எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை - சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் இரண்டாம் நாளாக பிரம்மாண்டமான பலூன் திருவிழா மற்றும் விமானவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை 5 மணிக்கு துவங்கிய இவ்விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தொழிலதிபர்கள், பெற்றோர்கள் மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளி மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், தயாராக இருந்த பிரம்மாண்டமான பலூன்களில் உற்சாகத்தோடு பறந்தனர்.
முதல் நாள் நிகழ்வான துவக்க விழா நிகழ்ச்சியை கதர் மற்றும் கிராம தொழில் வாரிய அமைச்சர் திரு. பாஸ்கரன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 100 அடிக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட பலூனில் காற்றினை நிரப்பி அதனை சூடேற்றி வெளிப்புற காற்று அழுத்தத்திற்கு ஏற்ப இயக்கி, வானில் பயணிக்கும் முறைகள் குறித்து செயல் விளக்கத்துடன் விழா துவங்கியது. பிரம்மாண்ட பலூனில் காற்றை நிரப்பும் போது கலந்துகொண்ட பொதுமக்கள் பெரும் வியப்புடன் பார்வையிட்டனர்.
விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கூறியதாவது :
விவசாயத்தை நம்பியுள்ள கிராமப்புற பகுதிகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நமது பகுதியில் கல்வி கற்போரின் சிறப்புகள் நாள்தோறும் பெருகி வருகின்றது. இன்று நடைபெறுகின்ற விமானத்துறை சம்பந்தப்பட்ட கண்காட்சி போல் அனைத்து பள்ளிகளும் புதுமையான பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். சிறப்பான, புதுமையான முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்தி வரும் மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளிக்கு வாழ்த்துக்கள். பெற்றோர்கள் மாணவர்களை இது போன்ற நல்ல பயிற்சிகளுக்கு உட்படுத்தும் போது, மிகவும் ஒழுக்கம் உடையவர்களாக வலம் வருவது உறுதி என்றார்.
ஆர்சி மாதிரி விமானங்களின் சாகச பயணம், விமான ஓட்டுனர் பயிற்சி, காகித விமான வடிவமைப்பு பயிற்சி, பல்வேறு நவீன விமானங்களின் கண்காட்சி என மாணவர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் விதமாக துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகளோடு பல்வேறு பயிற்சிகள் நடைபெற்றன.
மாணவர்களுக்கான கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சி மேலும் இரு நாட்கள் கூடுதல் பயிற்சிகளுடன் நடைபெற உள்ளது. திங்கட்கிழமை மாலை 6 மணியுடன் இவ்விழா நிறைவு பெற உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினார்.
விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன், டிஎஸ்பி அப்துல் கபூர், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர். ராதாகிருஷ்ணன் பெண்விமானி.பூர்ணா பார்த்தசாரதி, நகர்பிரமுகர்கள் உதயசூரியன், பள்ளி நிர்வாகிகள் ராமதாஸ், தெட்சணாமூர்த்தி, கலைக்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
பள்ளித் தலைவர் பால.கார்த்திகேயன் தலைமையில் குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவன மேலாளர் பெனடிக்ட், ஜீ லர்ன் நிறுவன மேலாளர் லோகேஷ்குமார் குழுவினர் விழாவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


