எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கள்ளக்குறி்ச்சி : தமிழகத்தின் 34-வது மாவட்டம் கள்ளக்குறி்சசியின் சிறப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உங்கள் முகமலர்ச்சியோடு, அரசால் தோற்றுவிக்கப்படுகிறது. இப்புதிய மாவட்டத்தின் மக்களுக்கு முதலில் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலாற்றுக்கு வடக்கில் இருப்பது வட ஆற்காடு மாவட்டம் என்றும், தெற்கில் இருப்பது தென் ஆற்காடு மாவட்டம் என்றும் இருந்தது. 1993-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து பிரித்து விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இன்று விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவாவதால், மாவட்டத்திற்கான அரசு அலுவலக வளாகம், மாவட்ட மருத்துவமனை, பல்வேறு துறைகளின் மாவட்டஅலுவலகங்கள் என ஒரு மாவட்டத்திற்கு உரிய அனைத்து வசதிகளையும் பெறும்.இதனால், இது வரை மக்கள் தங்களது தேவையினை நிறைவேற்றிக் கொள்ள அரசு அலுவலகங்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்யும் நேரம் குறைந்து, எளிதில் அரசு அலுவலகங்களை அணுக வழிவகை செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டமும், மக்களும் வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்ல இது ஏதுவாக இருக்கும். பழம் பெருமைகளைக் கொண்டது இம்மாவட்டம். உதாரணமாக, ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கிடையே, தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு நாடு அமைந்திருந்தது. மலைகள் அதிகம் கொண்டது என்பதால் மலையமா நாடு என்று அழைக்கப்பட்டது. அம்மலை நாடு பெண்ணையாற்றின் உதவியால் பல வளங்களும் பெற்று சிறந்திருந்தது.
திருக்கோவிலூரை தலைநகரமாகக் கொண்ட அம்மலையமா நாட்டை காரி என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் முதலில் முள்ளூருக்கும், முள்ளூர் மலைக்கும் தலைவனாகி, பிறகு மலை நாட்டிற்கே அரசன் ஆனான். சிறந்த கல்விமானான காரி, ஊர்கள் தோறும் கல்விக் கூடங்கள் பல அமைத்தான். ஆண், பெண் பேதமின்றி மக்கள் கல்வியறிவு பெற ஏற்பாடு செய்தான். காரி, கல்வி மட்டுமன்றி, போர்ப் பயிற்சியிலும் வலிமை கொண்டவனாக விரும்பினான். வில், வேல் போன்ற படைக்கல பயிற்சிகளிலும் பங்கேற்று வலிமை உடையவனாக விளங்கினான். அதனால் மூவேந்தர்களும், தங்களுக்கு வேண்டிய பொழுதெல்லாம் அவனைப் படைக்குத் துணையாக அழைப்பர். காரி எப்பக்கமோ, அப்பக்கமே வெற்றி என்ற நிலையில் காரியின் போர்த்திறன் பெரிதும்போற்றப்பட்டது. கல்வி, வீரம் மட்டுமன்றி, நெஞ்சின் ஈரத்திலும் நிகரில்லாத வள்ளலாக காரி திகழ்ந்தான். போரில் செய்த உதவிகளின் பொருட்டு, மூவேந்தர்களும் அவனுக்குபல பொருட்களை பரிசாக வழங்கினார்கள். அவ்வாறு பெற்ற செல்வத்தை ஒருபோதும் தன்னுடையதாகக் கொண்டதில்லை காரி. அனைத்தும் பிறருடையது என்ற எண்ணம்கொண்டிருந்தான். அத்தகைய சிறப்பு வாய்ந்த காரி மன்னர் ஆட்சி செய்த ஊர் தான்திருக்கோவிலூர் ஆகும். அதே போல, சின்ன சேலம், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் பிரதான நகரமாக உள்ளது. இந்த சின்ன சேலம் பேரூராட்சியில் பல நவீன அரிசி ஆலைகள் உள்ளன. மேலும், இப்பேரூராட்சிப் பகுதியில்அதிக அளவு நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளதால், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு நெல் அறுவடை இயந்திரங்கள் இப்பகுதியில் இருந்து தான் செல்கின்றன.
புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகராக கள்ளக்குறிச்சி நகராட்சி விளங்கும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மக்கள் தொகை 13,70,281. மாவட்டத்தின் பரப்பளவு 3,520.37 சதுர கிலோ மீட்டர். கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் இயங்கும். மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்ன சேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன் மலை ஆகிய 6 வட்டங்களும், 23 உள் வட்டங்களும், 558 வருவாய் கிராமங்களும் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தில் திருக்கோவிலூர் (பகுதி), கள்ளக்குறிச்சி, சங்கராபுரம்,உளுந்தூர்பேட்டை (பகுதி), ரிஷிவந்தியம் என 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் உட்பட 9 ஊராட்சி ஒன்றியங்களும், சின்ன சேலம்,சங்கராபுரம் உட்பட 7 பேரூராட்சிகளும், 406 கிராம ஊராட்சிகளும் அமைந்துள்ளன.
