முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி

வியாழக்கிழமை, 26 மார்ச் 2020      இந்தியா
Image Unavailable

டெல்லியில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அனுமதி வழங்கியுள்ளார்.

ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க குவிவதால், கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் டெல்லி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. டெல்லியில் உள்ள வர்த்தகக் கடைகள் 24 மணி நேரமும் செயல்படுவதை அனுமதிக்குமாறு காவல்துறைக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை ஆன்லைன் மூலம் வழங்கும் நிறுவனங்கள் பணியாற்ற அனுமதிப்பதோடு, அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை 24 மணி நேரமும் இயக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது என்று முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ஆகியோர் செய்தியாளர்களின் சந்திப்பின் போது அறிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து