எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர், மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் கதாநாயகனுக்கும், ஜனநாயகனுக்கும் போட்டி கிடையாது. இது சினிமா அல்ல, ரியல் ஆட்டம். சினிமாவில் வேண்டுமானால் எதுவும் நடக்கலாம். ஜனநாயகன் அதிகாரத்தை நோக்கி வருகிறது. நாங்கள் அதிகாரத்தை நோக்கி வரவில்லை. நாங்கள் மக்களுக்கு பல திட்டங்களை கொண்டுவர போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
தமிழகம், இந்த அளவுக்கு முன்னேறியதற்கு தி.மு.க.வின் உழைப்பே காரணம். பல போராட்டங்கள், அடக்கு முறைகளை எதிர்த்து ரியலாக போராடிய இயக்கம் தி.மு.க. அ.தி.மு.க - பா.ஜனதா கூட்டணி என்பது ஒரு பழைய சோறு. தி.மு.க. வலுவான இயக்கமாக உள்ளது. தமிழக அரசின் சாதனைகளை பார்த்து, மேலும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரும்.
எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை. அந்த கட்சிக்கும் தகுதி இல்லை. மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளன. அதனால் எங்களுடன் கூட்டணி சேர்ந்து, மக்கள் பணியாற்ற பல கட்சிகள் விரும்புகின்றன. அதனால் விரைவில் பல்வேறு கட்சிகள் தி.மு.க.வில் இணைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


