முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு ரயில்களில் பயணம் செய்த 24 கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்தது

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்களில் குடும்பத்தோடு பயணம் செய்த கர்ப்பிணி பெண்கள் 24 பேர் ரயில்களில் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

 

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நள்ளிரவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் வெளி மாநிலங்களில் தங்கியிருந்து பணியாற்றி வந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த அவர்கள் தற்போது சிறப்பு ரயில்கள் மூலமாக தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இப்படி பல்வேறு மாநிலங்களில் தங்கியிருந்து குடும்பத்தோடு பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் சிறப்பு ரயில்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். இப்படி சிறப்பு ரயிலில் குடும்பத்தோடு பயணம் செய்த கர்ப்பிணி பெண்கள் 24 பேர் ரயில்களிலேயே குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். பஞ்சாப்பில் இருந்து சிறப்பு ரயிலில் சத்தீஸ்கருக்கு சென்ற பெண் ஒருவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதே போன்று அகமதாபாத்தில் வேறு ஒரு சிறப்பு ரயிலில் மதுகுமாரி என்ற 27 வயது பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.இப்படி ரயில்களில் குழந்தையை பெற்றெடுக்க கர்ப்பிணி பெண்களுக்கு ரயிலில் பயணித்த மற்ற பெண்கள் உதவிகளை செய்துள்ளனர். கடந்த மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மட்டும் 16 குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தையை பெற்றெடுத்த பெண்களுக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன.

ஓடும் ரெயிலில் தந்தையான கர்ப்பிணி பெண்களின் கணவன்மார்களும் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சொந்த ஊருக்கு சென்ற பிறகே குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் இருந்ததாகவும், ஆனால் ரயிலில் நல்லபடியாக குழந்தை பிறந்து விட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து