எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு வரும் 23-ம் தேதி தொடங்கும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகை காலத்தில் மக்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்கு ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. 3 ஆண்டுகள் முடிந்து இது 4-வது ஆண்டு. இது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. எந்த விதமான போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் மக்கள் பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதற்கு ஏதுவாக ஏற்பாடுகளை போக்குவரத்து துறையும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் இணைந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை நடத்தி கொண்டிருக்கிறோம். இது தொடர்பான முதல் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
எப்போதும் போல ஆந்திரா மார்க்கமாக செல்லக் கூடிய பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். வேலூர், காஞ்சிபுரம், ஓசூர் மார்க்கமாக செல்லக் கூடிய பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். சென்ற ஆண்டு முதன்முதலாக திருவண்ணாமலை செல்லக் கூடிய பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன. அது பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஏனென்றால், அவர்கள் மின்சார ரயில் மூலமாக தாம்பரம் ரயில் நிலையம் வந்தவுடன், எளிதாக நகரத்தை விட்டு வெளியே செல்வதற்கு ஏதுவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டும் அதேபோல தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து திருவண்ணாமலை மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படும்.
தாம்பரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், விக்கிரவாண்டி வாயிலாக செல்லக் கூடிய பேருந்துகள், அங்கிருந்து இயக்கப்படும். அதே போல, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லக் கூடிய பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தொலைதூரம் செல்லக் கூடிய மதுரை, திருநெல்வேலி, கோவை, ராமநாதபுரம் போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இந்த அனைத்து பேருந்துகளையும் ஒன்றிணைத்து மாநகர பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். அதே போல, ஊரப்பாக்கம் பேருந்து நிலையத்தை தற்காலிக பேருந்து நிலையமாக பயன்படுத்தி வந்தோம். தனியார் ஆம்னி பேருந்துகளிலும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்தவர்கள் அங்கிருந்து வசதியாகப் பயணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தோம். இந்த ஆண்டு அங்கு புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், அதை போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் இறுதியாக முடிவெடுக்கப்படும்.
பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு ஆகஸ்ட் 23 முதல் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. சிறப்பு முன்பதிவு வரும் 23-ம் தேதி தொடங்க இருக்கிறது. அதே போல தமிழகத்தில் தொழில் நகரமாக இருக்கக் கூடிய கோவை, திருப்பூர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அதிகமான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வருவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர். அதற்கும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, அடுத்து நடைபெறும் கூட்டத்தில் அதற்கு உண்டான முடிவுகள் எட்டப்படும். பண்டிகை முடிந்து மக்கள் தங்கள் ஊர்களுக்கு மீண்டும் திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் போக்குவரத்துத் துறை செய்திருக்கிறது. அதே போல, கனரக வாகனங்கள் அதிகம் பயணிக்கும் நேரங்களில் அவை சென்னைக்குள் வராமல் இருப்பதற்காக போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இம்ரான்கானை தனிமை சிறையில் அடைத்து சித்ரவதை: பாகிஸ்தான் எம்.பி. குற்றச்சாட்டு
30 Nov 2025லாகூர், : தனிமை சிறையில் இம்ரான்கானை அடைத்து சித்ரவதை செய்யப்படுவதாக பாகிஸ்தான் எம்.பி. குற்றச்சாட்டியுள்ளார்.
-
தென்காசி அருகே விபத்து: கவுன்சிலர் உட்பட 3 பேர் பலி
30 Nov 2025தென்காசி : சுரண்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
62-வயதில் ஆஸ்திரேலியா பிரதமர் காதல் திருமணம் : பிரதமருக்கு நரேந்திரமோடி வாழ்த்து
30 Nov 2025புதுடெல்லி : 62-வயதில் காதல் திருமணம் செய்து கொண்ட ஆஸ்திரேலியா பிரதமருக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கூட்ட நெரிசல் சம்பவம்: சுப்ரீம் கோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி இன்று கரூர் வருகை
