எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 2615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருநாள் வரும் 10-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுவதை முன்னிட்டும்,11-ம் தேதி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,விழுப்புரம் சார்பாக சென்னையிலிருந்து சுமார் 500 சிறப்பு பேருந்துகளும், மற்றும் தாம்பரம், விழுப்புரம், திருப்பத்தூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, காஞ்சிபுரம், வேலூர், ஆரணி, ஆற்ககாடு போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 1112 சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்படுகிறது. கும்பகோணம் அரசு
போக்குவரத்துக் கழகம் சார்பாக கும்பகோணம், திருச்சி பகுதிகளிலிருந்து 450 சிறப்பு பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சேலம், பொங்களூர், தர்மபுரி, ஓசூர் பகுதிகளிலிருந்து 251 சிறப்பு பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக 122 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்து கழகம் சார்பாக 100 சிறப்பு பேருந்துகளும், நெல்லை அரசு போக்குவரத்துக் கழம் சார்பாக நெல்லை, தூத்துக்குடி பகுதிகளிலிருந்து 80 சிறப்பு பேருந்துகளும் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 2615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் அனைவரும் இந்த சிறப்புப் பேருந்து இயக்க வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


