முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் போட்டியில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் வீராங்கனை ஷஃபாலி

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

கிராஸ் ஐலேட்டில் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி - 20 போட்டியில் இளம் வீராங்கனையான ஷஃபாலி 73 ரன்கள் குவித்தார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி - 20 கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் உள்ள கிராஸ் ஐலேட்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

தொடக்க வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷஃபாலி வர்மா 49 பந்தில் 73 ரன்களும், ஸ்மிரிதி மந்தனா 46 பந்தில் 67 ரன்களும் குவித்தனர்.  இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15.3 ஓவரில் 143 ரன்கள் குவித்தது. ஷஃபாலிக்கு வயது 15 வருடம் 285 நாட்களே ஆகிறது. இதனால் குறைந்த வயதில் அரைசதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 16 வயதில் 214 நாட்கள் ஆன நிலையில் சதம் அடித்திருந்தது. 30 வருடமாக இருந்த சாதனையை குறைந்த வயதில் அரைசதம் அடித்து தற்போது ஷஃபாலி முறியடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து