எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தே.மு.தி.க.வின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது என்று பிரேமலதா விஜயகாந் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.விற்கு மாநிலங்களவை சீட் ஒன்று தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கட்சி சார்பில் தே.மு.தி.க. கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதிஷ்-க்கு வழங்கப்பட்டது. நேற்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்தபின்பு தே.மு.தி.க. கட்சியின் அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த்- உடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தே.மு.தி.க.விலுள்ள லட்சக்கணக்கான தொண்டர்களில் எல்.கே. சுதிஷ்-ம் ஒருவராவார். அவர் தே.மு.தி.க. கட்சி ஆரம்ப காலம் முதலே கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்து தான் இன்று மாநிலங்களவை உறுப்பினராக செல்ல இருக்கிறார். முதன்முதலில் தேசியத்திலும் இந்திய அளவில் ஜனநாயகக்கடமை ஆற்ற இருக்கும் சுதிஷ்க்கு அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தே.மு.தி.க.வை சாராத மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தே.மு.தி.க.வின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. எப்போதோ மாநிலங்களவை சீட் கிடைத்திருக்க வேண்டும், தற்போது தான் கிடைத்திருக்கிறது.தி.மு.க. கூட்டணி இந்த முறை 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


