எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத் : இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். இதில் பாகிஸ்தான் தரப்பில் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 10-ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் வீரர்கள் திடீரென அத்துமீறி இந்திய பகுதிகளை நோக்கி தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கே பாதுகாப்பு பணிகளை கவனித்துக் கொண்டிருந்த இந்திய வீரர்கள், உடனடியாக பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை மூண்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹாஜிப்பூர் பகுதியில் நடந்த இந்த சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த குலாம் ரசூல் என்ற வீரர் குண்டுபாய்ந்து உயிரிழந்தார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட பகவல்நகரை சேர்ந்த அந்த வீரரின் உடலை எடுத்துச் செல்ல சக வீரர்கள் முயன்றனர். இதற்காக இந்திய படையினருடன் ஒருபுறம் சண்டையிட்டவாறே, மறுபுறம் குலாம் ரசூலின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் பதிலடியை நிறுத்தாத இந்திய வீரர்களும், தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்துடன் சண்டையிட்டனர். இதில் ரசூலின் உடலை மீட்க முயன்ற மற்றொரு வீரரும் குண்டடிபட்டு சுருண்டு விழுந்து இறந்தார்.
இந்தியாவின் அதிரடி தாக்குதலில் பலியான இந்த இருவரின் உடல்களையும் மீட்க மற்ற வீரர்கள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் முடியவில்லை. இதற்காக 2 நாட்களாக போராடியும் பலியானவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து கடந்த 13-ம் தேதி அவர்கள் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளைக்கொடியை ஏந்தினர். இந்திய நிலைகள் மீதான தாக்குதலை கைவிட்டு விட்டு, வெள்ளைக்கொடியுடன் அந்த வீரர்களின் உடல்களை நோக்கி முன்னேறினர். வெள்ளைக் கொடியை ஏந்தியிருந்ததாலும், பலியான வீரர்களுக்கு மதிப்பளிக்கும் நோக்கிலும் இந்திய ராணுவம் தாக்குதலை நிறுத்தியது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் வந்து தங்கள் சக வீரர்களின் உடல்களை மீட்டு சென்றனர்.
இந்த காட்சிகளை இந்திய வீரர்கள் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். அந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டனர். இது ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதைப் பார்த்த பலரும் இந்திய ராணுவத்துக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனியார் டி.வி. ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாங்கள் ஒரு போதும் அணு ஆயுத போரில் ஈடுபட மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம். இரண்டு அணு ஆயுத நாடுகள் வழக்கமான போரில் ஈடுபட்டால், அந்த போர், பெரும்பாலும் அணு ஆயுத போரில் தான் முடியும். வழக்கமான போர் ஏற்படுவதில் இருந்து கடவுள் எங்களை தடுத்திருக்கிறார். இந்த போர், ஏற்பட்டால் பாகிஸ்தான் தோல்வி அடையும். போரில், ஒரு நாட்டிற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்று சரண் அடைவது. மற்றொன்று, உங்களின் சுதந்திரத்திற்காக மரணம் வரை போரிடுவது. இதில், பாகிஸ்தான், இரண்டாவது வாய்ப்பிற்காக தான் போராடும். ஓரு அணுஆயுத சக்தி நாடு மரணம் வரை போரிட்டால், அதனால், பல பின் விளைவுகள் படு பயங்கரமாக இருக்கும். இதனால் தான் நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையையும், அனைத்து சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடுகிறோம். தற்போது அவை உடனடியாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


