயணம் மேற்கொள்ளக் கூடாது: வைகோவிடம் கோரிக்கை வைத்த முதல்வர் ஸ்டாலின்
02 Jan 2026திருச்சி, மத நல்லிணக்கம், போதைப் பொருள் ஒழிப்பு போன்றவற்றை வலியுறுத்தி, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ மேற்கொள்ளும் நடைப்பயணத்தின்போது, அவரடம் முதல்வர் மு.க.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம்
02 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர்.


