எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ராமேஸ்வரத்தில் குருநானக் நினைவை போற்றும் வகையில் மையம் அமைக்க இடம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
மகான் குருநானக்கின் 550 - வது ஜெயந்தி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரும், 10 சீக்கிய மத குருக்களில், முதன்மையானவருமான குருநானக் தேவ் ஜி-யின் 550 - வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகின்றேன். மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். குருநானக் அவர்களின் பிறந்தநாள், ஒவ்வொரு வருடமும் நவம்பர் 12ஆம் நாள் “குருநானக் ஜெயந்தி” மற்றும் குருநானக் தேவ் பிரகாஷ் திவஸ்’’ என விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கிய சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் ஏறக்குறைய 270 லட்சம் சீக்கியர்கள் வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் 0.39 சதவீதம் ஆகும். இந்தியாவில் 190 லட்சம் சீக்கியர்கள் வாழ்கின்றனர். இது இந்திய மக்கள் தொகையில் 2 சதவீதம் ஆகும். சீக்கியர்கள் கொள்கை ரீதியாக, நம்பகமான, விசுவாசமான, தேசபக்தி மிகுந்த கடின உழைப்பாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சீக்கியர்களின் பங்கு மிக முக்கியமானது.சீக்கிய மதம் நாடு, மொழி மற்றும் இனப்பாகுபாடுகளைத் தாண்டி, மனித இனத்திற்கு சிறந்த நெறிமுறைகளை வழங்கியுள்ளது. மதசார்பற்ற வாழ்க்கையை ஆன்மீக வாழ்க்கையோடு இணைந்து வாழ வேண்டும் எனவும், இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்து, இறைவனை அடைய முயல்வதே மனித வாழ்வின் குறிக்கோள் எனவும் சீக்கிய மதம் போதிக்கிறது.
மனித வாழ்க்கையில் எந்த ஒரு மனிதனையும் பொருளாதார ஏற்றத்தாழ்வு பார்க்காமல், சமமாகக் கருத வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. இதனைப் போதிக்கும் வகையில் அனைத்து குருத்வாராக்களிலும் நடத்தப்படும் “லங்கார்’, அனைவருக்கும் ஒரே வகையான உணவு வழங்கும் நிகழ்ச்சியானது சிறப்புமிக்கது. குருநானக் தேவ்ஜி 1499 -ம் ஆண்டு தன்னுடைய 30 - வது வயதில் ஞானம் பெற்று தெய்வீக நிலையை அடைந்தார். தன்னுடைய போதனைகளால் மக்களை நல்வழிப்படுத்தி, அவர்களிடையே நிலவி வந்த மூடப் பழக்கவழக்கங்களைக் களைந்தார். பெண்கள் சமுதாயத்தின் கண்கள் எனவும், அவர்களைப் போற்றி மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். சமத்துவம், சகோதரத்துவம், நற்குணம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவம் வாய்ந்த ஆன்மீக, சமூக, அரசியல் தளத்தை உருவாக்கி நேர்மையாக வாழவேண்டும் என குருநானக் போதித்துள்ளார். குருநானக்கின் வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி நடப்போம் எனக் கூறி, குருநானக் ஜெயந்தி நாளான இன்று அவரை வணங்கி, நான் பங்கேற்பதற்கு வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மற்றும் தமிழகத்தில் வாழும் சீக்கிய சகோதரர்கள், பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் வைத்துள்ளார்கள். அவற்றுள் ராமேஸ்வரத்தில், மகான் குருநானக் அவர்கள் ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்ட நினைவைப் போற்றும் வகையில் ‘மையம்’ ஒன்று அமைப்பதற்கு இடம் தேவை என்று கேட்டுள்ளீர்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசால் மையம் ஒன்று அமைக்க இடம் வழங்கப்படும். மற்ற கோரிக்கைகள் அனைத்தும் அரசினுடைய பரிசீலினையில் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வாழ்கின்ற அனைத்து சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கும் தமிழக மக்கள் என்றைக்கும் துணை நிற்பார்கள், தமிழ்நாடு அரசும் அவர்களுக்குத் துணை நிற்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக காங்., தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு
09 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இதுவரை 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Jan 2026திருவள்ளூர், 2021 சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.
-
வெனிசுலா மீதான தாக்குதல் ரத்து அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
09 Jan 2026நியூயார்க், வெனிசுலா மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை ரத்து செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே இன்று கரையை கடக்கும்
09 Jan 2026சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே இ
-
ஜன நாயகன், பராசக்தி பட விவகாரம்: பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதம் மாறியுள்ள தணிக்கை வாரியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
09 Jan 2026சென்னை, ஜன நாயகன், பராசக்தி படங்களின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை: சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஜன.12-ல் ஆஜராகிறார் விஜய்
09 Jan 2026சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக வருகிற 12-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் சி.பி.ஐ. முன் ஆஜராகிறார்.
-
இ.பி.எஸ்.சுடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் ஜன.21-ல் மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாடு
09 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர்களின் மாநாடு வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
ரயில்வே வேலைக்கு நிலம்: லல்லு மீது குற்றச்சாட்டு பதிய டெல்லி நீதிமன்றம் உத்தரவு
09 Jan 2026டெல்லி, ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர், முன்னாள் ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும
-
கோடீஸ்வரர்களுக்காக மட்டும் பா.ஜ.க. அரசு செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
09 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசுகள் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கைவிட்டுவிட்டது.
-
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் தடை: 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது: வழக்கு விசாரணை வரும் 21-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
09 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
கரூர் நெரிசல் விவாகரம்: மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு
09 Jan 2026கரூர், கரூர் பலி சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தடையியல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
-
பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
09 Jan 2026சென்னை, தமிழகத்தில் பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
-
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப்பில் பெறலாம் தமிழ்நாடு அரசு புதிய தகவல்
09 Jan 2026சென்னை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
நியூசி.,க்கு எதிரான தொடர்: தீவிர வலை பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்..!
09 Jan 2026புதுடெல்லி, நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் நேற்று த
-
பொதுச்செயலாளர் பதவி: இ.பி.எஸ்.க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
09 Jan 2026புதுடெல்லி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வங்கதேசத்தில் இந்து வாலிபர் கொலை: முக்கிய குற்றவாளி கைது
09 Jan 2026டாக்கா, வங்கதேசத்தில் இந்து வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது யாசின் அராபத் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: பார்லி., ஜனவரி 28ல் கூடுகிறது; பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்
09 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
09 Jan 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணன் திருக்கோலமாய் காட்சி, மாலை தந்தப்பரங்கி நாற்காலியில் புறப்பாடு.


