எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரம் மற்றும் கோவளத்தில் நேற்று சீன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக மாமல்லபுரத்தில் சிற்பங்கள் உள்ள பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். மேலும் வருவாய்த்துறையினரும், போலீசாரும் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். வெண்புருஷம் என்ற கிராமத்தில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதே போல் மேலும் சிலரும் பிடிபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைத்தார். இதை ஏற்று அடுத்த மாதம் 2-வது வாரம் மோடி- ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இரு நாட்டுத் தலைவர்களையும் சந்திக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11-ம் தேதி இந்தியா வருகிறார். அவரது தனி விமானம் சீனாவில் இருந்து நேரடியாக சென்னை வருகிறது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்கும் அவர், பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் சீன அதிபரை வரவேற்கும் பிரதமர் மோடியும், அவருடன் ஹெலிகாப்டரில் புறப்பட்டு வருகிறார். திருவிடந்தையில் தரை இறங்கிய பிறகு பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் காரில் கோவளத்துக்கு புறப்பட்டு செல்வார்கள். கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த சந்திப்பின்போது இந்தியா- சீனா இடையே உள்ள மிக முக்கிய பிரச்சினைகள் குறித்து மோடியும் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். மேலும் மாமல்லபுரத்தில் உள்ள சில அபூர்வ, அதிசய சிலைகளுக்கு மத்தியில் இரு நாட்டு தலைவர்களும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதையடுத்து அந்த சிற்ப பகுதிகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி மாமல்லபுரத்தில் மோடி- ஜி ஜின்பிங் இருவரும் ஏராளமான புகைப்படங்களும் எடுத்துக் கொள்ள உள்ளனர். இதற்காக சிற்பங்கள் உள்ள பகுதிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட சிறப்பு காவல் படையினர் நியமிக்கப்பட்டு இரவு பகல் காவல் இருந்து வந்தனர். தற்போது பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 5 போலீசாரும் ஏ.கே 47 துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவரும் நியமிக்கப்பட்டு இரவு பகல் இரண்டு குழுக்களாக கண்காணித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் உளவுத்துறை போலீசார் மற்றும் சிறப்பு காவல் படையினர் இணைந்து இரவு பகலாக உள்ளுர் பொது மக்களையும் சுற்றுலா பயணிகளையும் ரகசியமாக கண்காணிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சிற்பங்கள் உள்ள பகுதிகளை சீனாவில் இருந்து வந்திருந்த அந்நாட்டு தூதரக அதிகாரிகள் சுற்றுலாத்துறை, தொல்லியல்துறை, வெளியுறவுத்துறை அதிகாரிகள் என 20-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் பேச்சுவார்த்தை நடத்தும் இடம் குறித்தும், அதற்கான பாதுகாப்பு வசதி எப்படி உள்ளது மற்றும் அப்பகுதியின் சுகாதாரம், சுற்றுச்சூழல் எப்படி உள்ளது எனவும் ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்களுடன் இந்திய சுற்றுலாத்துறை அதிகாரிகளும் தமிழக சுற்றுலாத்துறை அலுவலர்களும் தொல்லியல் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையையொட்டி பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலாசேத்ரா மாணவர்கள் இந்த கலை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இந்த கலை நிகழ்ச்சிகளை மோடியும், சீன அதிபரும் பார்வையிடுகிறார்கள். இந்த கலை நிகழ்ச்சிக்காக கலாசேத்ரா மாணவர்கள் ஒத்திகை பார்த்து வருகின்றனர். இந்தியாவின் கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாநாட்டின் போது முதல் நாளில் 30 நிமிடங்களும், மறுநாள் 20 முதல் 25 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. பிரதமர் மோடி, ஜிஜின்பிங் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் வருவாய்த்துறையினரும், போலீசாரும் வீடுவீடாக சோதனை நடத்தினர். உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த நைஜீரிய வாலிபர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய


