எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : குடியுரிமை சட்டம் குறித்த அவதூறான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், தமிழகத்தில் எந்தவொரு சிறுபான்மையினரும் அச்சப்பட தேவையில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,
அனைத்து ஊடக நண்பர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் என்னுடைய இதயபூர்வமான தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பாகவும், கூட்டணியின் சார்பாகவும் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய துணைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், அனைவரும் என்னை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளனர். அ.தி.மு.க அரசு சிறப்பான முறையில் செயல்படுவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அவை வருமாறு:-
கேள்வி:- மத்திய அரசு பல்வேறு விருதுகளை கொடுத்திருக்கிறது, ஆனால் பொன் ராதாகிருஷ்ணன் பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறியிருக்கிறது என்று மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறாரே?
பதில்:- ஊடகத்தின் வாயிலாக எங்களுடைய மீன்வளத் துறை அமைச்சர் அழகாக பதில் சொல்லியிருக்கின்றார்.
கேள்வி:- அது குறித்து முதலமைச்சரின் கருத்து என்ன?
பதில்:- அதுதான் என்னுடைய கருத்து.
கேள்வி:- தீவிரவாதிகள் ஊடுருவல் இப்பொழுது அதிகமாகியிருக்கிறது, குறிப்பாக, நெல்சன் சுட்டுக் கொல்லப்பட்டது, அதே போல எல்லைகளை பாதுகாக்க எதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?
பதில்:- எல்லைகளில் எல்லாம், கடல் வழியாகவும், தரை வழியாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, இன்றைக்கு தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக நிலவிக் கொண்டிருக்கின்றது. இதை சிலர் சீரழிக்க முயற்சிக்கின்றார்கள், அதை அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து ஒடுக்கி, தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக விளங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
கேள்வி:- தலைவர் தேர்தலில் பல்வேறு முறைகேடு நடந்ததாக ஸ்டாலின் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறிக் கொண்டிருக்கிறாரே?
பதில்:- எந்த இடத்தில் சேலம் மாவட்டத்தில் தவறு நடந்திருக்கிறது? இந்த மாவட்டத்தில் எந்தவித தவறும் நடக்கவில்லை. உதாரணத்திற்கு நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்ட 2 கவுன்சிலர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். ஒரு கவுன்சிலர் 11 வாக்குகள் வித்தியாசத்திலும், இன்னொருவர் 17 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். எங்களுடைய மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் சேலம் மாவட்ட கவுன்சிலராக போட்டியிட்டவரும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதேபோல ஆத்தூர் மாவட்ட கவுன்சிலராக போட்டியிட்டவரும் வெகு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏற்காடு ஒன்றியத்தில் போட்டியிட்ட மாவட்ட கவுன்சிலரும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆகவே, இந்தத் தேர்தல் நியாயமாக, முறையாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டிருக்கின்றது. அதுவும், தேர்தல் அதிகாரிகள்தான் வாக்கு மையங்களில் வாக்குகளை எண்ணுகின்றார்கள், அங்கு பலத்த பாதுகாப்பை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கின்றது. தடுப்பு அமைக்கப்பட்டு தடுப்புக்கு வெளியிலே தான் எல்லா முகவர்களும் இருந்து வாக்குச் சீட்டுகளைப் பார்த்து எந்தெந்த வாக்குகள் யார், யாருக்கு விழுந்திருக்கிறது என்ற அந்த விவரத்தைக் காட்டி, அதிகாரிகள் அந்தந்த பெட்டிகளில் போடுகின்றார்கள். ஆகவே, இதில் எந்தவித முறைகேடு நடைபெறுவதற்கும் வாய்ப்பில்லை. ஏதாவது ஒரு குறை சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் வேண்டுமென்றே திட்டமிட்டு, அவர்கள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட்டார்கள். காலையில் 8 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 8 மணி வரையிலும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. அதுவும் நின்றுகொண்டே, அரசு அதிகாரிகள் வாக்குகளை முறையாக எண்ணினார்கள். முகவர்கள் ஏதாவது சந்தேகத்தை எழுப்பினால், அதற்கு தீர்வு கண்ட பிறகு தான் அந்தந்த வாக்குப் பெட்டிகளில் அந்த வாக்கை அளிக்கிறார்கள். அப்படி இருக்கின்ற காரணத்தினால்தான், காலதாமதம் ஏற்பட்டது. இதில் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை, எந்த இடத்திலும் அப்படிப்பட்ட தவறு நடைபெற்றதாக செய்தி வரவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களும் இப்படி பரப்பி வருகிறார்கள். நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க. பெரிய வெற்றியைக் கண்டிருக்கின்றது.
கேள்வி:- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் பி.ஏ. மரணம் தொடர்பாக சிபிஐ, தமிழக காவல் துறையிடம் விளக்கம் கேட்டிருக்கிறது, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணை அறிக்கை கிடைத்த பின்புதான் அதற்கு பதில் சொல்ல முடியும்.
