முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண்ணிடம் கேட்ட சர்ச்சை கேள்வியால் விமர்சனத்துக்குள்ளான அதிபர் டிரம்ப்

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஈராக்கை சேர்ந்த சமூக ஆர்வலர் நாடியா முராத்தின் பணிகள் பற்றி தெரியாமலேயே, உங்களுக்கு எதற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி கேட்டது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

ஈராக்கை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நாடியா முராத். போரில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். அந்நாட்டில், சிறுபான்மையினரான யாசிதி பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக தீவிரமாக போராடி வருபவர். ஈராக் மற்றும் சிரியாவை ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2014-ல் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அப்போது, யாசிதி பெண்களை, பிடித்து சென்று பாலியல் அடிமைகளாக நடத்தினர்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய நாடியா முராத், மூன்று மாதங்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார். அவரது தாயாரும், ஆறு சகோதரர்களும் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பிய நாடியா, ஐ.நா. முகாமுக்கு வந்து சேர்ந்தார். பின், யாசிதி பெண்களை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டார். அவரது முயற்சியால், நுாற்றுக்கணக்கான பெண்கள் விடுவிக்கப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலை தடுக்கும் ஐ.நா. அமைப்பின் துாதராகவும் முராத் பணியாற்றி வருகிறார். இவருக்கு, கடந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், நாடியா முராத் கலந்து கொண்டார். அப்போது, அதிபர் டிரம்ப்பை சந்தித்த அவர், ஈராக்கில் 3,000 யாசிதி பெண்கள் காணாமல் போனது பற்றியும், தனது தாயார் மற்றும் ஆறு சகோதரர்கள் கொல்லப்பட்டது குறித்தும், டிரம்ப்பிடம் விளக்கினார். இதை கேட்ட டிரம்ப், நோபல் பரிசு பெற்றிருக்கிறீர்கள். மிகப் பெரிய சாதனை. உங்களுக்கு எதற்காக நோபல் பரிசு வழங்கினார்கள் என கேள்வி எழுப்பினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாடியா, இது ஒரு குடும்பத்தின் பிரச்னை அல்ல. பல்லாயிரக்கணக்கான பெண்களின் பிரச்னை. தயவு செய்து, நடவடிக்கை எடுங்கள் என கேட்டுக் கொண்டார். நாடியா முராத்துக்கு எதற்காக அமைதி பரிசு வழங்கப்பட்டது என்பது கூட தெரியாமல், அவரிடமே அக்கேள்வியை கேட்ட டிரம்ப்பின் செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து