முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

34-ம் நாள் உற்சவம்: அத்திவரதருக்கு ரோஸ் நிற பட்டாடை அலங்காரம்

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
Image Unavailable

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 34-ம் நாளான நேற்று பெருமாள், இளம் பச்சை கலந்த அடர் ரோஸ் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

இக்கோவிலில் 34-வது நாளான நேற்று அத்திவரதர் பச்சை மற்றும் ரோஸ் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை 5 மணிக்கு தரிசனம் தொடங்கியது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வரதரை தரிசனம் செய்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பூரத்தையொட்டி, வரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றதால் தரிசன நேரத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டது. பிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவித்தது.

ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் முடிந்த பிறகு, இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை 44 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்திருப்பதாக காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து