முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்விக்கடனுக்கான 3 மாத வட்டியை அரசு செலுத்தும்: அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார்

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

சண்டிகர்: கல்வியை முடித்தவர்கள் வங்கிகளில் வாங்கிய கல்விக் கடனுக்கான 3 மாத வட்டியை மாநில அரசு செலுத்தும். அதேபோல, கடந்த ஆண்டு கல்வியை முடித்து கரோனா வைரஸ் பாதிப்பால் இன்னும் வேலை கிடைக்காத அல்லது தொழில் தொடங்க முடியாத நிலையில் உள்ளவர்களின் கல்வி கடனுக்கான 3 மாத வட்டியையும் அரசு செலுத்தும். இதன் மூலம் 36 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அரியானா மாநில மக்களுக்கு முதல்வர் மனோகர்லால் கட்டார் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கொரோனா வைரஸால் மாநிலத்தின் நிதி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. பொருளாதார பாதிப்பு காரணமாக ஒருவர்கூட உணவு இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக மாநில அரசு ரூ.636 கோடி ரூபாய் அளவுக்கு கடந்த 3 மாதங்களாக மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது.

இந்த ஆண்டு கல்வியை முடித்தவர்கள் வங்கிகளில் வாங்கிய கல்விக் கடனுக்கான 3 மாத வட்டியை மாநில அரசு செலுத்தும். அதேபோல, கடந்த ஆண்டு கல்வியை முடித்து கரோனா வைரஸ் பாதிப்பால் இன்னும் வேலை கிடைக்காத அல்லது தொழில் தொடங்க முடியாத நிலையில் உள்ளவர்களின் கல்வி கடனுக்கான 3 மாத வட்டியையும் அரசு செலுத்தும். இதன் மூலம் 36 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக, மாநில அரசுக்கு ரூ.40 கோடி செலவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து