இம்மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன் மலையானது கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதியாகும். மேலும், பச்சைமலை, ஜவ்வாது மற்றும் சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவேரி ஆற்றுவடி நிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லைகளாக அமைந்துள்ளன. கல்வராயன் மலையின் வட பகுதி சின்ன கல்வராயன் மலை என்றும், தென் பகுதி பெரியகல்வராயன் மலை என்றும் அழைக்கப்படுகிறது. மணியாறு மற்றும் முக்தா ஆறு இணையும் இடத்தில் மணிமுக்தா அணை கட்டப்பட்டுள்ளது. இம்மலையில்தான்கோமுகி நதி உற்பத்தியாகி, அந்நதியின் குறுக்கே கோமுகி அணை கட்டப்பட்டுள்ளது.கோமுகி அணையைச் சுற்றி 15 ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய பூங்காஅமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் நீராட மேகம், பெரியார் மற்றும்புண்ணிம்பாடி போன்ற அருவிகள் உள்ளன. மலையில் உள்ள ஓடையின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கப்பட்டு, படகு குழாம் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்று சுற்றுலாப் பயணிகளை கவரும் பல்வேறு அம்சங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன.இம்மாவட்டத்தில் மணிமுக்தா மற்றும் கோமுகி அணைகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 16,300 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன. இதில் நெல் மற்றும் கரும்பு,கடலை, எள் மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்கள் அதிக அளவில் சாகுபடிசெய்யப்படுகின்றன. இதனால் இம்மாவட்டத்தில் கோமுகி சர்க்கரை ஆலை, மூங்கில் துறைப்பட்டு சர்க்கரை ஆலை, தியாகதுருகம் சர்க்கரை ஆலை என பலசர்க்கரை ஆலைகளும், நவீன அரிசி ஆலைகள் போன்ற பல தொழிற்சாலைகளும் நிறைந்துள்ளன. மேலும், இங்கே அரசின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளிலும், புதியகாடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள மலையோர கிராமங்களிலும் சுவைமிக்க விளாம் பழங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளியூர்களுக்குஅனுப்பப்படுகிறது.
இது போன்ற எண்ணற்ற இயற்கை வளங்களைக் கொண்ட இந்த மலைப் பகுதிகளை, வருங்காலங்களில், தேவைகளுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மலைவாழ் மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். அரசும் மலைவாழ் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து நல்ல பலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வராயன் மலையில் வாழும் பழங்குடியின மக்களுக்கான திட்டங்களை சீரியமுறையில் செயல்படுத்த ஒரு திட்ட அலுவலரும், அலுவலகமும் 2017- முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் மலைவாழ் மக்களுக்கான திட்டங்கள் விரைந்து சென்றடைவது உறுதி செய்யப்பட்டது. பி.எட்., மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த பழங்குடியினஇளைஞர்களைக் கொண்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்ட பழங்குடியின மக்கள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள ஏதுவாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டுத் திறன் மேம்பாட்டுமையம் ஒன்று வெள்ளிமலையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய கள்ளக்குறிச்சி மாவட்டம் தோற்றுவிக்கப்படுவதன் மூலம், மலைவாழ் மக்கள் வாழுகின்ற மலைப் பிரதேசமான கல்வராயன் மலையை உள்ளடக்கிய ஒரு புதிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது இதற்காக கட்டடம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்., சுகாதாரத் துறை மூலமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 3.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விபத்துமற்றும் அவசர கால சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 12.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாய் சேய் நலப் பிரிவு அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை மூலமாக பல்வேறு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டும் பல்வேறு பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவவாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
காசாவில் தீவிரமடையும் போர்: இஸ்ரேலுக்கு மேலும் ஆயுதங்களை வழங்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்..!
20 Sep 2025வாஷிங்டன், காசாவில் தீவிரமடையும் போரை தொடர்ந்து இஸ்ரேலுக்கு கோடிக்கணக்கான மதிப்பிலான ஆயுதங்களை ட்ரம்ப் நிர்வாகம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பால் 375 பொருட்களின் விலை மேலும் குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்
20 Sep 2025கோவில்பட்டி, ஜி.எஸ்.டி. புரட்சியால் 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், ஜி.எஸ்.டி.