எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, : இந்தியா முழுவதும் பெய்த மழை மற்றும் வெள்ளத்தினால் நேற்று வரை 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
தென் மேற்கு பருவ மழை காரணமாக இந்தியாவின் 8 மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதில் பீகார், குஜராத், கேரளா, அசாம் மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
கேரளா
கடந்த ஒரு வாரத்தில் கேரளாவில் 91 பேரும், கர்நாடகாவைச் சேர்ந்த 54 பேரும், மகராஷ்டிராவைச் சேர்ந்த 48 பேரும், ஒடிசாவை சேர்ந்த 8 பேரும் உயிரிழந்துள்ளனர். ஜூலை மற்றும் ஆகஸ்ட் முதல் வாரங்களுக்கு இடையில், குஜராத்தில் இருந்து குறைந்தது 98 பேரும், பீகாரில் 123 பேரும், அசாமில் 71 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்னும் பல நபர்களைக் காணவில்லை என்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மாநிலங்களில் இருந்து வெள்ள நீர் குறைந்து வரும் நிலையில், அடுத்த ஐந்து நாட்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் குறைந்தது 97 பேர் உயிரிழந்துள்ளனர். 59 பேரை இன்னும் காணவில்லை. வயநாடு மாவட்டத்தில் புத்துமலை, மலப்புரம் மாவட்டத்தின் காவாலப்பாறா உள்ளிட்ட 80 இடங்களில் பெரியதும், சிறியதுமாக நிலச்சரிவு ஏற்பட்டது. ஆயிரத்து 239 முகாம்களில், இரண்டு லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், வயநாடு, மலப்புரம், கண்ணூர், கோட்டயம், ஆலப்புழா மற்றும் இடுக்கி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் பல பள்ளிகள் நிவாரண மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
கர்நாடகா
கர்நாடகாவை பொறுத்த குறைந்தது 54 பேர் இறந்துள்ளனர். மேலும் 12 பேர் காணவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது மாநிலத்தில் 1,224 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 3,93,956 பேர் தஞ்சமடைந்துள்ளனர். கடலோர கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும், தெற்கு உள்துறை கர்நாடகாவின் சிக்கமகளூரு, ஹாசன், குடகு மற்றும் சிவமோகா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை ஹம்பியில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 365 பேரை மீட்டது. ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 18 வெளிநாட்டவர்களும் கொப்பல் மாவட்டத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.
மகராஷ்டிரா
மகராஷ்டிரா மாநிலத்தை பொருத்தவரை வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 48 ஆனது. 3 பேரை இன்னும் காணவில்லை. மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மத்திய அரசிடமிருந்து 6800 கோடி ரூபாய் உதவி கோரியுள்ளார்.
குஜராத்
குஜராத் மாநிலத்தில் சில பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்து உள்ளது. நிலைமை மேம்பட்டு வரும் நிலையில், ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதுவரை மாநிலத்தில் வெள்ளம் மற்றும் பெய்த மழையால் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
பீகார்
பீகாரில், பலத்த மற்றும் இடைவிடாது பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்து உள்ளது. 12 மாவட்டங்களில் மொத்தம் 81.57 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக பாதிப்புக்குள்ளான சீதாமாரி மாவட்டத்தில் 37 பேர் பலியாகி உள்ளனர். மதுபானி மாவட்டத்தில் 30 பேரும் அரேரியாவில் 12 பேரும் பலியாகி உள்ளனர். ஷியோஹர் மற்றும் தர்பங்காவில் தலா பத்து பேரும், பூர்னியா மாவட்டத்தில் ஒன்பது பேரும் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 5 பேரும் முசாபர்பூர் மாவட்டத்தில் 4 பேரும், சுபால் மாவட்டத்தில் மூன்று பேரும், கிழக்கு சம்பரன் மற்றும் சஹர்சா மாவட்டத்தில் நிலைமை மேம்பட்டுள்ளது. ஆனால் மாநிலம் முழுவதும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
அசாம்
அசாமில் கன மழையால் 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தில் 71 பேர் உயிரிழந்து உள்ளனர். வெள்ளத்தால் 28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக மாநிலத்தில் நிலைமை மேம்பட்டுள்ளது.