30 Nov 2025கரூர் : கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி இன்று கரூர் வருகிறார்.
-
விரைவில் முழு கொள்ளளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி : பூண்டி ஏரியில் 4 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
30 Nov 2025சென்னை : புயல் எச்சரிக்கையையொட்டி ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
-
இந்த ஆண்டும் திருவண்ணாமலை கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மகா தீபத்தன்று மலை ஏறத்தடை
30 Nov 2025தி.மலை : 'டித்வா' புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழை பொழிவதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வரும் புதன் கிழமை மகா தீபத்
-
உத்தரகாண்டில் நிலநடுக்கம்
30 Nov 2025டேராடூன் : உத்தரகண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
-
உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியல் ஜப்பானை பின்னுக்குத்தள்ளி 3-வது இடத்திற்கு முன்னேற்றிய இந்தியா
30 Nov 2025புதுடெல்லி : லோவி இன்ஸ்டிடியூட் என்ற குழு ‘ஆசிய சக்தி குறியீடு' மூலம் உலகில் தலைசிறந்த நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி
30 Nov 2025நியூயார்க் : அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விமானப்படையின் 80-வது ஆண்டு விழா: வான்சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்த அதிபர் கிம்
30 Nov 2025பியாங்யாங் : வடகொரிய விமானப்படையின் 80-வது ஆண்டு விழாவில் வான்சாகச நிகழ்ச்சியை அதிபர் கிம் கண்டுகளித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக கவர்னர் சாமி தரிசனம்
30 Nov 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
-
எந்த விமானமும் பறக்கக் கூடாது: வெனிசுலாவின் வான்வெளி மூடப்படுவதாக ட்ரம்ப் அறிவிப்பு
30 Nov 2025நியூயார்க் : வெனிசுலாவின் வான்வெளி மூடப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல், சோனியா எதிராக புதிதாக எப்.ஐ.ஆர். பதிவு
30 Nov 2025புதுடெல்லி : நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல்காந்தி, சோனியா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கர்நாடகாவில் சோகம்: விபத்தில் ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலி
30 Nov 2025நகரி : கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் கோவிலுக்கு சென்றபோது, சாலையில் எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
-
இங்கிலாந்தில் இந்தியர் குத்திக்கொலை
30 Nov 2025லண்டன் : இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த அரியானவை சேர்ந்த இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
-
டெல்லியில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் : ராமதாஸ் அறிவிப்பு
30 Nov 2025சென்னை : தேர்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கையை கண்டித்து டெல்லியில் 04.12.2025 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு பா.ம.க.
-
'டித்வா' புயலால் இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 190 ஆக உயர்வு
30 Nov 2025கொழும்பு : டித்வா புயலால் இலங்கை முழுவதும் 9.68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது.
-
டித்வா புயல் எதிரொலி: சென்னையில் 2-வது நாளாக 47 விமானங்கள் சேவை ரத்து
30 Nov 2025சென்னை : டித்வா புயல் காரணமாக, சென்னையில் 2-வது நாளாக நேற்றும் 47 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
-
டித்வா புயல்: தேவையான உதவிகளை மக்களுக்கு செய்ய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
30 Nov 2025சென்னை : டித்வா புயல் காரணமாக பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள களத்தில் தயாராக இருக்குமாறு அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
-
கார்த்திகை தீப திருவிழா வரலாறு
30 Nov 2025தி.மலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீபத்திருவிழா வரலாறு வருமாறு:-
-
கோவையில் கொள்ளை சம்பவத்தில் சுட்டுப்பிடிக்கப்பட்ட 3 பேரில் ஒருவன் சிகிச்சை பலனின்றி பலி
30 Nov 2025கோவை : கோவை கொள்ளை சம்பவத்தில் சுட்டுப்பிடிக்கப்பட்ட 3 பேர்களில் ஒருவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலைியல் ஆசிப் என்பவர் சிகிச்சை பலனின
-
காசாவில் இடிந்த கட்டிடங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான உடல்கள் மீட்பு
30 Nov 2025டெல்அவீவ் : இஸ்ரேல் படைகளின் பல்வேறு உக்கிரமான தாக்குதல்களினால் காசாவில் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் 10,000-க்கும் அதிகமான உடல்கள் சிக்கியிருக்கின்றன என்றும், அ
-
டெல்லியில் தீவிபத்து: 4 பேர் பலி
30 Nov 2025டெல்லி : தலைநகர் டெல்லியில் நடந்த தீவிபத்தில் ஒரு சகோதரி மற்றும் சகோதரர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
-
தமிழ கவர்னரின் கோரிக்கை ஏற்பு: 'ராஜ்பவன்' பெயர் 'லோக் பவன்' என மாற்றம்
30 Nov 2025சென்னை : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், இந்தியா முழுவதும் உள்ள ராஜ்பவன்கள் 'லோக் பவன்' என்றும் (மக்கள் பவன்), ராஜ் நிவாஸ்கள் 'லோக்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-12-2025.
01 Dec 2025


