முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை தோல்விக்கு பிறகு சில நாட்களை கடப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்தது - இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டி

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

புளோரிடா :  உலக கோப்பை தோல்விக்கு பிறகு சில நாட்களை கடப்பது  மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்தது என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
 இது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் கூறியதாவது:-

உலக கோப்பையின் முதல் அரையிறுதியில் இருந்து வெளியேறிய பின்னர், அடுத்த சில நாட்களை கடப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்தது. குறிப்பாக அந்த தொடர் முடியும் வரை அப்படித்தான் இருந்தது. அந்த நாட்களில் காலையில் எழும்போதெல்லாம் மோசமானதாகவே இருக்கும். ஆனாலும், அதன் பின்னர் வாழ்க்கையை நகர்த்திதான் ஆக வேண்டும். நாங்கள் தொழிலில் நேர்த்தியாக இருப்பவர்கள். இதனை கடந்தே ஆக வேண்டும். ஒவ்வொரு அணியும் அப்படித்தான். அதனால் அதிலிருந்து ஒரு வழியாக மீண்டு விட்டோம். அனைத்து வீரர்களும் விளையாட ஆர்வமாக இருந்தனர். இந்த தொடரிலும் நல்ல முறையில் விளையாட ஆவலாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து