எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கிட தமிழக அரசு ரூ.266.70 கோடி நிதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது,
கடந்த ஜூலை 16 - ம்தேதி சட்டமன்றப் பேரவை விதி 110 - ன்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் வசதி அளித்து தொழில் துவங்க மூலதன உதவி, கடன் உத்தரவாதம் மற்றும் வட்டி உதவி வழங்கும் திட்டங்கள், 2019-20ஆம் ஆண்டில், நபார்டு வங்கியின் நாப்கிசான் நிதி நிறுவன உதவியுடன் செயல்படுத்த ரூ.266 கோடி வரை செலவிடப்படும் என அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் 2014 - 15 - ஆம் ஆண்டு முதல் விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாக உருவாக்குவதற்கு பெரும் ஆதரவு அளித்து வருகிறது. தமிழ்நாடு அரசு மட்டுமல்லாது. மத்திய சிறு, குறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு மற்றும் நபார்டு போன்ற பிற நிறுவனங்களும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கி வருகின்றன. அவ்வாறு உருவாக்கப்பட்ட அமைப்புகள் உட்பட இது வரை 500 - க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
இந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடக்க நிலையிலேயே உள்ளதால், உறுப்பினர்களை அணிதிரட்டுதல், நிறுவன ஒத்திசைவு, சட்ட ரீதியான இணக்கம், தொழில் முனைவோர் திறன், வணிக மற்றும் சந்தைப்படுத்தும் திறன், நிதி ஆதாரம் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இச்சவால்களை எதிர்கொண்டு, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் லாபகரமானதாக இயங்க வழிவகுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட, திட்டங்களை செயல்படுத்த அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கீழ்க்கண்ட திட்டங்களின் மூலம் தகுதி வாய்ந்த வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் பயன்பெற உள்ளன.
இடைநிலை மூல தன உதவி
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் துவங்கிய ஆண்டுகளில் அந்நிறுவனங்களில் உள்ள மூலதன பங்களிப்பினை அதிகரிப்பதன் மூலம் ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் ரூ.10 லட்சம் வரை இடைநிலை மூலதன கடன் உதவித் தொகையாக வழங்கப்படும். இந்தத் தொகை மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் விளைபொருட்களை தரம் பிரித்து, மதிப்பு கூட்டி, சிப்பம் கட்டி, தர அடையாளம் வழங்குதல் உட்பட பல்வேறு சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும். ஐந்தாண்டு முடிந்த பிறகு மிகக் குறைந்த வட்டியாக ஆண்டுக்கு 4 சதவீத வட்டி விகிதத்துடன் இத்தொகையினை திருப்பி செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தினை செயல்படுத்த அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 500 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் பயன்பெறும்.
வங்கியில் கடன் பெறுவதற்கு தமிழ்நாடு அரசே வழங்கும் கடன் உத்தரவாதம் பொதுவாக உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் கடன் வேண்டி வங்கிகளை அணுகும்போது, அடமானம் கோருவதுடன், வங்கியில் வட்டி விகிதமும் அதிகமாக இருக்கும். இதனால் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் வங்கிக் கடன் பெறுவதற்கு அஞ்சுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு உற்பத்தியாளர் நிறுவனமும் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கு 50 சதவீத உத்தரவாதத்தை அரசே வழங்கும். இத்திட்டத்தினை செயல்படுத்த ரூ.50 கோடி நிதிய மூலதனமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு நிர்ணயித்த தகுதிகளின் அடிப்படையில் தேர்வாகும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் இத்திட்டத்தின் பலன்களை பெற்று, வேளாண் வணிகத்தை மேலும் நல்லமுறையில் முன்னேற்ற முடியும்.
சலுகையுடன் கூடிய சுழல் நிதி
தற்போது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும்போது, இதர வணிக நடவடிக்கைகளுக்கு இணையாக 12 முதல் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் திறம்பட வளர்வதற்கும், அதிக வருமானம் ஈட்டுவதற்கும் இந்த வட்டி விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதன் பேரில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செலுத்தும் வட்டி விகிதம் 12 முதல் 14 சதவீதத்திலிருந்து 8 முதல் 9 சதவீதமாக குறைக்க ஏதுவாக, ரூ.166.70 கோடி நிதி நாப்கிஸான் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசின் பங்காக வழங்கப்படும். நாப்கிஸான் நிறுவனம் தன் பங்காக ரூ.333.30 கோடி நிதி ஒதுக்கி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கூடிய கடன் வழங்கும். இதன் மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஈட்டும் கூடுதல் லாபத்தை மீண்டும் முதலீடு செய்து வணிகத்தை மென்மேலும் பெருக்கிக் கொள்ள இயலும்.
ஆக மொத்தம், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை வலுப்படுத்தி, வணிக ரீதியாக வளரும் வகையில், அரசு இத்திட்டத்தினை நான்கு ஆண்டுகளில் செயல்படுத்திட ரூ.266.70 கோடி ஒப்பளிப்பு செய்துள்ளது. மேற்படி மூன்று திட்டங்களையும் ஒருங்கிணைத்து வேளாண் பெருமக்களுக்கு வழங்கும் ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான். தற்போது அரசு அறிவித்திருக்கும் இத்திட்டத்தின் மூலம், சுமார் 1,000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு, 10 லட்சம் வேளாண் பெருமக்கள் 4 ஆண்டுகளில் பயன்பெறுவார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா : ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
இந்தியாவில் பார்வையற்றோருக்கான மகளிர் டி-20 உலகக்கோப்பை நடக்கிறது
16 Sep 2025மும்பை : பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி: 2 இந்திய முன்னாள் வீரர்களுக்கு சம்மன்
16 Sep 2025புதுடெல்லி : ‘ஓன்எக்ஸ்பெட்’ என்ற பந்தய செயலியுடன் தொடர்புடைய வழக்கின் விசாரணையின் பகுதியாக அமலாக்க இயக்குநரகம் இவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.