முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

50 ஆண்டுகளாக கடற்கரை மணலில் புதைந்து கிடந்த கடிதத்துக்கு பதில் எழுதிய சிறுவன்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

சிட்னி : ஆஸ்திரேலியாவில் 50 ஆண்டுகளாக கடலில் பாட்டிலுக்குள் மிதந்த கடிதம் ஒன்று சிறுவனின் கைக்கு வந்து சேர்ந்தது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் ஐரே தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில் ஜியா மற்றும் அவரது மகனான 9 வயது சிறுவன் எலியட் ஆகியோர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடற்கரை மணலில் பாட்டில் ஒன்று புதைந்து கிடந்துள்ளது. அந்த பாட்டிலில் ஏதோ இருப்பதை கண்டு எலியட் எடுக்கச் சென்றான். அருகே சென்று எடுத்து பார்த்த போது அது கடிதம் என தெரியவந்தது. அந்த கடிதத்தை எடுத்து பிரித்து பார்த்த போது, அதன் மேற்பகுதியில் நவம்பர் மாதம் 17-ம் தேதி, 1969-ம் ஆண்டு என இருந்தது.

அதை படித்த போது அந்த கடிதம், இங்கிலாந்தில் இருந்து மெல்போர்னுக்கு குடிபெயர்கிறேன். கப்பலில் இருந்து கடிதத்தை எழுதுகிறேன். யார் இந்த கடிதத்தை பெறுகிறீர்களோ, அவர்கள் இந்த கடிதத்திற்கு பதில் அனுப்புங்கள் எனும் செய்தியை தாங்கி வந்திருந்தது. இதனையடுத்து அந்த கடிதத்தை எழுதிய கில்மோரோவுக்கு, எலியட் தற்போது பதில் கடிதம் அனுப்பியுள்ளான். இந்த கடிதத்தை  எழுதும் போது கில்மோரோவுக்கு வயது 13. இப்போது அவருக்கு 63 வயதாகி விட்டது. இவர் மீண்டும் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து