எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டி.வி. பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்தது.
உள்நாட்டில் டி.வி. உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தி, உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் இந்த வரிச்சலுகையை அளித்துள்ளது. இதன் தொலைக்காட்சி உற்பத்தி செலவு 3 சதவீதம் வரை குறைவதற்கு வாய்ப்ப்புள்ளது. இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 15.5 இன்ச் அளவுக்கு மேல் எல்.சி.டி, எ.இ.டி. டி.வி. பேனல்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த இறக்குமதி வரி 5 சதவீதம் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பானசோனிக் நிறுவனம், தனது தொலைக்காட்சி விலையில் 4 சதவீதம் வரை விலை குறைப்பு செய்து வாடிக்கையாளர்களுக்கு அளிப்போம் எனத் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பேனல்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டதால், இந்தியாவில் நிறுவிய தொலைக்காட்சி நிறுவனத்தை மூடி விட்டு சாம்ஸங் நிறுவனம் வியட்நாமுக்கு சென்றது. அதுமட்டுமல்லாமல் ஜி.எஸ்.டி. வரி மற்றும் பேனலின் செலவு ஆகியவற்றால் தொலைக்காட்சிகளின் விலை உயர்ந்து, விற்பனை குறையத் தொடங்கியது. ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்பால் விற்பனை உயர வாய்ப்புள்ளது.
இது தவிர, பிலிம்களுக்கான சிப், சர்கியூட் போர்ட் அசெம்பிளி போன்றவை டி.வி.கள் தயாரிக்க பயன்படுகின்றன. அவற்றுக்கான சுங்க வரியையும் மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களும், உள்நாட்டு உற்பத்தியாளர்களும் வரவேற்றுள்ளனர். அடுத்த மாதத்தில் இருந்து பண்டிகை காலம் தொடங்க இருப்பதால், மத்திய அரசின் இந்த சலுகையை வாடிக்கையாளர்ளுக்கு நிறுவனங்கள் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
இது குறித்து எல்.ஜி. எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனம் கூறுகையில், மத்திய அரசின் அறிவிப்பு உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமாக அமையும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், சோனி நிறுவனமும், ஹேயர் நிறுவனமும் மத்திய அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: லெபனானில் 31 பேர் உயிரிழப்பு
02 Mar 2026பெய்ரூட், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா இஸ்ரேலைத் தாக்கியதைத் தொடர்ந்து, லெபனான் மீதான இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அ
-
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி
02 Mar 2026தெஹ்ரான், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்தனர்.
-
மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்: இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு
02 Mar 2026புது டெல்லி, மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
-
போரை முன்கூட்டியே நிறத்த வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய பிரதமர் நரேந்திரமோடி..!
02 Mar 2026புது டெல்லி, மேற்கு ஆசிய பிராந்தியத்தின் தற்போதைய பதற்ற நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடினார


