முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் மகாத்மா காந்தி சிலைக்கு ராஜ்நாத்சிங் மாலையணிவித்து மரியாதை

புதன்கிழமை, 6 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

மாஸ்கோ : அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோ நகரில் நேற்று காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் , 19-வது இந்தியா - ரஷ்யா ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப மாநாட்டை ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக ரஷ்யாவின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் மற்றும் ராணுவ அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தாஷ்கண்ட் நகரில் இருந்து விமானம் மூலம் நேற்று ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றடைந்த ராஜ்நாத் சிங், அங்குள்ள இந்திய தூதரக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மாவின் 150-வது பிறந்த நாளை உலகம் கொண்டாடி வரும் இவ்வேளையில் அவர் தனது வாழ்க்கையில் கடைபிடித்த கொள்கைகளையும் காந்தீய சிந்தனைகளையும் முன்னோடியாக பின்பற்றி, இந்த பூமியில் அமைதியும் நீடித்த முன்னேற்றமும் ஏற்பட நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்  என தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து