கேள்வி:- தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து?
பதில்:- தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், தமிழ் மண்ணிலே பிறந்த எந்த சிறுபான்மையின மக்களும் பாதிக்கப்பிற்குள்ளாக மாட்டார்கள், இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பிரதமரும் தெளிவுபடுத்தியிருக்கிறார். வேண்டுமென்றே சில எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியல் லாபத்திற்காக அவதூறான செய்தியை, இன்றைக்கு சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் வகையிலே இப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டு, அதனால் சிறுபான்மையின மக்கள் அச்சப்பட்டிருக்கின்றார்கள். இது குறித்து விளக்கமாக, தெளிவாக சட்டமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் வாழ்கின்ற எந்த ஒரு சிறுபான்மையின மக்களும் அச்சப்பட வேண்டியதில்லை, அவதூறான செய்தியை நம்ப வேண்டியதில்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் எந்த ஒரு சிறுபான்மையின மக்களும் பாதிக்கப்பட மாட்டார்கள், அவர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்று சட்டமன்றத்திலேயே எங்களுடைய கழகத்தின் சார்பாகவும், அதேபோல அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கின்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெளிவுபடுத்தியிருக்கின்றார். நானும் சட்டமன்றத்திலே தெளிவுபடுத்தியிருக்கிறேன். இதை வேண்டுமென்றே ஊடக நண்பர்களும், பத்திரிகை நண்பர்களும் கேள்வி கேட்பது, பத்திரிகையில் வெளிவருவது, எதிர்க்கட்சிகள் பேசுவது, இது தேவையற்ற ஒரு பதற்றத்தை உண்டாக்குகின்ற செயலாகத்தான் நான் கருதுகின்றேனே தவிர, தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், எந்த சிறுபான்மையின மக்களும் குறிப்பாக இஸ்லாமியர்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.
கேள்வி:- தமிழகத்தில் அமலுக்கு வந்துவிட்டதா?
பதில்:- இல்லை.
கேள்வி:- மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பயன்பாடு குறித்து நாடாளுமன்றக்குழு இந்த பொங்கல் நாளில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்களே, அது பற்றி தங்கள் கருத்து என்ன?
பதில்:- இதுபோன்று எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக காங்., தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு
09 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இதுவரை 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Jan 2026திருவள்ளூர், 2021 சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.
-
வெனிசுலா மீதான தாக்குதல் ரத்து அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
09 Jan 2026நியூயார்க், வெனிசுலா மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை ரத்து செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜன நாயகன், பராசக்தி பட விவகாரம்: பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதம் மாறியுள்ள தணிக்கை வாரியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
09 Jan 2026சென்னை, ஜன நாயகன், பராசக்தி படங்களின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.
-
வங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே இன்று கரையை கடக்கும்
09 Jan 2026சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே இ
-
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை: சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஜன.12-ல் ஆஜராகிறார் விஜய்
09 Jan 2026சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக வருகிற 12-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் சி.பி.ஐ. முன் ஆஜராகிறார்.
-
இ.பி.எஸ்.சுடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் ஜன.21-ல் மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாடு
09 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர்களின் மாநாடு வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
ரயில்வே வேலைக்கு நிலம்: லல்லு மீது குற்றச்சாட்டு பதிய டெல்லி நீதிமன்றம் உத்தரவு
09 Jan 2026டெல்லி, ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர், முன்னாள் ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும
-
கோடீஸ்வரர்களுக்காக மட்டும் பா.ஜ.க. அரசு செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
09 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசுகள் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கைவிட்டுவிட்டது.
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் தடை: 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது: வழக்கு விசாரணை வரும் 21-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
09 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட
-
பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
09 Jan 2026சென்னை, தமிழகத்தில் பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
-
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப்பில் பெறலாம் தமிழ்நாடு அரசு புதிய தகவல்
09 Jan 2026சென்னை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
கரூர் நெரிசல் விவாகரம்: மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு
09 Jan 2026கரூர், கரூர் பலி சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தடையியல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
-
நியூசி.,க்கு எதிரான தொடர்: தீவிர வலை பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்..!
09 Jan 2026புதுடெல்லி, நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் நேற்று த
-
பொதுச்செயலாளர் பதவி: இ.பி.எஸ்.க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
09 Jan 2026புதுடெல்லி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வங்கதேசத்தில் இந்து வாலிபர் கொலை: முக்கிய குற்றவாளி கைது
09 Jan 2026டாக்கா, வங்கதேசத்தில் இந்து வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது யாசின் அராபத் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: பார்லி., ஜனவரி 28ல் கூடுகிறது; பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்
09 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
09 Jan 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணன் திருக்கோலமாய் காட்சி, மாலை தந்தப்பரங்கி நாற்காலியில் புறப்பாடு.


