எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாநிலங்களே முடிவு எடுக்க பிரதமர் அனுமதித்தால் கொரோனா பரவாத மாவட்டங்களில் ஊரடங்கு வாபஸ் பெறப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார்.
கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது,
கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மாநில அரசின் அனைத்து வகையான வரி வருவாயும் நின்று விட்டது. ஊரடங்கு உத்தரவை அந்தந்த மாநிலங்களே சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று பிரதமர் கூறி அனுமதித்தால், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்படும். மக்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ளலாம். ஆனால் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு மக்கள் சென்று வர அனுமதிக்க மாட்டோம். கொரோனா பாதித்துள்ள மாவட்டங்களில் ஊரடங்கை வாபஸ் பெற்றால், பெரிய அளவில் அந்த வைரஸ் பரவும். அதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தும் நிலையில் நிதி நிலை சரியாக இல்லை. சில முக்கியமான, தவிர்க்க முடியாத திட்டங்கள் மட்டுமே அமல்படுத்தப்படும். மற்ற திட்டங்கள் அனைத்தும் 5, 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படும். தற்போதைய சூழ்நிலையில் இது தவிர்க்க முடியாத நடவடிக்கை ஆகும். கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சரிசெய்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறேன். மத்திய, மாநில அளவில் நிதி பற்றாக்குறை உள்ளது. வரி கிடைக்க மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்க அரசு விரும்புகிறது. மது பழக்கம் உள்ளவர்களை கட்டுப்படுத்துவது மிக கடினம். பெங்களூருவில் இன்னும் ஓரிரு நாளில் சில சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைக்க முடிவு செய்துள்ளோம். அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது குறித்து ஆலோசிக்கவில்லை. இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும். கடந்த மார்ச் மாதத்திற்கான சம்பளத்தை தற்போது செலுத்தி விட்டோம். அடுத்த மாதம் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய


