எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : தமிழகத்தில் உள்ள பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ஈஷா யோகா மையத்தின் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மரம் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.
ஈஷா யோகா மையத்தின் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் மரம் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பது பழமொழி. நாம் அனைவரும் நிழலின் அருமையை உணர்ந்துள்ள இவ்வேளையில், நிழலினை உருவாக்க மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதும், நிழல் தரும் மரங்களைக் காப்பதும் நம் அனைவரின் கடமையாகும். மரங்களால் சுவாசக் காற்று அதிகரிக்கின்றது, நில அரிப்பு தடுக்கப்படுகின்றது. மழை மாதந்தோறும் பொழிவதற்கு மண்ணின் மீதுள்ள மரங்களே அழைத்திடுகிறது. மரம் நடுவோம்! மழை பெறுவோம்! என்ற வாசகம் நாம் அனைவரும் அறிந்ததே, மரங்கள் மழை கொடுக்க வேண்டுமென்றால் நமக்குத் தேவை காடுகள். காடுகள் மனிதர்களால் உருவாக்கப்படுவதில்லை, மனிதன் நட்ட மரங்களைவிட மண்ணே நட்ட மரங்களே அதிகம். கரங்கள் நட்ட மரங்களைவிட காற்றே நட்ட மரங்களே அதிகம். ஒற்றை மரம், ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 300 லிட்டர்கள் வரை தண்ணீரைத் தன்னுடைய வியர்வையாக வெளியேற்றுகிறது. மரங்கள் தங்களது தேவையான நீரைவிடப் பல மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக் கொள்ளும். அந்த உபரி நீர் அவ்வளவும் வெளியாகி ஈரப்பதமாக காற்றில் கலந்து விடுகிறது. அந்த உபரி நீர்தான் காற்றைக் குளிர்வித்து நம்மையும் குளிர்விக்கின்றன. அந்த உபரி நீரை கொண்டுதான் மேகங்களும் நமக்கு மழையை கொடுக்கின்றன.
இந்தியத் திருநாட்டின் கலாச்சாரத்தில் மரம் ஒரு இன்றியமையாத பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, நாம் வேப்ப மரத்தினை மாரியம்மன் தெய்வத்தினோடும், அரச மரத்தினை விநாயகப் பெருமானோடும் எப்பொழுதும் இணைத்து வழிபடுவது வழக்கம். இன்றும் பல்வேறு பழங்குடியின மக்களின் சடங்குகளில், குறிப்பாக திருமண சடங்குகளில் மரத்தினை வணங்கி திருமணத்தை நடத்துவது வழக்கமாக கடைபிடிக்கப்படுகின்றது. மருது சகோதரர்கள் நினைவாக மரங்கள் இரண்டினை வளர்த்து வந்த ஓர் பெரியவர், அம்மரங்களை அரசரே ஆணையிட்டும் வெட்ட அனுமதிக்காத நிகழ்வு மக்களுக்கு மரத்தின் மீது இருந்த அக்கறையினை உணர்த்துகிறது.
அம்மாவின் பிறந்த தினத்தையொட்டி, மாநிலத்தில் பசுமைப் போர்வையினை அதிகரித்தல், சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் விளைவுகளைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டு மாபெரும் மரம் நடவுத் திட்டம் அம்மாவால் துவக்கப்பட்டது. தொடர்ந்து அம்மாவின் அரசாலும் 2011-12 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு, 4 கோடியே 69 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2019-20ஆம் ஆண்டில் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காக கொண்டு இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழகம் சந்திக்க உள்ள சவால்களை முழுவதுமாக உணர்ந்து தான் அம்மாவின் அரசு மாநில வனக் கொள்கை, 2018-ஐ வடிவமைத்துள்ளது. இந்தக் கொள்கையில் மாநிலத்தின் நீண்ட நெடும் கடற்கரை, கிழக்கு மற்றும் மேற்கு மலைத் தொடர்கள், வறண்ட பருவநிலை மற்றும் நீர் பற்றாக்குறையை போக்க வேண்டிய பாங்கு, வனப்பகுதிகளுக்கு வெளியேயும் மரங்களை வளர்த்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சுற்றுச் சூழல் மாசினை கட்டுப்படுத்த தமிழ்நாடு சூழல் சுற்றுலாக் கொள்கை, 2017 மற்றும் தமிழ்நாடு சுற்றுசூழல் கொள்கை, 2017 அறிவிக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் அம்மாவின் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன.
காவேரி ஆற்றின் பல்லுயிர் காத்தல், காவேரி மற்றும் அதன் துணை நதிகளில் மாசுகளை அகற்றுதல், காவேரி நகர்ப்புற கழிவு நீரை சுத்திகரிக்க தேவையான சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுதல், ஆற்றுப்படுகையில் மரங்களை நட்டு காடுகளை வளர்த்தல், ஆற்று முகப்பு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள நடந்தாய் வாழி காவேரி என்ற திட்டத்தினை செயல்படுத்த பாரதப் பிரதமரிடம் நான் கோரிக்கை வைத்ததன் தொடர்ச்சியாக நடந்தாய் வாழி காவேரி திட்டத்தினை பாராட்டி, இதேபோல் நாட்டிலுள்ள ஜீவநதிகளில் செயல்படுத்த ஜனாதிபதி நாடாளுமன்ற கூட்டத்தில் தனது உரையில் இத்திட்டத்தினை குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று, தமிழகத்திலுள்ள பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி ஆறுகளும் மாசுபடுவதைக் தடுக்க அம்மாவின் அரசு நடவடிக்கை எடுக்கும். இதேபோன்று, வைகை மற்றும் நொய்யல் ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.24.58 கோடி மதிப்பீட்டில் 2017-18 முதல் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு 2018-19ஆம் ஆண்டு வரை ரூ.14.06 கோடி செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பாலாறு ஆற்றிற்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் 2019-20ம் ஆண்டு முதல் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அம்மாவின் அரசு பல்வேறு புதிய நீர் மேலாண்மை திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும் அம்மாவின் அரசு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை என்னும் திட்டத்தினை முன்னெடுத்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் திட்டம் தொடர பிரதமர் இந்தியா முழுவதும் செயல்படுத்த அறிவிப்பு செய்துள்ளார்.
உதாரணமாக, அம்மாவின் மழை நீர் சேகரிப்பு திட்டம் எப்படி மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டதோ அதுபோல, மரங்கள் நட்டு நதியைப் பாதுகாக்கும் திட்டத்தையும் மக்கள் இயக்கமாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம், திருமண நிகழ்ச்சி, திருமண ஆண்டு விழா நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் போது மரக்கன்றுகளை வழங்கினால் இந்தத் திட்டம் இன்னும் விரிவடையும். மரக்கன்றுகளை முறையாக நட்டு வளர்த்தால் காடு செழிக்கும். நாடு செழிக்கும். தமிழக மக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் பெருவாரியாக மரம் வளர்ப்புப் பணிகளில் தொடர்ந்து பங்கேற்று தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்க அம்மாவின் அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 13 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
19 Sep 2025சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.