முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் ஜூன் மாதத்திற்கான தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் தற்காலிக நிறுத்தம்

வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஜூன் மாதத்திற்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் 2 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படும். இதனால் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்வார்கள். இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு கோட்டா இன்று வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தற்காலிகமாக டிக்கெட் முன்பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், மே 30-ம் தேதி வரை தரிசனம் மற்றும் அறைகள் முன்பதிவு செய்த பக்தர்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்தும், அதற்கான பணத்தை மீண்டும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 20-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டு சுவாமிக்கு நடைபெறும் பூஜைகள் மட்டும் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. இதில் அர்ச்சகர்கள் மற்றும் சில அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து