எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகராட்சிகளில் புதிய மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் சென்னையில் ரயில்வே திட்டங்களை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து முதல்வர் எடப்பாடிபழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான புதிய கொள்கைகளோடும், சீரிய பல திட்டங்களோடும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் சமர்பிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை வரவேற்கிறேன். பாரத் மாலா திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் மூலமாக மாநில அரசுகளின் சாலைக் கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவிலேயே மிக அதிக சாலைகள் அடர்த்தி கொண்ட மாநிலமாக விளங்குகின்ற தமிழ்நாட்டிற்கு, இத்திட்டத்தின் கீழ் போதிய நிதி ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், பிரதமரின் சாலை மேம்பாட்டுத்தின் கீழ், 80,250 கோடி ரூபாய் செலவில் 1.25 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் நல்ல சாலை கட்டமைப்பு ஏற்கனவே பெற்றிருந்ததால் இத்திட்டத்தின் முழுமையான பயனை தமிழ்நாடு அடைய இயலாத நிலை இருந்தது. தற்போது அனைத்து கிராமப்புற சந்தைப் பகுதிகளுக்கும் சாலை வசதி அளிக்க உத்தேசித்துள்ளதால் இந்த மூன்றாவது கட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு இத்திட்டத்தின் முழு பயன் கிடைக்கும் என நம்புகிறேன்.
புதிய மெட்ரோரயில் திட்டங்களை ஊக்குவிக்கவும், புறநகர் பகுதிகளில் ரயில்வே பயண வசதியை மேம்படுத்தவும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இதன் கீழ், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளுக்கான ஒப்புதலை விரைவுபடுத்துமாறும், கோவை மற்றும் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறும், சென்னை புறநகர் ரயில்வே சேவைகளை மேலும் மேம்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன். மின்சக்தித் துறையில் அதிக அளவில் மின் நுகர்வு செய்வோருக்கான மின் வழங்கல் மற்றும் மின் உற்பத்தியாளர்கள் திறந்த வெளி விற்பனை முறையில் விற்கக் கூடிய மின்சாரத்தின் மேல் விதிக்கப்படும் வரிகளை மாற்றியமைப்பதற்கான அறிவிப்பை பொறுத்தவரையிலும், பல்வேறு மானியங்களை பொறுத்தவரையிலும், மாநில அரசுகளின் வரம்புகளுக்குள் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு அனைத்து மாநில அரசுகளையும் கலந்து ஆலோசித்து ஒப்புதல் பெற்று, கருத்தொற்றுமையை உருவாக்கிய பின்னர் இதனை செயல்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
2024-ம் ஆண்டிற்குள், கிராமப்புறத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு அளிப்பதற்கான உயிர் நீர் இயக்கம், நிலத்தடி நீர் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு குறைந்த நிலத்தடி நீர் உள்ள 1,592 வட்டாரங்களை கண்டறிந்து நீர் சக்தி இயக்கத்தின் கீழ் அவற்றை மேம்படுத்துதல் போன்ற நீர்வள மேம்பாட்டுத் திட்டங்கள் பெரும் பயன்அளிக்கும். இவற்றை மாநில அரசின் திட்டங்களோடு ஒன்றிணைத்து செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இந்த நிதிநிலை கூட்டத் தொடரிலேயே கோதாவாரி - காவேரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெறும் கடன்களுக்கு இரண்டு சதவீத வட்டி மானியம் அளிப்பதற்காக 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, ஆண்டொன்றுக்கு ஐந்து கோடி ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யக் கூடிய தொழில் நிறுவனங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சேவை வரி செலுத்தும் சலுகை மற்றும் சிறு வணிகர்களுக்கு மிகுந்த பயன் அளிக்க கூடிய 3000 ரூபாய் மாதாந்திர ஓய்வூதிய திட்டம், 100 புதிய கலைஞர்களுக்கான தொழில் தொகுப்புகளை தொடங்குதல் போன்ற அறிவிப்புகள் அதிக அளவில் இத்தகைய நிறுவனங்களை கொண்டுள்ள தமிழ்நாட்டிற்கு பயனளிக்கும். இவற்றை நான் வரவேற்கிறேன்.
பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக அவற்றின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் அறிவிப்பை பொறுத்தவரையில், இத்தகைய நிறுவனங்கள் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் சமூகப் பொருளாதாரத்தில் பெரும் பங்கு ஆற்றி வருவதை கருத்தில் கொண்டு, தேவைப்படும் சில இனங்களில் மட்டும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கலந்து ஆலோசித்த பின்பே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அம்மாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன். விவசாயத் துறையில் பூஜ்ய பட்ஜெட் பண்ணையம் என்கிற இயற்கை வேளாண்மை நடைமுறைகள் ஊக்குவிக்கப்படும் என்கிற அறிவிப்பினை வரவேற்கும் அதே நேரத்தில், பல்வேறு மத்திய அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் வேளாண் அபிவிருத்தி திட்டங்களுக்கு கணிசமான அளவில் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மகளிர் சுயஉதவிக் குழுக்களை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களை பெரிதும் வரவேற்கிறோம். குறிப்பாக, அனைத்து சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கும் 5,000 ரூபாய் வரை மிகைப் பற்று வசதி அளிக்கப்பட்டுள்ளதும், ஒவ்வொரு குழுவிலும் ஒரு உறுப்பினருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படுவதும், சுயஉதவிக் குழுக்கள் தொழில் செய்வதற்கு பேருதவியாக அமையும்.
இந்தியாவில் வானுர்தி தயாரிப்பு, ஊடகம், காப்பீடு, அனிமேஷன் ஆகிய துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்புக்குரியது. இதன் மூலம், தமிழ்நாட்டில் வெளிநாடுகளில் இருந்து நேரடி முதலீடு செய்ய உத்தேசித்துள்ள தொழில் முனைவோரின் முதலீடுகள் மூலமாக தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மேலும் உயரும் என நம்புகிறேன். அனைத்து துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெறுவதற்கு உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட இந்த நிதிநிலை அறிக்கையை நான் வரவேற்கிறேன். மேலும், பிசிராந்தையார் பாடிய புறநானூற்றுப் பாடலை நிதிநிலை அறிக்கையில் மேற்கோள் காட்டி, தமிழுக்கு பெருமை சேர்த்தமைக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.