எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இடம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிக முக்கியத்துவம் பெறும். இதற்காக காளைகள் பல மாதங்களுக்கு முன்பே அவற்றை வளர்ப்பவர்களாக போட்டிக்காக சிறப்பாக தயார் செய்யப்படும். இந்நிலையில், சிவகங்கையில் அரசு நிர்ணயித்த விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல், அனுமதிக்கப்படாத இடங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது என கூறப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுபற்றி அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி கோர்ட்டும் கேட்டிருந்தது.
இந்நிலையில், அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த சூழலில், சிவகங்கை மாவட்டத்தில் அரசால் அனுமதிக்கப்படாத இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கில், சிவகங்கை மாவட்டத்தில் 45 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்ட 45 இடங்கள் எவை என அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு, சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


