முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2020      வர்த்தகம்
Image Unavailable

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கொரோனா எதிரொலியாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த வாரம் பிராங்க்ளின் டெம்பிள்டன் என்ற மியூச்சுவல் பண்ட் நிறுவனம் 6 திட்டங்களை நிறுத்தியது.  இது கடந்த 23-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.  நெருக்கடியான சூழ்நிலையில், திட்டங்களை நிறுத்தி, முதலீட்டாளர்களுக்கு அவர்களது தொகையை திருப்பி தருவது சிறந்தது என நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று அதன் தலைவர் சஞ்சய் சாப்ரே கூறினார்.  இதனால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பாதிப்படைந்தனர். இந்நிலையில், மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வகை செய்வதற்காக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி கடன் வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.  இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.  இதனால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முடங்காமல் தொடர்ந்து இயங்க வழிவகை செய்யப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து