எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ராமேஸ்வரத்தில் குருநானக் நினைவை போற்றும் வகையில் மையம் அமைக்க இடம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
மகான் குருநானக்கின் 550 - வது ஜெயந்தி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரும், 10 சீக்கிய மத குருக்களில், முதன்மையானவருமான குருநானக் தேவ் ஜி-யின் 550 - வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகின்றேன். மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். குருநானக் அவர்களின் பிறந்தநாள், ஒவ்வொரு வருடமும் நவம்பர் 12ஆம் நாள் “குருநானக் ஜெயந்தி” மற்றும் குருநானக் தேவ் பிரகாஷ் திவஸ்’’ என விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கிய சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் ஏறக்குறைய 270 லட்சம் சீக்கியர்கள் வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் 0.39 சதவீதம் ஆகும். இந்தியாவில் 190 லட்சம் சீக்கியர்கள் வாழ்கின்றனர். இது இந்திய மக்கள் தொகையில் 2 சதவீதம் ஆகும். சீக்கியர்கள் கொள்கை ரீதியாக, நம்பகமான, விசுவாசமான, தேசபக்தி மிகுந்த கடின உழைப்பாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சீக்கியர்களின் பங்கு மிக முக்கியமானது.சீக்கிய மதம் நாடு, மொழி மற்றும் இனப்பாகுபாடுகளைத் தாண்டி, மனித இனத்திற்கு சிறந்த நெறிமுறைகளை வழங்கியுள்ளது. மதசார்பற்ற வாழ்க்கையை ஆன்மீக வாழ்க்கையோடு இணைந்து வாழ வேண்டும் எனவும், இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்து, இறைவனை அடைய முயல்வதே மனித வாழ்வின் குறிக்கோள் எனவும் சீக்கிய மதம் போதிக்கிறது.
மனித வாழ்க்கையில் எந்த ஒரு மனிதனையும் பொருளாதார ஏற்றத்தாழ்வு பார்க்காமல், சமமாகக் கருத வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. இதனைப் போதிக்கும் வகையில் அனைத்து குருத்வாராக்களிலும் நடத்தப்படும் “லங்கார்’, அனைவருக்கும் ஒரே வகையான உணவு வழங்கும் நிகழ்ச்சியானது சிறப்புமிக்கது. குருநானக் தேவ்ஜி 1499 -ம் ஆண்டு தன்னுடைய 30 - வது வயதில் ஞானம் பெற்று தெய்வீக நிலையை அடைந்தார். தன்னுடைய போதனைகளால் மக்களை நல்வழிப்படுத்தி, அவர்களிடையே நிலவி வந்த மூடப் பழக்கவழக்கங்களைக் களைந்தார். பெண்கள் சமுதாயத்தின் கண்கள் எனவும், அவர்களைப் போற்றி மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். சமத்துவம், சகோதரத்துவம், நற்குணம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவம் வாய்ந்த ஆன்மீக, சமூக, அரசியல் தளத்தை உருவாக்கி நேர்மையாக வாழவேண்டும் என குருநானக் போதித்துள்ளார். குருநானக்கின் வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி நடப்போம் எனக் கூறி, குருநானக் ஜெயந்தி நாளான இன்று அவரை வணங்கி, நான் பங்கேற்பதற்கு வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மற்றும் தமிழகத்தில் வாழும் சீக்கிய சகோதரர்கள், பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் வைத்துள்ளார்கள். அவற்றுள் ராமேஸ்வரத்தில், மகான் குருநானக் அவர்கள் ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்ட நினைவைப் போற்றும் வகையில் ‘மையம்’ ஒன்று அமைப்பதற்கு இடம் தேவை என்று கேட்டுள்ளீர்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசால் மையம் ஒன்று அமைக்க இடம் வழங்கப்படும். மற்ற கோரிக்கைகள் அனைத்தும் அரசினுடைய பரிசீலினையில் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வாழ்கின்ற அனைத்து சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கும் தமிழக மக்கள் என்றைக்கும் துணை நிற்பார்கள், தமிழ்நாடு அரசும் அவர்களுக்குத் துணை நிற்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
- நமது இயக்கத்தை ஒழித்து விடலாம் என்று யார் யாரோ இன்று கிளம்பி இருக்கிறார்கள்: தி.மு.க.வை எந்த கொம்பனும் தொட்டுக்கூட பார்க்க முடியாது : திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகிறது 2 புயல் சின்னம் : வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும்
07 Nov 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமட
-
பாதுகாப்பான அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார் : வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா
07 Nov 2025டெல்லி : அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? - இன்று கடைசி போட்டியில் பலப்பரீட்சை
07 Nov 2025பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் எழுந்துள்ள நிலையில் இன்று பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள கடைசி போட்டியில்
-
டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
07 Nov 2025சென்னை : டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-11-2025.
07 Nov 2025 -
2-வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: முன்னிலை பெற்றது இந்தியா 'ஏ'
07 Nov 2025பெங்களூரு : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சு மூலம் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி முன்னிலை பெற்றுள்ளது.
-
பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
07 Nov 2025பாட்னா : பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
07 Nov 2025பாட்னா, வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும் டெல்லியில் வாக்களித்த பா.ஜ.க.
-
பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது
07 Nov 2025பெங்களூரு : பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் என்ஜினீயர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
-
மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் தகவல்
07 Nov 2025மதுரை, மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனு மீது நவ. 11-ல் விசாரணை : சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Nov 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர்.
-
கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் முன்ஜாமீன்
07 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை: குற்றவாளி ஒருவர் சுட்டுப்பிடிப்பு
07 Nov 2025சேலம் : சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சு
-
அரசு முறை பயணமாக இன்று முதல் 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி முர்மு பயணம்
07 Nov 2025புதுடெல்லி : 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணத்தை இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை ஜனாதிபதி திரெளபதி முர்மு மேற்கொள்ளவிருக்கிறார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
07 Nov 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்பனையானது.
-
'வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி ஏந்திக்கொண்டது - மல்லிகார்ஜுன கார்கே
07 Nov 2025புதுடெல்லி : வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி பெருமையுடன் ஏந்திக்கொண்டது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி அவசியம்: நிர்மலா சீதாராமன் தகவல்
07 Nov 2025மும்பை : வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
07 Nov 2025சென்னை : நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.
-
எட்டயபுரம் அருகே விபத்து - 7 பேர் படுகாயம்
07 Nov 2025மதுரை : லாரி மீது பஸ் மோதி விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
அடுத்த வருடம் இந்தியா வருகிறார் அதிபர் ட்ரம்ப்
07 Nov 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த வருடம் இந்தியா வருகிறார்.
-
புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு
07 Nov 2025சென்னை : புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ரஷ்யாவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு
07 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவில் காணமால் போன இந்திய மாணவரின் சடலமாக மீட்கப்பட்ட சமபவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தோனேசியா: மதவழிபாட்டு தலத்தில் திடீர் குண்டு வெடிப்பு - 54 பேர் படுகாயம்
07 Nov 2025ஜகார்தா, இந்தோனேசியாவில் உள்ள மதவழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது இதில் 54 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
முதல்வர் பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை - அன்புமணி ராமதாஸ் பேச்சு
07 Nov 2025சென்னை, முதல்வர் பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.