ஒடிசா
ஒடிசாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 8 பேர் பலியாகி உள்ளனர். நபரங்பூர், கலஹந்தி, காந்தமால், கோராபுட் மற்றும் மல்கன்கிரி மாவட்டங்களில் இருந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இடைவிடாத மழையைத் தொடர்ந்து சோனேப்பூரின் தாராபா பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இமாசலபிரதேசம்
இமாசல பிரதேசத்ததில் கனமழை பலத்த காற்று காரணமாக 2 பேர் பலியாகி உள்ளனர். அடுத்த வாரத்தில் மாநிலத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. காங்க்ரா, சம்பா, உனா, மண்டி மற்றும் பிலாஸ்பூர் ஆகிய இடங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பொங்கல் பரிசு தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையையையொட்டி 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்ம
-
சர்வாதிகாரிகளை கையாள முடிந்தால்.. புதினை சிறைப்பிடிக்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சூசகம்..?
04 Jan 2026கீவ், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் பெயரைக் குறிப்பிடாமல், அவரைச் சிறைப்பிடிக்குமாறு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-01-2026
04 Jan 2026 -
மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா திடீரென அனுமதி: உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்
04 Jan 2026சென்னை, தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. இவர் இயக்குநர் இமயம் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
-
ஜனநாயகன் படத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு நடவடிக்கையா? அமைச்சர் முத்துசாமி விளக்கம்
04 Jan 2026கோபி, ஜனநாயகன், பராசக்தி போன்ற படங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் தி.மு.க. அரசு ஈடுபட வேண்டிய தேவை இல்லை என்று முத்துசாமி கூறினார்.
-
தமிழ்நாட்டு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இதுவரை 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்
04 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்கா தாக்குதல்: வெனிசுலாவில் 40 பேர் உயிரிழப்பு
04 Jan 2026காரகாஸ், வெனிசுலாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடபட 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷ்யாவில் ஒருவர் உயிரிழப்பு
04 Jan 2026கீவ், ரஷ்யாவின் எல்லையோர மாகாணமான பெல்ஹொராட்டில் சாலையில் சென்ற கார் மீது உக்ரைன் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
-
மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
04 Jan 2026சென்னை, ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல் என்று பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
-
கேரளா: பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் பலி
04 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் மதவழிபாட்டு தலத்தில் பட்டாசு வெடித்து விபத்தில் ஒருவர் பலியானார்.
-
தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம் பணி தொடக்கம்
04 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது.
-
10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறார்
04 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் இன்று (ஜன.
-
வெனிசுலா அதிபர் மதுரோ அமெரிக்க சிறையில் அடைப்பு
04 Jan 2026நியூயார்க், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்து நாடுகடத்தப்பட்ட நிலையில், அமெரிக்க சிறையில் அடைக்கப
-
வெனிசுலா அதிபர் மதுரோ சிறைபிடிப்பு: அதிபர் ட்ரம்புக்கு மேயர் மம்தானி நேரடி எதிர்ப்பு
04 Jan 2026நியூயார்க், வெனிசுலா அதிபர் மதுரோ சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மாம்தானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு
04 Jan 2026திருச்சி, இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
விபி ஜி ராம்ஜி புதிய சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா மாநில சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
04 Jan 2026ஐதராபாத், விபி ஜி ராம்ஜி-க்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,000 கன அடியாக அதிகரிப்பு
04 Jan 2026தருமபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
04 Jan 2026சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
எதிர்காலத்தில் த.வெ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ்., தினகரன் இணைவார்கள் செங்கோட்டையன் பேட்டி
04 Jan 2026கோவை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் எதிர்காலத்தில் த.வெ.க.
-
வெனிசுலா மீதான தாக்குதல்: அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு கமலா ஹாரிஸ் கடும் எதிர்ப்பு
04 Jan 2026நியூயார்க், வெனிசுலா மீதான ட்ரம்பின் நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பானதல்ல என முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
-
5 மணி நேரம் காத்திருந்து திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
04 Jan 2026திருச்செந்தூர், திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்
-
பொய் வாக்குறுதிகளால் தமிழ்நாடு மக்கள் சலிப்பு: தமிழில் பதிவிட்ட அமித் ஷா
04 Jan 2026புதுடெல்லி, தி.மு.க. அரசின் பொய் வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
வெனிசுவேலா இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் நியமனம்
04 Jan 2026கராகஸ், வெனிசுவேலா இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸை நியமித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏ.வி.எம். நிறுவனத்தை குறிப்பிடாமல் தமிழ் சினிமா பற்றி பேசவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
04 Jan 2026சென்னை, ஏ.வி.எம். சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏ.வி.எம்.
-
டி-20 உலக கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிப்பு: 7 ஆல்-ரவுண்டர்கள் சேர்ப்பு
04 Jan 2026டாக்கா, டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


