எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
582 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள், 5.82 கோடி ரூபாய் செலவில் புதிதாக துவக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
கூட்டுறவு நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறந்த சேவையினை வழங்குவதற்காக 113 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 7 மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகள், பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஒரு நகரக் கூட்டுறவுக் கடன் சங்கம் ஆக மொத்தம் 125 கூட்டுறவு நிறுவனங்களுக்கு 36.41 கோடி ரூபாய் செலவில் சொந்தக் கட்டிடங்கள் கட்டப்படும். கூட்டுறவு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு நவீன வசதிகளுடன் புதுப்பொலிவுடன் சேவை அளிக்க ஏதுவாக 118 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 17 மத்தியக் கூட்டுறவு வங்கிகள், 4 நகரக் கூட்டுறவு வங்கிகள், 3 நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 2 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆக மொத்தம் 143 கூட்டுறவு நிறுவனங்கள் 24.91 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்படும்.
சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலக கட்டிடம், மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்கிடும் பொருட்டு, 8.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும். தரமான நுகர்பொருட்களை நியாயமான விலையில் வழங்கிடவும், பண்டகசாலைகளின் இதர சேவைகளை பொதுமக்கள் மற்றும் நுகர்வோருக்கு அளித்திடவும், அரியலூர், புதுக்கோட்டை, தேனி, கன்னியாகுமரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மண்டலங்களில் 5 மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் புதிதாக துவக்கப்படும்.
ஒரு புதிய முயற்சியாகவும், நியாய விலைக் கடைகளின் குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையிலும், மாநிலம் முழுவதும் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் 103 நியாயவிலைக் கடைகளில் திறக்கப்பட்டன. இவ்வாறு திறக்கப்பட்ட கடைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் அனைத்திலும் மக்களின் அன்றாட தேவையான 300 வகையான பொருட்கள், அதிகபட்ச சில்லறை விலையில் இருந்து. 5 சதவீதத்துக்கு குறைவான விலையில் விற்பனை செய்யப்படுவதால் மக்களின் வரவேற்பினை பெற்றுள்ளது. இத்தகைய சீரிய திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தி 582 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள், 5.82 கோடி ரூபாய் செலவில் புதிதாக துவக்கப்படும். விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 142 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 12 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவுடைய 135 கிடங்குகளும், 500 மெட்ரிக் டன் கொள்ளளவுடைய 20 கிடங்குகளும், 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவுடைய 7 கிடங்குகளும், 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவுடைய 3 கிடங்குகளும் ஆக மொத்தம் 36,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 149 கிடங்குகள் நடப்பாண்டில் 39.37 கோடி ரூபாய் செலவில் புதியதாக கட்டப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


