Idhayam Matrimony

கோடீஸ்வரர்களுக்காக மட்டும் பா.ஜ.க. அரசு செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2026      இந்தியா
Rahul 2024-09-09

புதுடெல்லி, பா.ஜ.க. தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசுகள் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கைவிட்டுவிட்டது. அவை கோடீஸ்வரர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 

இதுகுறித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,“நாடு முழுவதும் ‘ஊழல்’ ஜனதா கட்சியின் இரட்டை இன்ஜின் அரசாங்கங்கள் மக்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டன. ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஆணவம் என்ற விஷம் பா.ஜ.க.-வின் அரசியலில் மேலிருந்து கீழ் வரை பரவியுள்ளது. அவர்களின் அமைப்பில், ஏழைகள், ஆதரவற்றவர்கள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமே, மேலும் 'வளர்ச்சி' என்ற பெயரில் ஒரு மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல் இயங்கி வருகிறது.

உத்தராகண்டில் அங்கிதா பண்டாரி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. ஆனால் அந்த சம்பவத்தில் நேற்று ஒரே கேள்விதான் எழுகிறது: அதிகாரத்தில் இருப்பவர்களால் எந்த பா.ஜ.க. விஐபி பாதுகாக்கப்படுகிறார்? சட்டம் எப்போது அனைவருக்கும் சமமாக இருக்கும்?. உத்தரபிரதேசத்தின் உன்னாவ் வழக்கில், பா.ஜ.க.வின் அதிகார ஆணவத்தால் குற்றவாளிகள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டனர் என்பதையும், பாதிக்கப்பட்டவர் நீதிக்காக எவ்வளவு விலை கொடுக்க வேண்டியிருந்தது என்பதையும் முழு நாடும் பார்த்தது. 

இந்தூரில் விஷம் கலந்த நீரைக் குடித்ததால் ஏற்பட்ட உயிரிழப்புகள், குஜராத் - ஹரியானா - டெல்லியில் அசுத்தமான நீர் விநியோகம் குறித்த குற்றச்சாட்டுகள் உள்ளன. நோய் குறித்த அச்சம் எல்லா இடங்களிலும் சூழ்ந்துள்ளது. ராஜஸ்தானின் ஆரவல்லி விவகாரம் அல்லது எந்த இயற்கை வளங்களாக இருந்தாலும், கோடீஸ்வரர்களின் பேராசை மற்றும் சுயநலத்துக்காக விதிகள் காலில் போட்டு மிதிக்கப்பட்டன. மலைகள் துண்டாக்கப்படுகின்றன, காடுகள் அழிக்கப்படுகின்றன, அதற்குப் பதிலாக மக்களுக்குக் கிடைப்பது: தூசி, மாசுபாடு மற்றும் பேரழிவுகள் தான்.

இருமல் மருந்துகளால் குழந்தைகள் இறப்பது, அரசு மருத்துவமனைகளில் எலிகள் பச்சிளங்குழந்தைகளைக் கொல்வது, அரசுப் பள்ளிகளின் கூரைகள் இடிந்து விழுவது, இவை 'அலட்சியம்' அல்ல, ஊழலின் நேரடி விளைவுகளே. பாலங்கள் இடிந்து விழுகின்றன, சாலைகள் குண்டும் குழியுமாகின்றன, ரயில் விபத்துக்களில் குடும்பங்கள் அழிகின்றன, ஒவ்வொரு முறையும் பா.ஜ.க. அரசாங்கம் செய்வதெல்லாம், புகைப்படங்களுக்குப் போஸ் கொடுப்பது, ட்வீட் செய்வது மற்றும் இழப்பீடு வழங்கும் சடங்கை நிறைவேற்றுவது. மோடிஜியின் 'இரட்டை இன்ஜின்' அரசாங்கம் கோடீஸ்வரர்களுக்காக மட்டுமே இயங்குகிறது. சாதாரண இந்திய மக்களுக்கு, ஊழல் நிறைந்த இந்த இரட்டை இன்ஜின் அரசாங்கம் என்பது வளர்ச்சி அல்ல, அது பேரழிவின் வேகம்; ஒவ்வொரு நாளும் ஒருவரின் வாழ்க்கையை நசுக்கிக் கொண்டிருக்கிறது’ என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து