எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வக்பு வாரியத்துக்கு, தலைவர் உள்பட 10 உறுப்பினர்கள் நியமனம் செய்து, கடந்த ஆண்டு நவம்பர் 28-ந்தேதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், மத்திய அரசின் ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை சட்டத்தை முறையாக பின்பற்றாமல் வாரிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறி வக்கீல் சவுகத் அலி முகமது என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்துள்ளார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில், “சட்ட விதிகளின்படி, வக்பு வாரியத்தில் மொத்தம் உள்ள உறுப்பினர்களில் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும். மாநில பார் கவுன்சிலில் இருந்து ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இதை அரசு பின்பற்றவில்லை” என வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதுவரை வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதிக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


