முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானிசாகர் அணை 105 அடியை எட்டியது - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

ஈரோடு : கடந்த சில வாரங்களாக நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வந்த மழையால் 104.74 அடியாக இருந்த பவானிசாகர் அணை முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது.
மேட்டூர் அணைக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் 2 - வது பெரிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 120 அடி கொண்ட இந்த அணையில் 105 அடி வரை தண்ணீரை சேமிக்க முடியும். கடந்த சில வாரங்களாக நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வந்த மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர் மட்டம் 102 அடியை தாண்டியது. இதனால் முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் 104.74 அடியாக இருந்த பவானிசாகர் அணை நள்ளிரவில் முழு கொள்ளளவான 105 அடியை தொட்டது.

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நள்ளிரவில் அணை திறக்கப்பட்டது. அணைக்கு வரும் 2300 கனஅடி தண்ணீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது உபரி நீர் திறப்பு குறைவாக இருந்தாலும் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பவானி ஆற்று கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து